Wednesday, July 4, 2012

ஆட்டோசங்கரின் மரண வாக்குமுலம்




முக்கிய செய்தி : இந்த பதிவு முழுக்க முழுக்க ஆட்டோ சங்கர் நக்கீரன் வார பத்திரிகையில் தனது இந்த நிலைமைக்கு யார் காரணம் எதனால் இப்படி ஆனேன் என்கிற ரீதியில் 80 வாரங்கள் தொடராக எழுதியது. இந்த வார தொடர் பிறகு   ஆட்டோசங்கரின் மரண வாக்குமுலம் என்கிற பெயரில் புத்தகமாக வந்தது. அந்த புத்தகத்தை பற்றிய எனது பார்வை தான் இந்த பதிவு. சிலர் மாலை மலர் தளத்தில் காலச்சுவடு பகுதியில்  வெளிவந்த செய்திகளை காப்பி பேஸ்ட் செய்ததை போல இந்த பதிவு இல்லை.  



2009 என்று நினைக்கிறேன் புத்தக கண்காட்சியில் தேடோ தேடு என்று தேடியும் அகப்படாமல் இருந்த ஒரு புத்தகம்எந்த ஸ்டாலிலும் கிடைக்கவில்லை நேரடியாக அந்த பதிப்பகத்துக்கு போன் செய்து கேட்டும் பார்த்துவிட்டேன் அச்சில் இருப்பதாக தெரிவித்தார்கள் பல முறை முயற்சி செய்தும் அதே பதில் தான் கிடைத்தது. எதற்கு அந்த புத்தகத்தை இவ்வளவு தீவிரமாக தேடினேன் என்று தெரியவில்லை,  ஒருவேளை அந்த புத்தகத்தை எழுதியவரின் பெயர்  கூட இருக்கலாம். ஒரு சமயம் தமிழ்நாடே ஏன் இந்தியா முழுக்க இந்த பெயர் மீடியா முலம் பரிச்சமானது - ஆட்டோ சங்கர்




ஒரு மனிதன் தனது வாழ்க்கை முடியும் தருவாயில் கடந்த காலத்தை பற்றி அசை போடுவது என்பது இயற்கைதான். தனது வாழ்கையை  ஒரு புத்தகமாக எழுத வேண்டும் என்று நினைப்பவன் தன்னை நல்லவனாகவே மற்றவர்களிடம் காட்டிக்கொள்ள  முயல்வான் அப்படி தன்னை ஒரு ராபின்வூட்  ரேஞ்சுக்கு மக்களிடம் காண்பிக்க  ஆசைப்பட்ட ஒரு குற்றவாளியின் வாழ்கையை சொல்லும் புத்தகம். இந்த புத்தகத்தை படிக்கும் முன்னர் வரை ஆட்டோசங்கர் என்றால் நிறைய கொலை பண்ணியவன்சாயாரம்விபசாரத்தில் கொடிகட்டி பறந்தவன் என்று மட்டும் தெரியும். ஆனால் அதற்கு யார் பின்புலமாக இருந்து செயல்பட்டவர்கள் எதனால் இப்படி ஆனான் என்று விலாவாரியா அவனே கொடுத்து இருக்கும் மரண வாக்குமுலம். அதிகாரம் மட்டும் இருந்தால் போதும் அட்ட்டேன்ஷனில் நின்று சலாம் போட்டு மாமுல் வாங்கவும் முடியும் அதே ஆளை  அலேக்காக தூக்கி தொங்கவிட்டு அடிக்கவும்  முடியும் என்பதற்கு ஆட்டோசங்கரின் வாழ்க்கை ஒரு உதாரணம். 




இந்த புத்தகத்தினுள்  போவதற்கு முன்இது தொடராக வெளிவர இருந்த சமயம்/வெளி வந்த சமயம் நக்கீரன் பத்திரிகைக்கு என்ன ரீதியான தொல்லைகள் வந்தது அதை எப்படி சட்டப்படி எதிர் கொண்டார்கள் என்று ஐம்பது பக்கத்துக்கு மேல் விவரித்து உள்ளார் நக்கீரன் ராஜகோபால். இந்த ஐம்பது பக்கத்தில் இருப்பது சுருக்கமேசேலேஞ் என்று நக்கீரன் வெளியிட்டுள்ள புத்தகத்தில் விரிவாக கூறி இருக்கிறார். சேலேஞ்  புத்தகத்தை வாங்க நினைத்தால் கண்ணை முடி கொண்டு வாங்குங்கள். செம விறுவிறுப்பான புத்தகம் அது. ஜெயலலிதா ஆட்சி என்றாலே நக்கீரன் பத்திரிகைக்கு ஐந்தாண்டு  சனி பிடித்துகொள்ளும்ஆறு கொலைகள்  செய்த குற்றவாளிபெரிய லெவெலில் சாராயம் மற்றும் பெண்களை வைத்து பிசினஸ் செய்தவன்அமைச்சர்கள்   உயர் போலீஸ் அதிகாரி,   லோக்கல் போலீஸ்காரர்களிடம்  நெருக்கமான   தொடர்பு வைத்து இருந்தவன் தனது வாழ்கையை  பற்றி எழுதுகிறான் அதுவும் நக்கீரன் என்றால் சும்மாவா விடுவார்கள். உளவு துறை கண்டிப்பாக அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவிடம் ரிப்போர்ட் கொடுத்து இருக்கும் அதில் கண்டிப்பாக எந்த எந்த தலைகள் உருள போகிறது என்று நோட் செய்து இருப்பார்கள்அந்த சமயத்தில் உயர் அதிகாரியாக இருந்தவர்கள் செய்த செயலால் ஆட்சிக்கு கெட்டபெயர் ஏற்படும்  என்கிற காரணத்தால் கூட (!) எந்த விதத்திலாவது அந்த தொடரை தடை செய்ய முயற்சி எடுத்து கொண்டு இருந்தார்கள். ஒரு பக்கம் சிறைத்துறை கடிதம் முலம் நெருக்கடி கொடுக்க மறுபுறம் நக்கீரன் கோபால் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவிற்கு இந்திய பத்திரிகையே கொண்டாடும் அளவிற்கு ஒரு தீர்ப்பை அளித்துள்ளார்கள் நீதிபதிகள். இந்த களோபரங்களுக்கு நடுவில் ஆட்டோ சங்கர நெருக்கிய சிறைத்துறை அதிகாரிகள்சங்கரின் மனைவியை மிரட்டி பணியவைத்த  முன்னாள் சபாநாயகர் முனு ஆதி ஆட்கள் ஒருபுறம் தடைகள் அதிகமாகி கொண்டு இருந்த நேரத்தில் தான் அந்த தீர்ப்பு வெளிவந்து இருக்கிறது. தீர்ப்பு வெளிவந்த பிறகு சிறைத்துறையில் இருந்து வந்த கடிதத்தில் அப்படியே அந்தர்பல்டி அடித்து இருகிறார்கள் அதிகாரிகள்.




இனி புத்தகத்தை பற்றி பார்ப்போம். இந்த புத்தகத்தை பயோக்ராபி என்பதை விட   ஆட்டோபயோக்ராபி என்னலாம். அவன் எழுதி கொடுத்த 300 பக்க நோட்டில் உள்ளதையும் அவன் நேரடியா கூறிய பல சம்பவங்களை தொகுத்து வெளிவந்தது . 


  போலீஸ் நினைத்தால் ஒரு நிரபராதியை சுலபமாக குற்றவாளியாக முடியும் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்இந்த புத்தகம் படிக்கும் போது அது உண்மையோ என்று நினைக்க தோன்றுகிறது. சங்கரின் குழந்தை பருவம் என்பது வேதனையாகவே இருந்து இருக்கிறதுதனது எட்டாவது வயதில் இரண்டு மனைவிகளை விட்டுவிட்டு அப்பா வேறொரு பெண்ணை ஓடி விடுகிறார்அடுத்த வருடம் அவனின் அம்மா வேறொருவருடன் ஓடி விடுகிறாள். பெரியம்மாவிடம் வளரும் சங்கர் தனது பால்ய வயதில் ஜெகதீஸ்வரி என்கிற பெண்ணை கல்யாணம் செய்து கொள்கிறான். இதில் ரொம்ப ஆச்சரியம் தரும் தகவல் அந்த கல்யாணத்தை நடத்தி வைத்தது கிருபானந்த வாரியார். அப்போது சங்கருக்கு 18 வயது அவன் காதலிக்கு 14. சங்கரின் இளமை காலம் முழுக்க கஷ்டத்திலே நகர்ந்து இருக்கிறதுஒருவேளை சாப்பாடு இல்லாமல் இருவரும் இருந்த நாட்கள் அதிகம் எப்படியோ காந்தி மண்டபத்தில் ஒட்டடை அடிக்கும் வேலை கிடைக்க அதை வைத்து பிழைத்து கொண்டு இருக்கிறார்கள். சென்னையில் புயல் மழை  என்று விடாத நாட்களில் மனைவி குழந்தை பசியால் வாடுவதை பொறுக்க  முடியாமல் நாடார் கடையில் ஒரு கிலோ அரிசி கடனாக கெஞ்சி கேட்க அவரோ தர முடியாது என்றும் அந்த நேரத்தில் வந்த போலீஸ்காரர் ஒருவரிடம் இவன் என்னை மிரட்டுகிறான் என்று போட்டு கொடுக்கஅந்த போலீஸ் இவனை அந்த மழையில்  லத்தியால் வெளுக்கஅழுகையுடன் வீட்டுக்கு திரும்பும் சங்கர், வேறொருவரிடம் கடன் வாங்க அதே நாடார் கடை வழியாக செல்லும் போது போலீஸிடம்  வாங்கிய அடிகளை நாடாரிடம் திருப்பி கொடுத்து கொஞ்சம் அரிசியை அவனே எடுத்து செல்கிறான். ஆட்டோ சங்கர் என்கிற ஒருவன் இந்த சமயத்தில் தான் பிறந்தான் என்கிறான் சங்கர். ஒரு கிலோ அரிசி தான் ஒரு மனிதனை மிருகமாக ஆக்கியது  என்றால் நம்ப முடிகிறதா அந்த சமயத்தில்   தான் ஆட்டோ சங்கர் உருவான தினம் என்கிறான்.  





இந்த புத்தகத்தில் அதிர்ச்சிகரமான பல செய்திகள் உள்ளது. படிக்க படிக்க  வாயை பிளக்கும் அளவுக்கு செமையான  புத்தகம். ஆட்டோவில் கள்ளசாராயத்தை ஏற்றி கொண்டு கோட்டைக்கே சென்றது. எண்பதுகளில் சினிமாவில் கொடி  கட்டி பறந்த  கதாநாயகிகள் யார் யார் ப்ராதல் செய்து கொண்டு இருந்தார்கள் அவர்களின் ரேட் என்ன. குட்டை சாந்தி என்கிற பெயரில் வளம் வந்து மிக பெரிய போலீஸ்காரரை வழைத்து போட்ட பெண்மணி பின்னால் விஜயசாந்தி ஆனது. சினிமாவில் பெரிய ஆளாக வேண்டும் என்பதற்காகவே விபசாரத்தில் ஈடுபட்ட டிஸ்கோ சாந்தி.  விபசார பெண்களுடன் எடா கூடமாக இருந்த பெரிய தலைகளை போட்டோ பிடித்து வைத்திருந்தது. ஒரு காலத்தில் பெரிய பெரிய நடிகர்களை வைத்து படமெடுத்த ஜி.என் .வேலுமணி பேத்தி விபச்சாரி ஆனது.  




சங்கர் சறுக்கிய இடம் எதுவாக இருந்தாலும் அதில் இருந்து தப்பிக்க சரியான முறையை அவன் கையாளவில்லை. எத்தனையோ அடியாட்களை வைத்து இருந்தாலும் ஒரு புத்திசாலியான லாயரை வைத்து கொள்ளவில்லை. இன்று அரசியல், பிசினஸில் கொடிகட்டி பறக்கும் பல மனிதர்களின் இருண்ட பக்கத்தை பார்த்தல் பகீராக தான் இருக்கும். மூடி  மறைத்த விஷயங்கள் எவ்வளவோ இருக்கலாம், ஆனால்  அதை தோண்ட ஆரமித்தால் ஒன்றுமே இருக்காது அடையாளமே  தெரியாமல் அழித்து  இருப்பார்கள். இந்த புத்தகத்தில் உள்ளதை உள்ளபடி எழுதியுள்ளான் என்பதை  எப்படி நம்புவது என்று தெரியவில்லை, நம்பாமலும் இருக்க முடியவில்லை. தனக்கு துரோகம் இழைத்த  போலீஸ் ஆட்கள் சுகுமார், இன்ஸ்பெக்டர் தலைமலை, டி.எஸ்.பி. தங்கைய்யா. குட்டை சாந்தியை  கேட்டதற்காக  சங்கரை தொலைத்து விடுவதாக மிரட்டிய தேவாரம். சபாநாயகர் முனு.ஆதி, சில  அமைச்சர்கள் இப்படி அவர்கள்  பெயரை தெளிவாக சொல்வதால் இதை அவ்வளவு சீக்கிரத்தில் ஒதுக்கி முடியாது.    



சங்கர் தனது வாழ்க்கை முழுக்க செய்த தப்புகள் ஒரு பக்கம் நீண்டு கொண்டே சென்றாலும் தனது கடைசி நாளில் தூக்கு மேடைக்கு போகும் அந்த கடைசி அத்தியாயத்தை படிக்கும் போது  அவன் மேல் ஒரு வித இறக்கம் வருவதை நிறுத்த முடியவில்லை.  



இந்த புத்தகத்தில் அதிகபடியான வசனங்கள் உள்ளது. சங்கர் இல்லாத இடத்தில மற்றவர்கள் பேசியதை அவனே சொல்லுவது போல இருப்பது புத்தகத்தை பற்றிய  நம்பிக்கையை யோசிக்க வைக்கிறது. சில சில குறைகள் இருந்தாலும் ஆட்டோ சங்கர்  தனது வாழ்கையில் செய்த குற்ற செயல்களை பற்றி ஊடங்கங்களில் வந்த செய்தியை விட மாறுபட்ட செய்தியை தெரிந்து கொள்ளலாம். 


புத்தகத்தின் பெயர் :  ஆட்டோசங்கரின் மரண வாக்குமுலம்
வெளியீடு : நக்கீரன் பதிப்பகம்,சென்னை   

மேலும் தகவலுக்கு:  http://nakkheeranpublications.in/categories.php?cat_id=3

 அன்புடன் 
 அருண் மொழித்தேவன் (Romeo) ;)




Friday, June 15, 2012

தடையறத் தாக்க


அருண் விஜயிடம் எல்லா திறமைகள் இருந்தும் தமிழ் திரையுலகில் நிலையான ஒரு இடத்தை பிடிக்க முடியாமல் இருக்கிறார். பதினைந்து வருட போராட்டத்தில்  இந்த படத்தின் முலம் செமையான பிரேக் கிடைத்து இருக்கிறது. இதே போல படங்களை தேர்வு செய்து நடித்து வந்தால் கண்டிப்பாக நட்சத்திர நடிகராக வலம் வர நல்ல வாய்ப்புள்ளது.  நேற்றைய ஆனந்த விகடனில் பதினைத்து வருட போராட்டம் பற்றி சுருக்கமாகவும் ரொம்ப நேர்மையாகவும் அவர் அளித்திருந்த பேட்டி அருமையாக இருந்தது.



 




 


படத்தில் எனக்கு பிடித்தது 

நீயே சொல்லு லட்டு நல்லவா இருக்கு,
சாரிக்கு ஸ்பெல்லிங் சொல்லு,
1 2 3 என்று ரவுடி கோஷ்டி சொல்லிய பிறகு அருண் அவர்களை  நோக்கி ஓட்டுவது,
முன்னர் நடந்த சம்பவங்களை நட்பு சம்பவத்துடன் கோர்த்து இருந்தது,
மகாவின் கீப் பின்னணி 
ஒபெனின் சீனில் அருண்விஜய் பெண் கேட்பது, உங்க அப்பா ராஜ்பவன் தானே போறார் போற வழியில இறக்கி விடுறேன் பாதி காசு தர சொல்லு என்பது. 
மம்தா விற்கும் அருணுக்கும்  இடையான காதல் காட்சிகள் 
அண்ணன் தம்பி வில்லன்கள்
தமனின் தட  தட  இசை
யூகிக்க முடியாத திரைக்கதை


இப்படி சொல்லி கொண்டே செல்லலாம்
இரண்டாம் பாதி தான் படத்தின் ஹைலைட். நல்ல கலவையில் உருவான படம்  ராக்கெட் வேகத்துக்கு கொண்டு செல்கிறது.  

ஒரு படம் வெற்றியடைந்தால் அதை வேறு
மொழியில்  சுடசுட  ரீமேக் செய்வது என்பது இப்போதைய டிரெண்ட், முக்கியமாக கன்னட படவுலகில் இது தான் முக்கால்வாசி நடந்து கொண்டு இருக்கிறது. வேறு ஒரு இயக்குனர் இந்த படத்தை  இயக்குவதை விட மகிழ்திருமேனியே  இயக்கினால்  படத்தை இன்னும் ஸ்பெஷலாக  கொண்டு வரலாம். நம்ம எஸ்.ஜே.சூர்யா குஷியை வைத்து இந்தியா முழுக்க சுற்றினாலும் தெலுங்கில் மட்டுமே பம்பர் ஹிட் அடிக்க முடிந்தது, ஹிந்தியில் மண்ணை கவ்வியது. தமிழில் இருந்து ஹிந்திக்கு சென்ற  படங்களில் அதிரடி படங்களே அதிகமாக வெற்றிபெற்று இருக்கிறது அந்த வருசையில் இந்த படத்தின் ரீமேகில் இளம் நடிகர் யாராவது நடித்தால் கண்டிப்பாக பிளாக் பாஸ்டர் படமாக இருக்கும்.


திரில்லர் படம் என்கிற வரிசையில் கண்டிப்பாக இந்த படத்திற்கு இடம் உண்டுஅடுத்த லிங்குசாமியாக வர வாழ்த்துக்கள் மகிழ் :)




--
With Love
அருண் மொழித்தேவன் (Romeo) ;)

Friday, April 27, 2012

சங்கதிகள் 27 Apr 2012

புத்தகம் 

பதிவர் மேவி அவர்களின் அருளால் ஆதவன் அவர்களின் என் பெயர் ராமசேஷன் படிக்க வாய்ப்பு கிடைத்தது. இதற்கு முன்பே அவரின் குறுநாவல் மற்றும் சிறுகதைகள் தாங்கி வந்த இரவுக்கு முன் வருவது மாலை என்கிற தொகுப்பை கிழக்கில் தள்ளுபடியில் வாங்கி படித்த போது ஏனோ கதைகள் மனதில் ஒட்டாமலே சென்றது. இந்த புத்தகத்தை பற்றி பலர் நன்றாக இருக்கிறது என்று சொன்னதால் படித்தேன். ஆரம்பத்தில் இருந்தே கதையின் உள்ளே செல்ல முடியவில்லை. காலேஜ் படிக்கும் ராமசேஷன் மனதில் தோன்றுவதை வைத்து பார்க்கும் போது மனநலம் சரியில்லாவதர் போலவே இருந்தது. எதற்கு எடுத்தாலும் பத்தி பத்தியா யோசித்து கொண்டு இருக்கிறார். நாவலின் உள்ளே அதிகபடியான ஆங்கில வார்த்தைகளை உபயோகித்து உள்ளதால் பல இடங்களில் தடுமாறி கொண்டே செல்லவேண்டி இருக்கிறது. எதை போன்ற நாவல் இது என்கிற கேள்விக்கு பதில் சொல்ல தெரியவில்லை. நாவலை படிக்கும் போது மனுஷன்படுத்தி எடுக்கிறார் என்கிற வார்த்தை வெளியில் வருதை நிறுத்தமுடியவில்லை. 


சினிமா 

OK OK 

           ஹீரோ சந்தானம் என்பதா இல்லை உதயநிதி ஸ்டாலின் என்பதா!!! சிரிப்பு சிரிப்பு அதை தவிர ஒன்றும் இல்லை. உதயநிதி சைடு அக்ட்டராக அளவாக நடித்து நல்ல பெயர் வாங்கிவிட்டார். சந்தானத்தின் ராஜ்ஜியம் தான் தியேட்டர் முழுவதும் அடிதூள் பறக்கிறது. கொடுத்த காசுக்கு வஞ்சனை இல்லாமல் படம் பார்த்த திருப்தி. சந்தானத்தின் பாடி லங்குவாஜ் செம,அடிகடி ரியாக்க்ஷன் மாற்றுவது, டயலாக் டெலிவரி எல்லாம் ரொம்ப வித்தியாசமா செய்திருக்கிறார். வடிவேல் இல்லாத இந்த நாட்களில் அந்த இடத்தை முழுவதுமாக ஆக்கிரமித்துவிட்டார் மனுஷன். கதையே இல்லாமல் திரைகதையை நம்பி ஹட்ரிக் அடித்து இருக்கும் ராஜேஷ் ஆல் இன் ஆல் அழகு ராஜாவிலும்  ஜெயிக்க வாழ்த்துக்கள் :).


  
கழுகு 

     வித்தியாசமான கதை களம், அருமையான பாடல்கள், மிகை இல்லாத நடிப்பு  எல்லாம் சேர்ந்து படத்தை பார்க்க வைத்துவிட்டது. கிருஷ்ணா, கருணாஸ், தம்பி ராமையா, பிந்துமாதவி நடிப்பு எல்லாம் ஓகே. ஜெயப்ரகாஷ் தேவையில்லாமல் திணித்தது போல இருக்கு. படத்தின் கிளைமாக்ஸ் பார்க்கும் போது குணா கிளைமாக்ஸ் தான் கடைசில் நினைவுக்கு வருது. படத்தின் பட்ஜெட்டில் ஒரு பகுதியை பீடிகாகவே ஒதுக்கி இருப்பாங்க போல கிருஷ்ணா எப்பொழுதும் பீடி பிடித்து கொண்டு இருப்பதை பார்கையில் நமக்கு காதில் புகை வருது. மத்தபடி படம் ஓகே. 



  முதல் பாதி படம் சான்சே இல்ல சூப்பர், ஸ்ருதி எக்ஸ்ப்ரஷன், ரெண்டு பேருக்குள்ள செட் ஆகி இருக்கும் செமிஸ்ட்ரி செம  செம, தனுஷ் ஸ்கூல் பையன் காலேஜ் பையன் கணவனாக நல்லாவே செட் ஆகி இருக்காரு. ஸ்கூல் காதல் எல்லாம் ஜாலியா ரசிக்க முடியுது. இரண்டாம் பாதியில் தனுஷ் நன்றாகவே  நடித்துள்ளார், இருந்தாலும் கதை மற்றும் திரைகதையில் சம்திங் இஸ் மிஸ்ஸிங்.   கதையில் இன்னும் கொஞ்சம் மெனகெட்டால் இதை விட நல்ல படத்தை ஐஸ்வர்யா தரமுடியும். கொலைவெறியை கொத்தோ கொத்தென்று கொத்தி விட்டதால் விஷுவலாக பார்ப்பதில் கூட ஆசையில்லாமல் போய்விட்டது. செல்வராகவன் அவர்களிடம் பணியாற்றியதால் அவரின்  பாதிப்பு அப்பட்டமாக தெரிகிறது.



மெட்ரோ ரயில்


சென்னையில் மெட்ரோ ரயிலுக்கான வேலைகள் அசுரவேகத்தில் நடந்து கொண்டு இருக்கிறது என்று எல்லோருக்கும் தெரியும். முக்கிய சாலைகளை சுத்தோ சுத்து என்று சுற்றி கொண்டு வரவேண்டி இருக்கிறது. அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை எல்லாம் ஓரளவுக்கு பெரிய சாலைகள் இதுக்கே இந்த கதி என்றால் தண்டையார்பேட்டை நிலைமையை நினைத்தால் தான் பயமாக இருக்கிறது. வடசென்னையில்  மிகவும் நெரிசலான சாலைகளில் தண்டையார்பேட்டையும் ஒன்று. அதுவும் மகாராணி பஸ் ஸ்டாப் முதல் பாண்டியன் தியேட்டர் வரையிலான  சாலை முழுக்க மைதாமாவு ஆளூங்க நகைகடையாகவே இருக்கும், இருபதடி சாலை என்பதே அரிதான ஒன்று. ஒன்வே என்றாலே அந்த ரோடில் வண்டி ஓட்ட திக்கி திணறவேண்டும். அந்த ரோட்டில் மெட்ரோ ரயில் பணிகள் ஆரமித்தால் நினைச்சி பார்த்தாலே  பேஜாராதான் இருக்கிறது.



ஸ்பான்சர் 

 விளையாட்டுக்கு, ஒரு நிகழ்ச்சியை நடத்த, கல்லூரியில்  நடத்தப்படும் கலைநிகழ்ச்சி இப்படி எல்லாவற்றுக்கும் ஸ்பான்சர் தேவைப்படுகிறது. இப்பொழுது அதன் தாகம் தான் புரியாமல் இந்த ஸ்பான்சர்களுக்கு ஒரு பெயரை கொடுத்து அவர்களை படுத்தும்பாடு இருக்கிறதே சொல்லிமாளவில்லை. உதாரணத்துக்கு ஒரு நிகழ்ச்சியை பற்றி வானொலியில் ஒலிபரப்ப தனியார் பண்பலை உதவுவதாக இருக்கிறது என்றால் அதை ரேடியோ பார்ட்னர் என்று சொல்லுவார்கள். இதில் இருக்கும் உள்ளர்த்தம் எல்லாவற்றுக்கும் பொருந்தி போகும் அதுவே Strength பார்ட்னர் என்றால்?. சைதாபேட்டை ரயில்வே நிலையத்தில் இருந்த ஒரு தனியார் பண்பலை நிகழ்ச்சி பற்றிய பேனரின் கடைசில் இருந்த வாசகங்கள் இவை.

Title Sponsor
Associate Sponsor
Style Partner
TV Partner
Print Partner
Online Partner
F&B Partner
Fashion Partner
Mobile Partner
Multiplex Partner

ஒரு நிகழ்சிக்கு இத்தனை ஸ்பான்சர், பார்ட்னர்களா?? விஜய் டிவியில் ஒளிபரப்பு ஆகும் சில நிகழ்ச்சிகள் Powered by என்று சொல்கிறார்கள் அதற்கு என்ன அர்த்தம் ?? என்னமோ போடா நாராயணா.       



திருவொற்றியூர் அப்டேட்ஸ்

 தானே தலைவி , தங்க தலைவி , தங்க தாரகை, அடுத்த ஜனாதிபதி இன்றைய தமிழகத்தின் முதல்வர் ஜெ.ஜெயலலிதா சென்ற வாரம் அறிவித்த ஒரு செய்தி திருவொற்றியூர் மக்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளது. திருவொற்றியூரில் அரசு கலை அறிவியல் கல்லூரி தொடங்க அனுமதிதுள்ளார் என்பது தான் அந்த நியூஸ். ரொம்பவே வரவேற்கதக்க செய்தி இது.  சரி மேட்டர் என்னன்னா இந்த செய்தியை வாழ்த்தி ரரக்கள் வைத்திருக்கும் பேன்னர்கள் தான், கொஞ்சம் நஞ்சம் இல்லை எங்கே திரும்பினாலும் அம்மாவை வாழ்த்தும் அன்பு நெஞ்சங்களின் தொல்லை தான் தாங்க முடியவில்லை. இதை எல்லாம் பார்த்த பிறகு எனது அண்ணனிடம் அவன் டிஜிட்டல் பேனர்  கடையை இந்த பக்கமாக மாற்றி கொண்டு வந்துவிடு என்று  ஒரு கோரிக்கை வைத்துள்ளேன்.



ஈழம்

 
 
 விகடன் மேடையில் பழ.நெடுமாறன் அவர்களின் கேள்வி பதில் படித்து கொண்டு இருந்தேன். இதுவரை வந்த கேள்விகளில் 90 சதவிதம் ஈழம் பற்றியே கேள்விகள் வந்துள்ளதை பார்க்கும் போது, அவர் வேறு எதுவும் செய்யவில்லையோ என்று நினைக்க தோன்றுகிறது. ஈழம் தவிர்த்து அவரிடம் கேள்வி கேட்க நிறைய இருந்தாலும் அதை பற்றி பேச மற்றவர்களுக்கு ஏன் தயக்கம் . ஈழம் என்கிற வட்டத்துக்குள் அவரை சிக்க வைத்துவிட்டர்களோ அல்லது அவரே அந்த வட்டத்தை உருவாக்கி கொண்டாரா?



குறும்படம்

 
 ரொம்ப நாள் கழித்து அருமையான குறும்படத்தை பார்த்த திருப்தியை தந்தது இந்த படம் :)

 







--
With Love
அருண் மொழித்தேவன் (Romeo) ;)

Tuesday, April 17, 2012

கூகுள்+


கூகுள்+சில் பகிர்ந்து கொண்டவற்றில் சிலது இங்கே  :)


 

ஹெலிகாப்ட்டர் ஷாட்

    இந்த ஹெலிகாப்ட்டர் ஷாட் அடிகிறத்தில் டோனி செம கில்லாடி. தோனிக்கு முன்னாடியே டெண்டுல்கர் இந்த ஷாட் யூஸ் பண்ணி இருந்தாலும் இந்த டோனி பையன் அடிச்சதை தான் எல்லாருமே பேசிட்டு இருக்காங்க. கொஞ்ச நேரமா இந்த ஷாட் எப்படி அடிச்சான்னு நான் அந்த வீடியோவை பார்த்துட்டு இருக்கேன் காரணம் ஏன்னு பின்னே வருவதை படியுங்கள்.

போன வியாழகிழமை மதியத்துக்கு மேல லீவ். அடுத்த நாள் அரசு விடுமுறை அதுக்கு அடுத்த ரெண்டு நாள் வீக்லி ஆப். அடுத்தது ஷிபிட்  திங்ககிழமை நைட் பத்து மணிக்கு தான். அதாவது நாலு நாள் லீவ் கணக்குல வருது. வியாழக்கிழமை மகா கிட்ட பேசிட்டு இருக்கும் போது சனிக்கிழமை வண்டலூர் மிருக காட்சிக்கு போகலாம்ன்னு சொன்னேன். ஏற்கனவே அங்க தான் போயிருக்கோம்ல  எதுக்கு திரும்பன்னு ஒரு கேள்வி,  உங்க சொந்தகாரங்களை பார்த்து ரொம்ப நாள் ஆச்சு அதனால வா போயிட்டு வரலாம்ன்னு சொன்னதுக்கு ரெண்டு மொத்து விழுந்தது. பிளான் எல்லாம் ஓகே தான் ஆனா வியாழகிழமைக்கும் சனிக்கிழமைக்கும் நடுவுல வெள்ளிகிழமை இருக்குல அங்க வந்து நின்னான் பகவான் சனி. 

நாலு நாள் நள்ளிரவுக்கும் அதிகாலைக்கும் இடையிலான 3மணிக்கு ஆபிஸ் கிளம்பி போயிட்டு இருந்ததால் வியாழக்கிழமை நைட் நல்லா தூங்கினாலும் மகாவுக்கும் ஜுனியருக்கும் முன்னாடியே அதாவது 7 மணிக்கே எழுந்துட்டேன் அவங்க சாவகாசமா எப்பயும் போல 8மணிக்கு எழுந்து விடிஞ்சிடுச்சான்னு ஒரு கேள்வி கேட்டாங்க. பத்து மணி இருக்கும் எங்க வீடு டாமி எவனோ வீட்டு வாசலில் நிக்கிறவனை பாத்து சவுண்ட் உட்டுன்னு இருக்கிறது போல கத்திட்டு இருந்துச்சு.  என்னடா எழவு உயிரை வாங்குதேன்னு கேட் கிட்ட போனா தலைவரு அங்க இல்ல. ஷு ஸ்டாண்ட் பார்த்து சவுண்ட் கொடுத்துட்டு இருந்தான். என்னாடான்னு உள்ள பார்த்தா ஒரு எலி!!! ரைட் இன்னைக்கு காலைலே ஒரு காவு கொடுக்க வேண்டி வந்துடுச்சேன்னு கட்டை ஏதாவது இருக்கானு தேடிட்டு இருந்தேன்,, ஒண்ணுமே அகப்படுல ஒரு மூலைல  மகா  தூக்கி போட்ட பிஞ்சி போன துடப்பம் தான் இருந்துச்சு. அதுல கைபுடி மட்டுமே இருந்துச்சு அடி பாகத்துல பேருக்கு இதுவும் ஒரு காலத்தில் துடப்பமா இருந்துச்சுன்னு சொல்லிக்கிற மாதிரி சில நாருங்க தெரிஞ்சிது. முறத்தால் புலியை  விரட்டினாள்  தமிழச்சி என்பதை போல துடப்பத்தால் எலியை அடித்து கொன்றான் ஒரு தமிழன் என்கிற பெயர் கிட்டட்டும் அதை எடுத்துட்டு போனேன். அந்த நேரம் எலி சமையல் ரூம் ஜன்னல் கட்டு வழியா உள்ளே போயிடுச்சு. அங்க சமையல் செஞ்சிட்டு இருந்த அண்ணி அஞ்சு அடி பின்னாடி போயி எலி இங்க இருக்குனு சவுண்ட் கொடுக்க. சமையல் கட்டுக்குள்ள அதிரடியா போயி அதை அடிக்க பார்த்த நேரத்தில் எல்லாம் அது எஸ்கேப் ஆகி அங்கே இங்கேன்னு வீடுகுள்ளேயே சுத்துது. இந்த பக்கம் போனா அந்த பக்கம் அது போகுது நான் அந்த பக்கம் போனா எலி இந்த பக்கம் போகுது. நான் பண்ணிய வேலையை பார்த்து அண்ணன் பொண்ணு சிரிக்கிற பாருங்க அப்படி சிரிக்கிற. அந்த நேரம் பார்த்து அண்ணனும் மகாவும் வீட்டுக்கு வெளியே நிக்க எலி எங்கேயும் போக வழி இல்லாம  வாசல் வழியா போக அங்க நின்னுட்டு இருந்த அண்ணன் காலு நடுவுல ஓட அவன் துள்ளி குதிக்கிறான்.  இந்த ரணக காலத்திலும் அண்ணன் பொண்ணும் எங்க வீட்டுக்கு  ஜுனியருக்கும் அவ்வளவு சிரிப்பு. ஒரு வழியா எலி வெளிய ஓடி போயிடுச்சு.  இந்த ரெண்டு வாண்டுகளும் எலியை பார்க்க ஆசைப்பட்டு வெளியே போயி நிக்கிறாங்க, வெளியே ஓடி போன எலி வேற எங்கேயாவது போயிருக்க வேண்டாமா. எழவு திரும்ப வீடுக்குள்ள  வரவா  ட்ரை பண்ணனும், இந்த தடவை என்னோட காலுக்குள்ள புகுந்து எஸ்கேப் ஆகா பார்த்ததை ஹெலிகாப்ட்டர் ஷாட் போல ஒரு அடிவச்சேன் அதோட மண்டைல. சுர்ர்ர்ர்ன்னு முதுல ஒரு வலி, ஒரு செகண்ட் தான்  எசக்கு புசுக்கா முதுகுல  நரம்பு  எங்கேயோ போயி சுளுக்கிச்சு. எலி அடிக்க போயி வலி வந்துடுச்சு,  முணு  நாளா  உட்கார முடிய, நடக்க முடியல முக்காவாசி நேரம் படுத்துட்டே இருந்தேன். நான் நடக்கிறதை பார்த்து  பேரழகன் படத்துல வரும் சூர்யா போல நடக்குறீங்கன்னு மகா வேற கமெண்ட் கொடுக்குறா. சுளுக்கு எடுக்குறவங்க யாராவது இருப்பாங்களான்னு தேடி பார்த்தா ஒருத்தரும் இல்ல. இன்னைக்கு பிசியோதெரபி கிளினிக் போனேன் ஓரளவு பரவால.  எல்லாத்தையும் விட ஒரே ஒரு கவலை அந்த எலி உயிரோட  இருக்குதா இல்ல செத்துச்சான்னு தான். ஒரு ஹெலிகாபட்டர் ஷாட் அடிச்சதுகே இந்த நிலைமைல இருக்கேன் இந்த டோனி எப்படி சளைக்காம யார்கர் பால் எல்லாம் அந்த வாங்கு வாங்குறான்னு தெரியல..

17 Apr 2012


சுனாமி

சுனாமி வந்ததோ இல்லையோ அதை பார்க்க ஒரு கூட்டம் பீச்க்கு போனது தான் பெரிய காமெடி . நேத்து சன் டிவில ரெண்டு முணு குரூப் பேட்டி கொடுத்துச்சு. சுனாமி வருதான்னு பார்க்க வந்தோம் இதுவரைக்கும் வரலன்னு. அட நாதேரிகளா நீங்க பார்க்க வந்த நேரத்துல சுனாமி வந்தா என்ன பண்ணுவீங்க!!! மூளையை வீட்டுலே கழட்டி வச்சிட்டு வந்துடீங்களா ? நிலநடுக்கம் வந்த போது நான் சாப்பிட்டு இருந்தேன், தூங்கி இருந்தேன், நடந்துட்டு இருந்தேன்னு வேற சொல்லிட்டு இருந்தாங்க, ரெண்டு செகண்ட்ல உலகமே மாறிட்ட மாதிரி ஒரு பீலிங் காமிகிறாங்க பாருங்க அங்க நிக்கிறான்டா தமிழன் :)). எங்க வீடு கடற்கரைல இருந்து ஒரு கிலோமீட்டர் இருக்கும் . பிரபாகர் வீடு பீச் பக்கத்துல இருக்கு, நேத்து மதியம் அவனுக்கு போன் பண்ணி மச்சி சுனாமி வந்த சொல்லுடா நான் எஸ்கேப் ஆகா வசதியா இருக்கும்ன்னு சொன்னேன். அவன் எனக்கு மேல பயந்துட்டு இருக்கான் போல நானே உன் வீட்டுக்கு வரலாமான்னு யோசிச்சிட்டு இருக்கேன்னு சொல்லுறான். ஆகா மொத்தத்தில் எல்லோரும் பயந்துட்டு இருந்தது தான் மிச்சம் சுனாமியின் எச்சம் கூட பார்க்கல.

12 Apr 2012

டயட்

தொப்பை பெருத்துட்டு வருதேன்னு ஒரு கவலை.. இதுக்கு அதிரடியா ஒரு நடவடிக்கை எடுக்கணும்னு ரெண்டு நாளைக்கு முன்னால இருந்து டயட்ல இருக்க ஆரமிச்சேன். ஆபீசில் இருக்கும் ஒரு நண்பர் என்ன என்ன சாப்பிடனும் எப்போன்னு அரைமணி நேரம் கிளாஸ் எடுத்தாரு. இதை அப்படியே மகா கிட்ட சொல்லி அதன்படி தான் இனி சாப்பாடு மதியம் சாதத்தை கம்மி பண்ணி நார் சத்துள்ள காய்கறிகள் ரெண்டு முணு ரெடி பண்ண சொல்லி அதை அவ பாலோ பண்ண ஆரமிச்சா. போன சண்டே ரிலையன்ஸ் பிரெஷ்ல வாங்கிய மஷ்ரூம் டைம் முடிய போகுது அதனால அதை ஏதாவது பண்ணுன்னு நேத்து சாயந்திரம் சொன்னேன், கூடவே மலபார் பரோட்டா வேற அங்க இருந்து வாங்கி வந்து இருந்தோம். சரி ரெண்டே ரெண்டு மட்டும் சாப்பிடலாம்ன்னு ஆரமிச்சேன். மகா சோதனை முயற்சியா செய்யுற எதுவும் உருப்படியா இருந்தது இல்ல, செய்ய செய்ய தான் அது நல்லா வரும். நேத்துன்னு பார்த்து அவ செஞ்ச மஷ்ரூம் கிரேவி அட்டகாசமா இருந்துச்சு. முதலில் ரெண்டு பரோட்டாவை உள்ளே தள்ளியாச்சு, ருசி கண்ட பூனை போல இன்னும் வேணும்னு நாக்கும் வயிறும் கேக்குது. மகாவை ஒரு லுக்கு விட்டேன், சிரிச்சிட்டே இருந்தவ ஒரு பரோட்டா தந்தா, என்ன ஆச்சோ தெரியல இன்னும் ரெண்டு பரோட்டாவையும் ரெடி பண்ணி வச்சிகிட்டா, முணாவது பரோட்டா உள்ளே போனதும் எனக்கு முன்னாடி இன்னும் ரெண்டு பரோட்டா.. அப்பறம் என்ன நடந்துச்சுன்னு சொல்லனுமா என்ன :))) ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காதுன்னு சும்மாவா சொல்லி இருக்காங்க :)))........

இன்னைல இருந்து நான் டயட் :)))))

11 Apr 2012

பிரெஞ்சு கிஸ்

இந்த வாரம் KFC போகணும்னு நினைச்சேன், இன்னைக்கு அந்த வாய்ப்பு கிடைச்சது. டி.நகர்ல இருக்கும் KFC போயி ஒரு பர்கர், ஒரு பிரைடு சிக்கன், கொஞ்சம் பிரெஞ்சு ப்ரைஸ் வாங்கி சாப்பிட்டு வந்தேன். மெயின் ரோடுல போனா சுத்திட்டு போகணுமேன்னு வெஸ்ட் சைதாபேட் புகுந்து ஆலந்தூர் ரோடுல போயி கிண்டி போகலாம்ன்னு தினக் பண்ணிட்டே வண்டியை மெதுவா உருட்டிட்டு போனேன். KFCல இருந்து கிளம்பி கொஞ்ச தூரம் வந்து இருப்பேன், லெப்ட் சைடுல நின்னுட்டு இருந்த காருக்கு பக்கத்துல ஒரு பையன் யமஹா பைக்ல இருந்து உள்ளே இருந்த யாரோ ஒருத்தங்க கிட்ட பேசிட்டு இருந்தான். என்ன ஆச்சுன்னு தெரியல காரில் இருந்து செம பிகர் வெளியே வந்து ரோடுன்னு கூட பார்க்காம அந்த பையனுக்கு நச்சுன்னு பிரெஞ்சு கிஸ் கொடுத்துட்டு வண்டியை எடுத்துட்டு போயிட்டே இருக்கா. ஒரு நிமிஷம் ஜெர்க் ஆகிடுச்சு எனக்கு, சென்னை ரொம்பவே முன்னேறிட்டு வருதுடேய் :)))

 2 Apr 2012


Use the Technology :)

கொஞ்ச நாளுக்கு முன்னாடி ஜூனியர் ரைம்ஸ் ரசிச்சி பார்க்கிறான்னு சொல்லி இருந்தேன்ல அதுல இன்னொன்னும் சொல்லி இருந்தேன் அண்ணன் அவன் லேப்டாப் எடுத்துட்டு போயிடுறதுக்குள்ள ஒரு டப்பா கம்ப்யூட்டராச்சும் வாங்கிடனும் இருந்தேன். ரெண்டு நாளைக்கு முன்னாடி அவன் லேப்டாப் எடுத்துட்டு போயிட்டான். இதனால ஜூனியர் கொஞ்சம் அப்செட், இனி ரைம்ஸ் எப்படி எதுல பார்க்கிறது.. எல்லா ரைம்சையும் மொபைலில் தெரிவது போல 3g பார்மெட்டுக்கு மாத்தி கொடுத்தேன். அதும் மகா மொபைல மட்டுமே தெரியும் என்கிட்ட இருக்கிறது ரொம்ப பேசிக் மொபைல். இப்போ அடுத்த பிரச்சனை ஆரமிச்சிடுச்சு, மகா யார் கிட்டையாவது போன்ல பேசும் போது கரெக்டா பாட்டு போடு பாட்டு போடுன்னு ஒரே ரகளை. ரெண்டு நாளா தலைவரு தான் போன் யூஸ் பண்ணுறாரு , இதில் ஒரு நல்ல செய்தி எனக்கு அடிக்கடி வீட்டில் இருந்து போன் வருவது தவிர்க்கப்பட்டுள்ளது
:)) .

22 Mar 2012