Sunday, August 16, 2015

முடிவுறாத ஒரு கட்டுரை

முன்று வருடங்களுக்கு முன் வரை படித்த புத்தகத்தை எல்லாம் வகை தொகை இல்லாமல் எனது பிளாக்கில் விமர்சனம் செய்துக் கொண்டு இருந்தேன். அப்படியான ஒரு காலத்தில் பதிவர்கள் பலர் எழுதிய  புதிய புதிய புத்தகங்கள் படிக்க பிளாக் ரொம்ப உபயோகமானதாக இருந்தது. பேஸ்புக்கின் அதீத வளர்ச்சியால் பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டு இருந்த எனது பிளாக் பக்கம் எட்டி பார்த்தே வெகு நாட்கள் ஆகிவிட்டது. எஸ்.ராவின்  நெடுங்குருதி படித்து பல நாட்கள் ஆகிவிட்டது நேற்றிரவு புத்தகத்தை பற்றி ஒரு விமர்சனம் எழுதலாம் என்று எவ்வளவு முயன்றும் ஏதோ ஒன்று முட்டுகட்டை போட்டுக் கொண்டு இருந்தது.  தொடக்க வரிகளை எழுதுவதற்க்குள் பல திருத்தங்கள். ஒரு கட்டத்துக்கு மேல் இப்படியே விட்டுவிடலாம் எங்கிற எண்ணத்தில் முடிவுறாத இந்த கட்டுரையை நிறுத்திவிட்டேன். 


நெடுங்குருதி – எஸ்.ராமகிருஷ்ணன்

எல்லோரும் வெயில் காலங்களில்  சூரியனை கண்டு அஞ்சி நடுங்குகிறார்கள். வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க வீட்டில் இருந்து வெளியே வர அஞ்சுகிறார்கள், வீட்டுக்குள் அடைபட்டு இருக்கும் புழுக்கம் உக்கிரமாக உடலில் புகுந்து வியர்வையாக வெளியே தள்ளும். பகலை கண்டாலே நாம் வெருப்பின் உச்சிக்கு சென்றுவிடவோம். இன்றைய காலகட்டத்தில் எல்லோர் வீட்டிலும் ஏசி இருப்பதில்லை, ஏசி இருக்கும் வீட்டிலும் மாதாந்திர மினசார பில்லுக்கு பயந்து இரவில் மட்டுமே அவை இயங்குகிறது. மின்சார காத்தாடி இருந்தும் அதுகளில் இருந்து வெப்பமே நமக்கு வருகிறது. அப்படியான வெயில் காலத்தில் மின்சாரம் இல்லையேனில் அவஸ்தை பலமடங்கு அதிகரிக்கும். வெயில் கால இரவுகள் தூக்கத்தை துறந்த நாட்களாகவும் துயரம் நிறைந்த நாளாகவும் இருக்கும்.  
முன்னோரு காலத்துல் இப்படியான ஒரு வெயில் காலத்தில் தான் நாகுவின் வீட்டில் இருந்து தொடங்குகிறது நாவல். உக்கிரமான அந்த வெயில் வேம்பலை எங்கிற கிராமத்தை பொசுக்கி கொண்டு இருக்கிறது. வேம்பலை என்கிற கிராமத்தில் இருக்கும் நாகுவின் வீட்டில் இருந்து தொடங்கும் நாவல் அவன் மகள் திரும்ப அந்த வீட்டுகே திரும்பி வருவதுடன் முடிகிறது. 

கள்ளர்கள் பற்றிய நாவல் நினைத்துதான்  முதலில் படிக்க ஆரம்பித்தேன் போக போக கள்ளர்கள் பற்றி அதிகம் பேசாமல்  குடும்பத்தில் நிகழும் வாழ்வும் வீழ்ச்சியும் தான் பிரதானமாக கதையா நடந்து முடிகிறது. நாவல் தொடங்கும் வேம்பலை கிராமம் பற்றிய பகுதி வெகு சுவாரஸ்யம். அந்த கிராமம் எப்படி உருவானது அங்கு வாழ்ந்த கள்ளர்கள் எப்படிபட்டவர்கள் எப்படி அவர்கள் அங்கே வந்தார்கள் அவர்களை வேட்டையாடிய ஆங்கிலேயன். அந்த ஆங்கிலேயன் மர்மமான மரணம் நாவலின் முக்கியமான வெகு சுவாரஸ்யமான பகுதி.  

வேம்பலை அமானுஷம் நிறைந்த கிராமம் அங்கே வாழ்ந்து வரும் மக்கள் அதை ஒரு பொருட்டாக நினைக்காமல் தங்களது அன்றாட வாழ்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். உதாரணத்துக்கு சென்னமா கிழவி இறந்த பிறகும் அந்த கிராமத்தில் வாழ்ந்து வருவது. அதை போல துர் கனவுகள் எல்லோரையும் மிரட்டுகிறது. 

ஆண்களை விட பெண்களை பற்றியும் அவர்களின் வீரம்/தியாகம் பற்றியும் தான் நாவல் அதிகம் பேசுகிறது. நாகுவின் அம்மா, பக்கிரியின் மனைவி, ரத்னாவதி, மல்லிகா இவர்கள் ஒவ்வொருவர் வாழ்க்கையும் தனி தனி பயனமாக செல்கிறது. 

இதில் அதிகமாக விமர்சனத்துகுள்ளாவது ரத்னாவதி தான். ரத்னாவதி எப்படியானவள் என்றே கணிக்கமுடியவில்லை.  தன் ஒரே மகனான திருமாலை கிருத்துவ பள்ளியில் சேர்த்து விட்டு எந்த ஒரு கவலையும் இல்லாமல் திரும்பி வருகிறாள். அதன் பின் கடைசி வரை அவள் அவனை பார்க்காமலே உயிர் விடுகிறாள். 

நெடுங்குருதி முற்பகுதி ஆண்களை பற்றி பேசினாலும் எல்லா வகையிலும் பெண்களை முன்னிறுத்தி அவர்களில் வேதனை, சந்தோஷம் பற்றி அதிகம் பேசுகிறது. 

கீழ்கண்ட வரிகள் லயோனல் சொல்வதாக ஒரு இடத்தில் வரும் இதை முழுவதுமாக புரிந்துக்கொள்ள எனக்கு  இன்னும் நாட்கள் எடுக்கலாம். உண்மையில்  உலகில் அன்பை விடவும் மேலானது ஒன்றிருக்கிறது.
  
“உலகில் அன்பை விடவும் மேலானது ஒன்றிருக்கிறது. அது பெயரிடப்படாதது, கருணையை விடவும் நெகிழ்ச்சியானது. அன்பால் வேதனையை இல்லாமல் செய்கிறதோ அது அன்பை விட மேலானது, அது காட்டுச்செடியைப் போல தானே வளரக்கூடியது.  நாம் அன்பைவிடவும் மேலான ஒன்றிற்காகக் காத்துக்கொண்டிருக்கிறோம்”
   

என்னை பொறுத்தவரை இந்த கட்டுரை முடியவும் இல்லை - தொடங்கவும் இல்லை 



With love
Romeo ;)