Saturday, August 20, 2011

சங்கதிகள்: 20 -ஆகஸ்ட்- 2011


எழுத்தாளர்கள்

வா.மு.கோ.முவிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. பத்து பதினைந்து நிமிடங்கள் பேசி இருப்போம் சிரித்து சிரித்து வயறு வலி வந்துவிட்டது. ஒரு எழுத்தாளன் என்கிற மிதப்பு எதுவும் இல்லை. நெருங்கிய நண்பனிடம் பேசியதை போல பேசிக்கொண்டு இருந்தார், சாரை மாறியாக ஜோக் வந்துகொண்டு இருந்தது. தற்போதைய நிலைமையை கூட வெகு இயல்பாக ஒளிவு மறைவு இல்லாமல் பகிர்ந்து கொண்டார். நான் கள்ளியை வெகுவாக ரசித்ததையும் அதே அளவு  சாந்தாமணியை வெறுப்பதாகவும் சொன்னேன். சாந்தாமணி நாவலை பற்றி அவரது எண்ணத்தையும் அந்த புத்தகம் எதற்காக எழுதியது என்றும் விளக்கினார். ஆனந்த விகடனுக்கும்  உயிர்மைக்கு எப்படி சிறுகதை  எழுதணும் என்று சொன்னாரே அந்த நிமிடத்தில் நான் சிரித்த சிரிப்புக்கு ஆபீஸ் இருந்தவர்கள் என்னை ஒரு மாதரியாக பார்த்தார்கள். வருட இறுதியில் அவரது இரண்டு நாவல்கள் உயிர்மை வெளியிட இருப்பதாக சொன்னார் அது எவ்வளவு தூரம் உண்மையோ தெரியவில்லை. 

இதற்கு பிள்ளையார்சுழி போட்ட மயில்ராவணன்னுக்கு நன்றி :)

வா.மு.கோ.முவிடம் ஷாராஜ் நம்பர் பெற்று அடுத்த நாள் அவரிடம் பேசினேன். இவரும் ரொம்ப இயல்பாகவே பேசினார், 2004ஆம் ஆண்டு வெளிவந்த இந்த தொகுப்பை பற்றி இப்போது பேசியதில் ரொம்ப மகிழ்ச்சி அடைந்தார். தற்சமயம் ஓவியத்தில் மட்டுமே கவனத்தை நிலைநிறுத்து கொண்டுள்ளதால் சிறுகதைகள் அவ்வளவாக எழுதுவதில்லை என்றார். இந்த வருட கடைசியில் அவரது ஓவியங்கள் கோவையில் கண்காட்சி வைக்க உள்ளதாகவும் அடுத்த வருடம் தொடக்கத்தில் சென்னையில் அவரது கண்காட்சி வைக்க எண்ணியுள்ளதாக சொன்னார்.  அவரின் வேறு ஒரு தொகுப்பு இந்த வருடம் வரலாம் என்று சொல்லி இருக்கிறார்.
 
வெட்டுபுலி நாவல் பற்றிய கலந்துரையாடலுக்கு சென்றதில் புத்தகத்தின் ஆசிரியர் வாராதது கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. கலந்துரையாடலில் பேசியவர்கள் அவர் அவர்கள் பார்வையில் புத்தகத்தை பற்றி பேசினார்கள் குறிப்புக்கள் இல்லாமல் நாவலை பற்றி பேச முடியாது என்று பேசியவர்களுக்கு தெரிந்து இருந்தது,  அண்ணன் அப்துல்லா அவர்கள் நிகழ்ச்சி நிரலில் இல்லையென்றாலும் கடைசியில் பேசினார். அன்று இரவு தமிழ்மகன் அவர்களிடம் முகபுத்தகத்தில் பேசிக்கொண்டு இருந்த போது நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாத அளவு தனக்கு வேலைபளு இருந்ததாகவும் வராததுக்கு வருந்தினார். தனது அடுத்த நாவலான ஆண்பால் , பெண்பால் பற்றி கொஞ்சம் சொன்னார். அவரின் போன் நம்பர் வாங்கி வைத்துள்ளேன் பேசவேண்டும். 

விடை தெரியா கேள்விகள்  
 
 இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னை பீச் ஸ்டேஷனில் இருந்து ஆபீஸ்க்கு செல்ல மின்சார ரயிலில் ஏற சென்றேன். எனக்கு முன்னால் ஒருவர் இடது கையில் ஒரு வருடம் கூட ஆகாது ஒரு குழந்தையும்  வலது கையில் ஒரு ட்ராவல் பேக்  தூக்கி சென்றார். ரயிலில் ஏற இருந்த அவசரத்தில் அவரை சரியாக பார்க்கவில்லை, அவரை கடந்து செல்லும் போது வேறு ஒருவர் அந்த நபரை ரயிலின்  உள்ளே செல்ல உதவி செய்தார், அப்பொழுதுதான் தெரிந்தது  அவருக்கு பார்வையில்லை என்று.  ஏதோ மனதுக்குள் உறுத்தி கொண்டு இருந்தது, அவர் எங்கே போகிறார்?? ஊருக்கா அல்லது சென்னையிலே இருக்கும் அவர் வீட்டுக்கா?? எங்கு இருந்து வருகிறார் ?? அந்த குழந்தையை எப்படி அழைத்து வந்தார்? உடன் குழந்தையின் அம்மா இல்லையே குழந்தை அழுதால் என்ன செய்வார்?? அந்த குழந்தையை படிக்க வைக்க என்ன செய்வார் ?? இப்படி எத்தனையோ கேள்விகள் வந்து கொண்டே இருந்தது அடுத்த நிறுத்தம் வரைக்கும். கோட்டை நிறுத்தத்தில் ஒரு ஹிந்திகாரர்  நான் இருந்த பெட்டியில் ஏறினார், நான்கு நாட்கள் சாப்பிடாதவன் போல ஆள் பார்ப்பதற்கே ரொம்ப நொந்து போயிருந்தார். சென்ட்ரல் வந்தால் சொல்லுங்கள் நான் ஒரிசா போகவேண்டும் என்றார், சாப்பிட ஏதாவது இருக்குமா என்றார் பர்சில் இருந்தது இருபது ருபாய் பத்து ரூபாயை அவரிடம் கொடுத்தேன். இப்போது  நானும் அவரும் பொருளாதார ரீதியில் ஒன்றாக இருந்தோம், பூங்கா நிலையத்தில் அவர் இறங்குவதற்குள் என்னுள் அடுத்த கேள்விகள் வர ஆரமித்துவிட்டது. பத்து ரூபாயை வைத்து கொண்டு எப்படி அவர் ஒரிசா போக போகிறார்?? அதுவரை பசிக்காத அவருக்கு?? ட்ரெயின் டிக்கெட் எடுப்பார??   என்கிற கேள்விகள் வந்து கொண்டு இருந்தது. பூங்கா நிறுத்தத்தில் அவர் இறங்கும் போது எனக்கு ஒரு சலாம் வைத்து விட்டு சென்றார். ஐந்து நிமிடத்தில் இரண்டு நபர்கள் என்னுள் எழுப்பிய கேள்விகள் எத்தனை எத்தனை !!! விடைகள் தான் கிடைக்கவில்லை. 



அன்னா ஹசாரே

சும்மா இருக்கிற சங்கை ஊதி கெடுத்தான் என்கிற பழமொழிக்கு ஏற்ற ஆள் யோகா மாஸ்டர் ராம்தேவ், அதே போல இப்போ அன்னா ஹசாரே. அவரை சுற்றியே இங்கிலீஷ் சேனல் எல்லாம் மொய்த்து கொண்டு இருந்தது, திகார் ஜெயிலின் வாசலிலே பழியாக கிடந்த அந்த சேனல் கேமராவை பார்த்து பார்த்து  டென்ஷன் ஆனது தான் மிச்சம். நாடு முழுவதும் லாரி ஸ்ட்ரைக் சொன்னாங்களே அதை பற்றி  ஏதாவது தெரிஞ்சிக்கலாம்ன்னு நானும் IBN, Timesnow, NDTV, Headlines சேனல் மாத்தி மாத்தி பார்க்கிறேன் அன்னா பற்றிய நியூஸ் தானே இருக்கு ஒழிய வேற ஒண்ணுத்தையும் காணோம். நல்ல வேலை சன், ராஜ், ஜெயா, கலைஞர் சேனல் எல்லாம் இதுக்கு அவ்வளவா முக்கியத்துவம் தராம முக்கிய செய்தியுடனே முடிச்சிகிட்டாங்க. கலைஞர் கைது போதோ இல்லைனா ஜெயலலிதா கைது போதோ நமக்கு கண்டிப்பா தமிழ் சேனலில் இந்த சோதனை வரும்.


பத்திரிக்கை

இந்த வாரத்து ஆனந்த விகடனுடன் சுகாவின் முங்கில் முச்சு பகுதி நிறைவு பெற்றது. தொடர் ஆரமித்தது முதல் ஒவ்வொரு வாரமும் முதலில் படிப்பது இவரின் கட்டுரையை தான்.  தனது வாழ்வில் நடந்த சம்பவங்களை  கோர்த்தது  தான் இந்த தொடர் என்றாலும், சுகாவை விட குஞ்சு தான் இந்த தொடரின் நாயகன்.  குஞ்சுவை கடைசி வரை காட்டாமல் மறைத்துவிட்டது பெரும் ஏமாற்றமாக இருக்கிறது. சுகாவை பிரிகிறோம் என்று நினைக்கும் போது அவரை போல இப்போது ராஜுமுருகன் என்கிறவர் சில பக்கங்களை நிரப்ப ஆரமித்துள்ளார். சுகாவை போலவே சுவாரசியமாக எழுதுகிறார், அனஸ்தீஸ்யா குடுக்க பெற்ற பெண்களின் நிலைமையை சொல்லி பெண்கள் எப்படி எப்போதெல்லாம் ஆண்களை வசைபாடுவார்கள் என்று சில சம்பவங்களை முன்னிறுத்தியது நன்றாகவும் கொஞ்சம் கிலியையும் கிளப்பிவிட்டுவிட்டார். முடியும் தருவாயில் வரும் (போட்டு வாங்குவோம்) அடுத்த தொடக்கத்துக்கு ஏற்ற முடிவு.


குமுதம் புத்தகம் வாங்கினேன், ஏதோ சுயமுன்னேற்ற புத்தகத்தை வாங்கியது போல ஒரு பீலிங், பீச் ஸ்டேஷனில் படிக்க ஆரமித்து சேத்துபட்டில் முடிந்து விட்டது.. 10 நிமிடங்களுக்கு மேல் எப்படி புரட்டினாலும் பப்பரப்பேஎஎ எ எ எ எ எ எ தான் ..  


திருவொற்றியூர் காமெடிகள் 

திருவொற்றியூர் பகுதியில் திடிர் திடிர் என்று சில போஸ்டர்கள் கண்ணில் பட்டு சிரிப்பை வரவழைக்கும், கொஞ்ச நாட்களாக தேமுதிக ஆட்கள் அதை குத்தகைக்கு எடுத்கிட்டாங்க.  தலைவர் விசயகாந்துக்கு இந்த மாதம் 25 ஆம் தேதி பிறந்தநாள் வருது அதுக்காக ஆகஸ்ட் ஒண்ணாம் தேதில இருந்து எங்க பார்த்தாலும் விசயகாந்த்தை  வாழ்த்தி நிறைய டிஜிட்டல் போர்டுகள். பலமாக காத்து அடிச்சா கண்டிப்பா அதுக்கு பக்கத்துல இருக்கிறவன் மண்டையை பதம் பார்க்காமவிடாது. வள்ளலே, நல்லவரே, வல்லவரே,, அந்த வரே இந்த வரேன்னு உடன்பிறப்புகளையும், ரத்தத்தின் ரத்தத்தையும் ஓவர்டேக் பண்ணி வாழ்த்தோ வாழ்த்துன்னு வாழ்த்தி இருக்காங்க.. இதுக்கெல்லாம் நாங்க அசரமாடோம்ன்னு ஒரு ரத்தத்தின் ரத்தம் முதல்வரை போற்றி அடிச்ச   போஸ்டர்ல கொட்டை எழுத்தில் பிரிண்ட் பண்ணி இருந்துச்சு எங்கள் நாடி துடிப்பே.     
 
வடசென்னை பகுதி என்றாலே ஷேர் ஆட்டோகளுக்கு தனியா ஒரு பாதையை உருவாகணும் போல. எங்க எல்லாம் டிராபிக் ஆகுதோம் அதுக்கு முக்கால் வாசி காரணம் ஷேர் ஆட்டோவாகத்தான் இருக்கும். போன வாரத்தில் ஒரு நாள் சாயந்திரம் தேரடியை தாண்டி செல்ல பதினைந்து நிமிடங்கள் ஆனது. தேரடியில் இருந்து திருவொற்றியூர் மார்க்கெட் வரை நீண்ட வருசையில் எல்லா வானகனங்களும் காத்து கொண்டு இருப்பது வாடிக்கை ஆகிவிட்டது. இந்த பகுதியில் இருக்கும் சில ஆக்கிரமிப்புகளை அகற்றமுடியாமல் நகராட்சி திணறி கொண்டு இருக்கிறது. எப்போதுதான் விடிவுகாலம் பிறக்குமோ இந்த தொல்லைகளுக்கெல்லாம். 


 
பாடல் 

ஏதோ ஒரு பத்திரிகைல பவதாரணி குடுத்த பேட்டியில் தனது குடும்பத்தார் இசையில் மட்டுமே பாடுவேன் என்றார், சமிபகாலமாக அவரின் குரலை அதிகமாக  கேட்டதாக நியாபகமில்லை. கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை படத்தின் பாடல்கள் கேட்கும் போது  இது பவதாரணி குரல் தானே ஆச்சரியம்.. உசர திருடி போறா ஒருத்தி  என்று துடங்கும் அந்த பாடல் நன்றாக இருக்கிறது. 








வேலைவாய்பு செய்திகள் 


Development
- .Net (2-13 Yrs)
- Java (2- 6 Yrs)

Quality Assurance

- Manual Testing (4-8 Yrs)
- Automation Testing (3-5 Yrs)
- Silk Testing specialists (2-5 Yrs)
- QA Manager

Product Management
- Product Manager -
Datawarehousing

Others

-SQL DBA (5-12 Yrs)
-System Admin (5-8 Yrs)
-DB2 Database Development & Admin(2-5 Yrs)



ரெஸ்யூம்   அனுப்ப வேண்டிய முகவரி : romeoboy.81@gmail.com




--
With Love
அருண் மொழித்தேவன் (Romeo) ;)



4 comments:

  1. சங்கதிகள் ஒவ்வொன்றும் சுவாரஸ்யம் ரோமி..

    ReplyDelete
  2. எல்லா சங்கதியும் இனிய சங்கதியாக இருக்கிறது..!

    சூப்பர்!

    ReplyDelete
  3. அவியல் - செய்திகளுடன் நல்ல பதிவுங்க.

    ReplyDelete
  4. //பப்பரப்பேஎஎ எ எ எ எ எ எ தான் .. //

    ten years before we said this same word!

    ReplyDelete