Saturday, May 14, 2011

சங்கதிகள் - மே 14 2011

அரசியல்


ஐயா ஆட்சி முடிந்து அம்மா ஆட்சி வந்துவிட்டது. ஆதிமுக ஆட்களே கண்டிப்பாக இவ்வளவு இடங்களை ஜெயிப்பார்கள் என்று நினைத்திருக்க மாட்டார்கள், மக்களின் இந்த மாற்றத்தை நினைக்கையில் கொஞ்சம் பிரம்மிப்பாக இருக்கிறது.மின்வெட்டு தான் முக்கிய பிரச்சனையான தென்மாவட்டம் முழுக்க சொல்லப்படுகிறது. மின்வெட்டு ஆதிமுக ஆட்சி காலத்தில் இருந்து ஆரமித்தது என்றாலும் திமுக ஆட்சியில் அதை சரி செய்ய நிறைய திட்டங்களை கொண்டு வந்தார்கள். ஆனால் அவை எல்லாம் 2012   ஆண்டுதான் செயல்பட போக போகிறது. அவ்வாறு செயல்படும் போது தமிழக மக்களுக்கு தங்கு தடையில்லாமல் மின்சாரம் வழங்கபடும். இதையே அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு ஆதிமுக தங்கள் ஆட்சியில் தான் மின்வெட்டு இல்லை என்று ஒரு சாதனையாக சொல்லிகொள்ளும். அதாவது வெண்ணை தின்னுறவன் ஒருத்தன் விரல் சுப்புறவன் ஒருத்தன் :). ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக தோற்றத்தை விட ஆதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி ஜெயித்ததை தான் நம்பவே முடியவில்லை.



கொஞ்ச நாளாகவே டல் அடித்து கொண்டு இருந்து அண்ணன் பிசினஸ் நேற்றில் இருந்து சூடு பிடிக்க ஆரமித்துள்ளது. அம்மா தாயே என்கிற வசனங்களை தாங்கிய டிஜிட்டல் பேனர் அடிக்க நிறைய ஆர்டர் வந்துள்ளதாம் .



சுயபுராணம்

Google Buzzல கொஞ்ச நாள் டிராவல் பண்ணியதில் நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். ஒரு கேள்வி அல்லது நமது எண்ணத்தை சொல்லிவிட்டால் அதற்கு உடனுக்குடன் மற்றவகளிடம் இருந்து பதில் கிடைத்து விடுகிறது. அரட்டை அடிக்க ரொம்ப வசதியாக இருக்கிறது அதனாலயோ என்னவோ அதில் என்னை அறியாமலே அடிக்ட் ஆகிவிட்டேன் :(. ஆபீஸ் வந்தால் மெயில் செக் பண்றேனோ இல்லையோ Buzz அப்டேட் பார்த்து கொண்டே இருக்கிறேன். கொஞ்ச நாள் நன்றாக தான் இருந்தது ஏதோ ஒரு யோசனையில் மேனேஜருக்கு அனுப்ப வேண்டிய மெயில் காபி பண்ணி Buzzல பேஸ்ட் பண்ண போயிட்டேன். அடங்கொன்னியா அப்போ தான் மண்டையில உரைச்சுது, வேலை பார்க்கிறதே கொஞ்ச நேரம் தான் அதையும் உருப்படியா பண்ணாம இப்படி இருக்கிறது நினைச்சா வருத்தமா இருக்கு. அதனால கொஞ்ச நாள் அடக்கியே வாசிக்கலாம் என்று முடிவு பண்ணிட்டேன்..  



சென்னையில் அடிக்கும் வெயிலை சமாளிக்கவே முடியல. அதும் நைட் ஷிபிட் போயிட்டு வந்தா பகலில் தூங்கவே முடியல. ஜூனியர் பகலில் ஒரு மணி நேரம் தூங்குறதே பெரிய விஷயமா ஆகிடுச்சு. நான் தான் இந்த மாதிரி புலம்புறேன்னு பார்த்தா எனக்கு மேல இருக்கான் என்னோட நண்பன். அவனுக்கு மார்க்கெட்டிங் வேலை காலைல ஆபீஸ் போனா கொஞ்ச நேரமே அங்கு இருக்க முடியுதாம். மேனேஜர் வந்த உடன் அவரிடம் பேசிவிட்டு உடனே அங்கு இருந்து கிளம்பவேண்டியது தான். வெயிலில் ரொம்ப அவஸ்தைப்படுவதாக சொல்லி வருத்தப்பட்டான். ரெண்டு நாளைக்கு முன்னால போன் பண்ணினான், வெயிலின் கொடுமையில் இருந்து காக்க ஒரு வாரம் ஆபீஸ்க்கு லீவ் போட்டுட்டு கொடைக்கானல் போயிட்டான்  அங்க அவன் மாமா வீடு இருக்காம், வெயிலில் இருந்து எஸ்கேப் ஆனதும் ஆச்சு மாமா மகளை சைட் அடிச்சதும் ஆச்சாம்...  நல்லா இரு மச்சி ..



படம்



கோ படம் பார்த்தேன், நல்ல ஒரு பொலிடிக்கல் த்ரில்லர், கே.வி.ஆனந்ததின் முந்தைய படமான அயன் படம் போலவே இருக்கு. லாஜிக் இல்லாமல் படம் பாக்கலாம்.



தெலுங்கில் வேதம் படத்தை ஏற்கனவே பார்த்ததால் தமிழ் வானம் படம் எனக்கு அவ்வளவாக ஈர்க்கவில்லை. மற்றபடி வானம் படத்தை முதல் முதலாக பார்ப்பவர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.  நோ மணி பாட்டில் சிம்புவும் அனுஷ்காவும் செம ஆட்டம் போட்டு இருக்காங்க. ரொம்பவே அந்த டான்ஸ் ரசிச்சேன்.










வாழ்த்துக்கள் 


பதிவர் ரகுராம் அவர்களுக்கு நாளைக்கு திருமணம், தம்பதிகள் அம்மா கொடுக்கும் இலவசங்களை கொண்டு அன்போடு வாழ வாழ்த்துகிறேன்.

பதிவர் பெஸ்கி அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்து இருக்கிறது. அவருக்கு  வாழ்த்துக்கள் .

பெண் பஸ்ஸர் ஒருவருக்கு அடுத்த வாரம் கல்யாணம். அவருக்கும் வாழ்த்துக்கள்.


பிடித்த பாடல்


யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளிவந்து இருக்கும் அவன் இவன் படத்தில் இடம் பெற்று இருக்கும் ஒரு மலையோரம் நன்றாக இருக்கிறது. அதும் அந்த குட்டி பெண் டூயட் பாடியதை கேட்டுகொண்டே இருக்கலாம் போல. அவ்வளவு அருமையா இருக்கு..




காதல் டு கல்யாணம் படத்தில் இடம் பெற்று இருக்கும் தேடி வருவேன் அட்டகாசமான ராக்.. அதும் எலெக்ட்ரிக் கிட்டார் வைத்து செம ஆட்டம் போட்டு இருக்கார் யுவன்.





ட்ரைலர்



 Bandi Saroj kumar போர்க்களம் படம் முலம் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தார். அந்த படத்தின் கன்செப்ட், ஷாட் எல்லாம் செம கிளாஸா இருக்கும். முக்கியமா கருப்பு கலரை அதிகமா யூஸ் பண்ணி இருப்பார். அவரின் அடுத்த படைப்பான அஸ்தமனம் படத்தில் ட்ரைலர் பார்த்ததும் கொஞ்சம் அல்ல நிறையவே எதிர்பார்ப்பு கிளம்பி இருக்கு. இதிலும் விதவிதமான ஷாட் அப்பறம் கருப்பு கலர்.. படம் கண்டிப்பா வித்தியாசமாக இருக்கும் என்று நம்புவோம்.








பிடித்த கவிதை

சௌந்தர் அவர்களின் பஸ்ஸில் பார்த்த இந்த கவிதை நன்றாக இருக்கிறது. இங்கேயும் நான் ஏன் பிளாஷ்பேக் கிளப்பணும் கவிதை படித்து பாருங்கள் நீங்கள் கூட ஒரு பிளாஷ்பேக் ஓட்டலாம்.


வழியோராம் உனைப் பார்த்து..
என் விழியோரம் உனைத் தேக்கி...
மீண்டும் மீண்டும் செல்கிறேன்...
உனை சந்தித்த தெரு முனைக்கு...
நீ இல்லாமல் போனாலும்...
காதாலால் எனை நிரப்ப...






--
With Love
Romeo ;)












3 comments:

  1. அஸ்தமனம் /// சேம் பீலிங் மச்சி....

    ReplyDelete
  2. //வேலை பார்க்கிறதே கொஞ்ச நேரம் தான் அதையும் உருப்படியா பண்ணாம இப்படி இருக்கிறது நினைச்சா வருத்தமா இருக்கு. அதனால கொஞ்ச நாள் அடக்கியே வாசிக்கலாம் என்று முடிவு பண்ணிட்டேன்.. //
    hehe.

    ReplyDelete