Friday, February 15, 2013

கூகுள் கூட்டல்

இப்போதெல்லாம் ப்ளாகில் எழுதுவதில்லை, காரணம் ஒன்றும் அதிகமில்லை சோம்பேறி தனம் தான். ஆனால் கூகுள்+ சிலும் , Facebook பகுதியில் சின்ன சின்னதாக அதிகமாக எழுதி கொண்டு தான் இருக்கிறேன். சிலவற்றை இங்கே தொகுத்து வைக்கலாம் என்று ஏற்கனவே ஒரு பதிவை தேத்தி இருக்கிறேன், இனி அதை போலவே அங்கே பகிர்ந்தது சிலவற்றை இங்கேயும் பதிவு செய்யலாம் என்றிருக்கிறேன். 

         ____________________________________________________________________

இட ஒதுக்கீடு பற்றி பேச்சு வரும்போதெல்லாம் நான் அமைதியாகிவிடுவதுண்டு..  நான் படிக்காதவன்,, எந்த அரசு வேலைகளுக்கும்  முயற்சி செய்யாதவன், இவ்வளவு ஏங்க இன்னும் ரேஷன் கார்டே வாங்காதவன் என்பதால் எந்த பக்கம் சாய்வது என்று தெரியவில்லை.

ஆனா என்னிடம் ஜாதி சான்றிதல் இருக்கிறது. எனக்கு இது வரை அது  உபயோகப்படவே  இல்லை நாளை எனது சந்ததிக்கு வேண்டுமென்றாலும் உபயோகப்படும் இல்லை படாமலும் போகலாம்.  ஜாதி முக்கியம் அமைச்சரே என்றால் அதை வைத்து படிப்பு, வேலை சமுதாய அந்தஸ்துக்கு மட்டுமே உபயோகமாக இருக்கும். தனி மனித ஒழுக்கத்துக்கு எல்லாம் சரிவராது.
 13, Feb 2013

ரிஸானா என்கிற பெண்ணிற்கு அளிக்கப்பட்ட மரண தண்டணையை Facebook பக்கத்தில் கண்டேன். வெள்ளை உடை உடுத்திய அரபு ஷேக் ஒருவன் அவள் தலையை ஒரே வீச்சில் கீழே விழ செய்தான். ரிஸானா உடுத்தி இருந்ததும் வெள்ளை உடை, அவள் கண்கள் கட்டப்பட்டு இருந்ததும் வெள்ளை உடை தான்.. தயவு செய்து இனி யாரும் வெள்ளை நிறம் என்பது சமாதானத்துக்கானது என்று சொல்லாதீர்கள். கொலைக்கும் குற்றத்துக்கும் தண்டனைக்கும் கூட அவை உபயோகபடுத்தபடலாம்.

11,Feb 2013

நினைவுறுத்துபவரின் பெண்   (The Memory Keeper's Daughter)
கிம்  எட்வர்ட்ஸ்
தமிழில் - தருமி

வலசை  புத்தகத்தை எடுத்தும் சும்மா புரட்டினேன் கண்ணில் கருப்பு வெள்ளையில் இந்த பெண்மணி புகைப்படத்தை பார்த்ததும் படிக்க துண்டியது (காரணம் எதுவாக இருக்கும் என்று சரியாக தெரியவில்லை).. மூல நூலில் இருந்து இரண்டு முக்கியமான பகுதிகளை மொழிபெயர்த்து இருக்கிறார்கள்.. Down Syndrome என்கிற நோயால் பாதிப்புள்ளாகும் பீப் நினைத்து கண்கள் கலங்குகிறது. தனது மகள் உயிரோடு இருப்பதை கரோலின் நோராவிடம் சொல்லிய பிறகு அவள் மனநிலை   எப்படி இருக்கும். அவள் பீப்பை ஏற்று கொள்வாளா !!! அப்படி ஏற்று கொண்டாலும் 13 வருடங்களாக அம்மாவாக இருந்து அவளை கண்ணும் கருத்துமாக காப்பாற்றி கொண்டு இருந்த கரோலினை  விட்டு பீப் எப்படி  நோராவை ஏற்று கொள்வாள் !!!...  எவ்வளவு கேள்விகள் உணர்ச்சி போராட்டங்கள்..  Seriously You guys made my day to think about this child :)

10, Feb 2013

கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஸ்கூலில் இருந்து வந்தவன் JCB போடுன்னு சிஸ்டம் முன்னாடி உட்கார்ந்து பார்த்துட்டு இருந்தான். ஒரு கஸ்டமர் எதோ சந்தேகம் கேட்க நான் அதை பார்க்க போயிட்டேன். திரும்ப வந்தா தலைவரு அப்படியே தூங்கிட்டு இருக்கான் :)))..

08, Feb 2013

இன்று காலை குளித்து முடித்து சாமி கும்பிட்டு நெற்றியில் திருநீரை பூசி கொண்டு ஹாலில் திருக்குர்ஆன் வாசித்து கொண்டு இருந்தேன். ஏதோ சொல்லவேண்டி எனது ஹவுஸ் ஓனர் வந்தவர் வாசலில் இருந்தபடியே  என்னையும் கையில் இருந்த புத்தகத்தையும் பார்த்தவர் குழப்பத்துடன் திரும்பி சென்றுவிட்டார் :))))... காலையில் ஏற்பட்ட குழப்பத்தை தீர்க்க நைட் எப்படியும் வாசலிலே வழி மறித்தாலும் மறிப்பார் :))

07, Feb 2013

மெரினா பீச்சில் பதிவர் சந்திப்பு, முதல் முறையாக அன்று தான் டோண்டு ராகவன் சாரை பார்க்கிறேன். அவ்வளவு இயல்பாக பேசி கொண்டு இருந்தார். அவரின் பதிவுகளில் தலைக்கு மேலே தூக்கி பிடிக்கும் இந்துத்துவாவை வெறுத்தாலும் அவர் எழுத்துகளுக்கு நானும் அடிமை. வாங்கோ அப்படியே சமுத்திரத்தில் கால் நனைச்சிட்டு போகலாம் என்றார். இல்ல சார் நான் ஆபீஸ் போகணும் டிரஸ் எல்லாம் நனைஞ்சிடும்.. ஓகே நோ ப்ராபளம்.. இங்கேயே நில்லுங்கோ வந்துடுறேன். திரும்பி வந்தவர் தனது மொழிமாற்று வேலையை பற்றி நிறைய பேசினார். அவர் வயது என்ன எனது வயது என்ன!!!  ஹ்ம்ம் அதை எல்லாம் அவர் கண்டுக்கவே இல்ல.. சிகரெட் பிடிக்காதீங்க கேன்சர் வந்துடும் அட்வைசை பண்ணின்னார். அவருக்கு முதலில் கேன்சர் என்கிற செய்தியை கேட்டு திடுக்கிட்டேன். கேன்சருக்கு எடுத்து கொண்ட சிகிச்சைக்கு பிறகு  தலையில் முளைத்த முடியை கூட சுவாரசியமா எழுதி இருந்தார்.

We Miss you சார் :(...
06, Feb 2013

சார் நாங்க ஹைதராபாத்ல இருந்து பேசுறோம் (தமிழ் மொத்தமும் ஒடஞ்சி  போயிந்தி)

சொல்லுங்க

எங்க ஜூவல்லரில இருந்து குலுக்கல் முறையில் 50 பேரு தேர்ந்தெடுத்து அவங்களுக்கு ஒரிஜினல் ஹைதராபாத் முத்து அனுப்புறோம். நீங்க 50 பேர்ல ஒருத்தர்.. உங்க அட்ரஸ் கொடுங்க போஸ்டல் சார்ஜ் 950 மட்டும் கட்டினா போதும்..

ஹைதராபாத் என்ன வெளிநாட்டுலயா இருக்கு.. இல்ல நீ அனுப்புற பார்சல் வெயிட் என்ன 10 கிலோவா 950 ரூவா கேக்குற !!

அது வந்து சார்...

@#@!*&^$போன் வைடா..
 
05, Feb 2013
 
கடுப்பேத்துவது என்றால் என்ன !!!


எப்போதும் எனது டேபளில் இரண்டோ மூன்றோ புத்தங்களை வைத்து இருப்பேன். இந்த புத்தகங்களை பார்த்து புத்தக நண்பர்களானவர்கள் சில பேர். நேற்று  ஒரு கஸ்டமர் நான் படிக்கும் புத்தங்களை பற்றி பேசி

எவ்வளவு புத்தகம் வாங்குவீங்க

வருஷத்துக்கு ஐந்து ஆயிரம் ருபாய் அளவுக்கு வாங்குவேன் என்றேன்.

அவ்வளவு தானா எனக்கு எப்படியும் பத்து ஆகிடும் !!!..

திகைத்துவிட்டேன் வீட்டில் ரெண்டு பீரோ அளவுக்கு புத்தகம் இருக்கிறது என்றார். பெரிய படிப்ஸ் போல இருக்காரே என்றது மனம்.

என்ன மாதிரியான புத்தகம் படிப்பீங்க..

shidney sheldon அப்பறம் சில ஆங்கில பெயர்களை சொன்னார் (எழவு அவங்களை எல்லாம் படிச்சி இருந்தாதானே பெயரை நினைப்பில் வச்சி இருக்க முடியும்).

அப்பறம் வேற என்ன புத்தகம் படிப்பீங்க..

பொன்னியின் செல்வன் படிப்பேன் , அப்பறம் கண்ணதாசன் பதிப்பகம் shidney sheldon அப்பறம் இன்ன பிற ஆங்கில எழுத்தாளர்களின் புத்தகங்களை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு இருக்காங்க அந்த புத்தகம் !!! (அது தான் ஆங்கிலத்தில் படிச்சாச்சே !!!)

அப்பறம் சார் நிறைய இருக்கு

சார் .. கோபல்ல கிராமம், கோபல்ல மக்கள் புத்தகம் படிச்சி இருக்கீங்களா..

இல்ல அது யாரு எழுதியது .

கி.ரா ..

கி.ராவா  யாரு அது ??? ..

 ( டைம் ஆச்சு கடையை சாத்தலாம் - மைண்ட் வாய்ஸ் )  அவரும் ஒரு எழுத்தாளர்தான்

படிச்சி இருக்கலாம் சார் !!!

சரி நீங்க நீயா நானா கோபி எழுதிய புத்தகம் படிச்சி இருக்கீங்களா !!!

(ஓ நீங்க அந்த மாதிரியான படிப்பாளியா !!!!) இல்ல சார் என்னோட நண்பர் கோபி எழுதியதை தான் அடிகடி படிக்க வேண்டி வருகிறது..

நீங்க அவருக்கு நண்பரா

யாருக்கு

நீயா நானா கோபிக்கு

(சத்தியமா இந்த இடத்தில சிரிச்சிட்டேன்) இல்ல சார் இது வேற கோபி .. சரி நீங்க அந்த சிஸ்டம் எடுத்துகோங்க. (தப்பிச்சேன்)..

வெளியே போகும் போது நாடோடி தடம் புத்தகத்தை பார்த்து.

இது என்ன மாதிரியான நாவல்.

இது நாவல் இல்ல சார் கட்டுரை தொகுப்பு

தமிழருவி மணியன் கட்டுரை தொகுப்பு எல்லாம் நான் படிச்சி இருக்கேன் . புத்தகமும் இருக்கு அடுத்த தடவை வரும் போது எடுத்துட்டு வரேன்.

ரொம்ப நன்றி சார் ( நாளைக்கே கடையை இழுத்து சாத்திடணும், இல்லைனா என்னையும் கோபி புத்தகத்தை படிக்க வச்சிடுவாரு) :))
 
05, Feb 2013
 
காலைல பையனை எழுப்புறதுக்கே தலைகீழா நிக்க வேண்டி இருக்கு, இதுல அவனை குளிப்பாட்டி ரெண்டு வாயி சாப்பிடவச்சி ஸ்கூல் போகுறதுக்குள்ள பெரும் போராட்டம் தான் போங்க.

 7.30 - 8 வரை ஒளிபரப்பாகும் Thomas the train படுத்துட்டே பார்க்கிறது.
 8 - 9 மணிக்குள்ள  தான் ப்ரஷ் பண்ணி காம்ப்ளான் குடிச்சு,   குளிச்சு கிளம்ப முடியும்.
 9 மணி ஆனா போதும்  போகோ சேனல்ல சோட்டா பீம் போடு அப்போ தான் சாப்பிடுவேன், இவனுக்கு அடிதடி மாஸ்டர் இந்த சோட்ட பீம் தான் ..

ஆ ஊ ஐ என்று கத்தி கொண்டே ஒதைப்பான் மகாவை.   இவனுக்கு சந்தோசம் என்றாலும் அடி அவளுக்கு தான் யார் மீது கோவம் என்றாலும் அடி அவளுக்கு தான்.. சோட்டா பீமை தடை செய்ய சொல்லி ஒரு வழக்கு போடணுங்க என்றாள் நேற்று :))..

 இவன் செய்யும் சேட்டைகள் எல்லாம் நான் செய்து இருக்கிறேனா என்று அம்மாவிடம் கேட்டேன். அவங்களுக்கு சரியாக  தெரியவில்லை, அப்பாவும் அம்மாவும் வேலைக்கு சென்று கொண்டு இருந்ததால் எங்கள் வளர்ப்பில் அப்பாவின் அம்மாவிற்கே பெரும் பங்கு இருந்தது. அம்மிச்சி இருந்து இருந்தால் எனது குழந்தை தனத்தை தெரிந்து கொண்டு இருக்கலாம். இதை எல்லாம் ஒரு டயிரியில் எழுதி வைக்கணும். அவன் குழந்தை சேட்டை செய்யும் போது உன்னை போல தானே உன்னோட குழந்தை இருக்கும் என்கிற ஆதாரத்தை காட்டலாம் :)



 01, Feb 2013

 --
With Love
அருண் மொழித்தேவன் (Romeo) ;)

Thursday, February 14, 2013

மறுவீடு

பெண் குழந்தை பிறந்ததும் மகாலட்சுமி வீட்டுக்கு வந்துவிட்டாள் என்று சந்தோஷத்தில் மிதந்து கொண்டு இருப்பார்கள்.  அந்த குழந்தை குமரி ஆகி  அவள் மற்றொரு வீட்டுக்கு மருமகளாக போகும் நேரம் எவ்வளவு வேதனையை அனுபவிப்பார்கள். எனது அக்கா  கல்யாணம் முடியும் போது நான் சிறுவன், அக்காவிற்கு 17 வயதிலே கல்யாணம் முடிந்துவிட்டது. அப்போதெல்லாம் உறவுகள் பற்றிய சிந்தனைகள்  ஒன்றும்  தோன்றியதில்லை. அதுவும் அக்கா தங்கையை பற்றிய நினைவுகள் வந்ததே இல்லை. ஸ்கூல் விட்டா வீடு, வீடு விட்டா விளையாட்டு அவ்வளவு தான்.

எனது தங்கையின் கல்யாணத்தில் தான் பிரிவின் வேதனையை புரிந்து கொண்டேன். கல்யாணம் முடிந்து மண்டபத்தில் இருந்து மாப்பிள்ளை வீட்டுக்கு செல்ல நேரம் வந்துவிட்டது. உறவுகள் அத்தனையும் ஒன்றாக மண்டபத்தில் இருக்க முதல் விசும்பல் யாரிடம் இருந்து ஆரமித்தது என்று தெரியவில்லை அடுத்தடுத்து அந்த விசும்பல் பெரும் கண்ணீராக எல்லோருடைய கண்களில் இருந்து வந்து கொண்டு இருந்தது. சந்தோஷத்துடன் துடங்கிய அந்த நாள் ஒரு பிரிவை தாங்கி கொள்ள முடியாமல் கண்ணீரில் முடிந்தது. எனது தங்கையின் பக்கத்தில் நான் போகவே இல்லை, அவளருகில் சென்றால் கண்டிப்பாக நானும் அழுதுவிடுவேன்  என்று தெரிந்ததால் சமையல்கட்டு பக்கமாக சென்றுவிட்டேன்.  விதி யாரைவிட்டது அவள் மறு வீட்டுக்கு அழைத்து சென்ற டாட்டா சுமோ வண்டியின் பின்புறத்தில் என்னையும் எனது சித்தப்பா மகனையும் ஏத்தி விட்டுவிட்டார்கள். 

நான் பார்த்த வரை பல கல்யாணத்தில் மணப்பெண் தாலி கட்டும் போதே கண்ணில் நீர் வர ஆரமித்துவிடுகிறது,  நடிகை சிநேகா கூட இதுக்கு  விதிவிலக்கு அல்ல என்று அவரது கல்யாண வீடியோ பார்த்து தெரிந்து கொண்டேன்.   ஆனால் இன்று பார்த்த கல்யாணம் மனதுக்கு சந்தோஷத்தை தந்தது. சுரேஷ் எனது ஆருயிர் நண்பன் எனது வளர்ச்சியின் மீது பெரிதும் அக்கறை உள்ளவன் அவனுக்கு தான் இன்று திருமணம் நடந்தது, திருமணத்தை மணமேடைக்கு அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. 30 நிமிடங்களுக்கு மேல் இருக்கும் மணமக்களை பார்த்து கொண்டு இருந்தேன் இருவர் முகத்திலும் எந்த சலனமும் இல்லை சந்தோசம் மிகுதியாக இருந்தது.  தாலி கட்டி வேறு சில சம்பிரயாதங்கள் எல்லாம் முடிந்தது அந்த பெண்ணின் முகத்தில் தான் எத்தனை சந்தோஷம். உறவினர்களுடன் நிறைய புகைப்படங்கள் எடுத்து கொண்டார்கள் சுரேஷ் கூட ஏதோ அசதியில் இருந்த முகம் போல போஸ் கொடுத்து கொண்டு இருந்தான் மணப்பெண் முகத்தில் அவ்வளவு புத்துணர்ச்சி. என் மனைவிடம் அதை சுட்டி காட்டினேன், அவளும் ஆச்சரியபட்டாள். எப்படி இந்த பெண் இவ்வளவு சந்தோஷமா இருக்கா !! வருத்தமே இல்லையா திரும்ப திரும்ப ஒலித்த கேள்விகள். என்ன சொல்வதென்று  தெரியவில்லை ஆனால் மனதுக்கு சந்தோஷமாக இருந்தது. 


இன்று சாயந்திரம் அவள் மறுவீடு செல்வாள் அப்போது கச்சேரி ஆரமித்து  இருந்தாலும் இருக்கும்.



--
With Love
அருண் மொழித்தேவன் (Romeo) ;)