Thursday, December 30, 2010

30

சில பல விஷயங்களை கடந்து வரும் போது அப்பா என்று பெருமூச்சு விடுவோம் அல்லது வடை போச்சேன்னு  கன்னத்துல கையை வச்சிகிட்டு குத்த வச்சி உக்காந்து இருப்போம்.

வடை போச்சே பற்றிய பதிவுதான் இது..

சொல்லுறதுக்கே கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு, பட் சொல்லிட்டா தேவலைன்னு தோனுச்சு அதான் சொல்லுறேன்.

29 வயச கூட யூத்ன்னு சொல்லிட்டு போகலாம் ஆனா 30 வயச??

ஆமாங்க வர டிசம்பர் 31, அதாவது நாளைக்கு எனக்கு 30 வயசு ஆகுது :( . பாதி கிழவன் ஆகிட்டேன்.

ஒரே டவுட் 30 வயசு ஆனா நானே பாதி கிழவன்னு தைரியமா சொல்லுறேன், 45 வயசு ஆனா நம்ம கேபிள் மட்டும் யூத் யூத்ன்னு எப்படி சொல்லுறாருன்னு தான் தெரியல.

எங்க எல்லோரும் ஒரு தடவை ஹாப்பி பர்த்டேன்னு சொல்லுங்க பார்க்கலாம்.  





--
With Love
Romeo ;)

Thursday, December 16, 2010

சங்கதிகள் - 17/12/10

சாமியே சரணம் 


                   வருஷத்துல முண்ணுறு நாள் டாஸ்மாக் தண்ணிலையே மிதந்துட்டு. சாமி ஊர்வலம் போகும் போது கூட தண்ணிய போட்டுட்டு குத்து டான்ஸ் ஆடிட்டு, ரோடுல போறவங்க கிட்ட எல்லாம் வம்பு பண்ணிட்டு, போலீஸ்காரனை பார்த்தா பயந்து நடுங்கி ஏதாவது வீட்டுல போய் அடஞ்சிகிட்டு. தண்ணி எடுக்க வர பொம்பளைங்க மேல விழ போய் அடிவாங்காம தப்பிச்சு அவன் குடும்பத்தையே நாறு நாரா அவங்க திட்டினதை கூட கேக்காம, அடுத்த ரவுண்டுக்கு எவன் கிட்ட ஆட்டைய போடலாம்ன்னு பார்க்கு போறவன். கார்த்திகை ஒண்ணு ஆனா சபரி மலைக்கு மாலை போட்டுட்டு சாமியே சரணம்ன்னு விடிய காலைல எழுந்து கோயிலுக்கு போறவனை சாமின்னு குப்பிட்டு ஏனோ மனசே வரல. மேலே சொன்னது எல்லாம் எங்க ஏரியால இருக்கும் ஒருத்தனை பற்றி தான்.  




ஆசை நிறைவேறுகிறது 

         எங்க ஏரியால இருக்கும் மோசமான ரோடு பத்தி நிறைய தடவை எழுதி இருக்கிறேன்.  எதிர் கட்சி ஆட்கள் அவங்க செலவில் ரோடு  சரி செய்வதாக சொல்லி இருந்தார்கள். அதுக்குள்ள ஏதோ உள்ளடி வேலை நடந்துடுச்சுன்னு நினைக்கிறன்.  அவங்க சொன்ன தேதிக்கு பிறகும் ஒரு வேலையும் நடக்கவில்லை ஒரு வாரத்துக்கு    அப்பறம் ரோடு ரெடி பண்ணிட்டு இருக்காங்க. மழை மட்டும் இல்லை என்றால் இந்த நேரம் ரோடு ரெடி ஆகி இருக்கும் இப்போ கொஞ்சம் கொஞ்சமாக ரோடு ரெடி பண்ணுறாங்க. எதிர் கட்சிக்கு நன்றி சொல்லுறதா இல்ல ஆளும் காட்சிக்கு நன்றி சொல்லுறதான்னு தெரியல.  ஆகா மொத்தம் ஒரு வழியா ரோடு ரெடி ஆகுது. 


பதிவர்

            குழந்தை நல மருத்துவன் என்கிற பெயரில் குழந்தைகள் நலம் பற்றி பதிவு எழுதுகிறார் டாக்டர் ராஜ்மோகன். அவரின் பதிவுகள்  எல்லாம் ரொம்ப உபயோகமான இருக்கு. ஜூனியருக்கு உடம்பு முடியலைனா இவருடன் கன்சல்ட் செய்து கொள்கிறேன்.
அதே போல தடுப்பு ஊசி பற்றி கொஞ்சம் விளக்கி சொன்னார். உங்களுக்கு ஏதேனும் குழந்தைகள் உடல் நிலை பற்றி சந்தேகம் இருந்தால் அவரின் இந்த ஈமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும் rajmohandr@gmail.com

குத்து
  
            கடந்த ஒரு வாரமா  Silverstar Stallone நடிச்ச Rocky  சீரீஸ் படத்தை எல்லாம் பார்த்தேன். அதோட Cinderella man , Million Dollar baby என்று அதிரடி குத்து சண்டை படத்தை பாரதத்தின் விளைவா எவனையாவது முஞ்சை பேர்க்கணும்ன்னு கை அரிக்க ஆரமிச்சிடுச்சு.  Rocky படத்தை உண்மையில் ரசனையா ரசிச்சு பார்த்தது இப்போ தான், Silverstar Stallone நிறைய கஷ்டப்பட்டு இருக்காரு. முதல் பாகத்தில் இருந்த இளமை அடுத்த அடுத்த பாகத்தில் குறைந்து கொண்டு வந்து  கடைசியாக வந்த பக்கத்தில் சுத்தமா இல்லை என்றாலும் அந்த போர்ஸ் கொஞ்சம் கூட குறையல. Silverstar Stallone 2005ல AXN channelல "The Contender" என்று ஒரு ப்ரோக்ராம் பண்ணாரு. அந்த சமயத்தில் நான் ரொம்ப ரசிச்சி பார்த்த நிகழ்ச்சி அது. ஒவ்வொரு குத்து சண்டை வீரனும் எப்படி போட்டிக்கு ரெடி ஆகுறாங்கன்னு ஆரம்பம் முதல் கடைசி வரைக்கும் அந்த தொடர் நல்லா இருந்துச்சு. டைம் இருக்கும் போது You tubeல பாருங்க. ஒவ்வொரு அடியும் மரண அடியா இருக்கும். இதே போல ஒரு நிகழ்ச்சி யாரவது இங்க தயாரிச்சா நல்லா இருக்கும்.



பாட்டு



     தா படத்தில் ஜெய ராகவன் பாடி  இருக்கும் ""ஏதோ ஒருஏக்கமோ"" சூப்பர்.. பாடல் வரிகளுக்கு முக்கியத்தவம் குடுத்து இருக்காங்க. எல்லா பாடும் ஒரு அளவு நல்லா தான் இருக்கு.


   மன்மதன் அம்பு படத்தின் பாட்டு அவ்வளவாக ஈர்க்கவில்லை, தேவிஸ்ரீபிரசாத் ஏதாவது புதுசா முயற்சி செய்து இருப்பார் என்று எதிர்பார்த்தேன்.. ஹ்ம்ம் ஏமாற்றமே மிச்சம். கமல் பாடுவதை நிறுத்திவிட்டால் நன்று ""தகுடு தத்தம்"" பாட்டு சுத்த மோசம்.

    ஈசன் கொஞ்சம் போல ஈர்த்து உள்ளது ""மெய்யான இன்பம்""  செம ராக்.

   

ரொமான்ஸ்

     என்னோட ஆல் டைம் பேவரிட் படம் மகேந்திரன்  இயக்கத்தில் ரஜினி நடித்த ஜானி தான். அது என்னவோ தெரியல இந்த படத்தை எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்கவே இல்லை. ரஜினிக்கும் ஸ்ரீதேவிக்கும் இடையில் வரும் அந்த ரொமான்ஸ் சீன் சான்சே இல்ல. எவ்வளவு இயல்பா அந்த கொஞ்ச நேரத்துல ரெண்டு பேரும் நடிப்பில் எத்தனை விதமான மாற்றங்களை கொண்டு வருவாங்க. அதும் ஸ்ரீதேவி உட்கார்ந்து கிட்டே ஒரு வித சங்கடத்தோட ஆரமிச்சு, நடுவில் அழுது, கடைசியில் சிரிச்சி வாவ் சிம்ப்ளி சூப்பர் ..






எரிச்சல்

        ஒரு நிகழ்ச்சி ஹிட் ஆச்சுனா அதைவச்சு இப்படியா நம்மளை நோகடிக்கிறது?? விஜய் டிவில சூப்பர் சிங்கர் அப்பறம் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சி வந்த புதுசுல செம ஹிட். முதல் ரெண்டு சீசன்க்கு மக்களிடம் நல்லதொரு வரவேற்பு இருந்துச்சு, அதை சாக்கா வச்சிக்கிட்டு இப்படி மற்ற எந்த நிகழ்ச்சி என்றாலும் இவங்களை வச்சியே ஒப்பேத்திக்கிறது செம கடுப்பை கிளப்புது... கொஞ்சம் கூட கவலைப்படாமல் இவங்க பண்ணுற அலும்பு அசிங்கமா இருக்கு, பேசாம இந்த சேனல் பெயரை சூப்பர் டிவின்னு வச்சிடலாம். மன்மதன் அம்பு நிகழ்ச்சியை பார்க்கலாம்ன்னு ரொம்ப ஆசையா இருந்தேன் நடுவு நடுவுல வந்த ஜோடி நம்பர் 1 ஆட்களின் டான்ஸ், சூப்பர் சிங்கர் பசங்களின் பாட்டுன்னு போட்டு அந்த நிகழ்ச்சியை பார்த்துட்டு இருந்தவங்கள டர்ர்ர்ர்ர்ர் ஆகிட்டாங்க, போதும்டா சாமின்னு சிரிப்பொலி பார்த்துட்டு இருந்தேன். விஜய் டிவியை விட நிறைய காமெடி சீன் அதுல இருந்துச்சு. இவங்க கிட்ட ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர்க்கு எப்போதான் விடுதலை கிடைக்கும் ??


       ராஜ் டிவி அப்பறம் எஸ்எஸ் மியூசிக் சேனல்லையும் வரும் சினிமா தெரியுமா நிகழ்ச்சி ரொம்ப கேவலமா இருக்கு. நம்ம கண் முன்னாடி எப்படி எல்லாம் நம் காசை கொள்ளை அடிக்கிறாங்கன்னு பார்க்கும் போது வரும் ஆத்திரத்தை கட்டுப்படுத்த முடியல. மொக்கையான கேள்விக்கு பதில் சொன்ன Rs.35000  பரிசுன்னு சொல்லி யாராவது ஒரு ஹீரோ அப்பறம் ஒரு ஹீரோயின் பாதி முகத்தை மட்டும் இணைச்சி கேள்வி கேட்பாங்க. ரொம்ப ஈஸியான அந்த கேள்விக்கு பதில் சொல்ல லைன்ல வரவங்க தப்பா பத்தி சொல்லுவாங்க. வர எல்லோரும் தப்பா பதில் சொல்லி சொல்லி அந்த அமௌன்ட் கடைசியா Rs.3000 வந்து நிக்கும். அப்போ லைன்ல வர ஒருத்தர் கரெக்டா பதில் சொல்லுவாரு. இது எப்படின்னு தான் தெரியல !!!! இது போக ரெகார்ட் பண்ண நிகழ்ச்சியை வேற அடிகடி ஒளிபரப்புறாங்க. அதை பார்த்து எத்தனை பேரு பணத்து ஆசையால போன் பண்ணி அவங்க காசை விட்டாங்கன்னு தெரியல.  கொய்யால எங்களை பார்த்தா என்ன கேணையனா தெரியுதா உங்களுக்கு ??  




அலச்சியம்


    ஜூனியர்க்கு உடம்பு சரி இல்லைனா தண்டையார்பேட்டையில் இருக்கும் எழில் மருத்துவமனைல தான் தூக்கிட்டு போவோம் . போன மாசம் ஜூனியர்க்கு காய்ச்சல் வந்த போது அந்த  மருத்துவமனைல தான் பார்த்தோம். டாக்டர் எழுதி குடுத்த மருந்து வாங்க மருந்து கடைக்கு போனேன். அந்த கடை  ஓரத்தில் சிரஞ்சி, நீடில் ரெண்டு மூணு இருந்துச்சு சின்ன பசங்க அதை எடுத்து விளையாடி எதாவது காயம் ஆகிடுமோன்னு அந்த கடைக்காரரை எச்சரிக்கை செய்தேன், அப்போ சரி சரின்னு மண்டையை ஆடினார். இந்த மாசம் போன போது அதே இடத்தில் அதே போல இன்னும் சிலது இருந்துச்சு, ஒரு சின்ன பையன் அதை எடுத்து விளையாட போனான் அதற்குள்ள அவங்க அம்மா அவன இழுத்துட்டு போயிட்டாங்க. திரும்ப அந்த கடைகாரர்கிட்ட இதை எல்லாம் கிளியர் பண்ணுங்கன்னு சொல்லிட்டு வந்து இருக்கேன், அடுத்த தடவை போனா தான் தெரியும் என்ன பண்ணி வச்சி இருக்காங்கன்னு. எத்தனை தடவதான் சொல்லுறது, எவ்வளவு அலச்சியம். அடுத்த தடவை பார்த்த பேசாம அந்த  மருத்துவமனை டைரக்டர்க்கு கம்ப்ளைண்ட் பண்ண வேண்டியது தான்.


விளம்பரம்

          தமிழ்மணம் விருதுகள் 2010யில் நானும் கலந்து கொண்டு உள்ளேன்.  இரண்டு பிரிவுகளில் கலந்து கொண்டு உள்ளேன் ஒன்று நூல் விமர்சனம், அறிமுகம் பிரிவில் 
ஏழாம் உலகம் - விமர்சனம் மற்றும் பரிசு போட்டி மற்றொன்று எது என்று எனக்கே தெரியவில்லை :(. எங்கயாவது என்னோட பேரு பார்த்திங்கனா அப்படியே ஒரு ஓட்டு போடுங்க சாமியோ, ஓட்டு போடுங்க ..



                   
--
With Love
Romeo ;)

Monday, December 13, 2010

டர்ர்ர்ர்ர்ர்ர் ஆனேன்



AntiChrist (2009)

        

  
       கொய்யால இந்த மாதிரி படம் எடுக்க எல்லாம் தில் வேணும், அதே போல இந்த படத்தை பார்க்கவும் கொஞ்சம் தில் வேணும். படத்தில் மொத்தமே இரண்டே கதாபாத்திரம் தான். முதல் பத்து நிமிடம் பின்னணியாக ஒரு பாடல் ஒலித்து கொண்டே கருப்பு வெள்ளையில் படம் ஆரமிக்கிறது, செம மஜாடான்னு பார்க்க ஆரமிச்சா, அடுத்த நிமிடமே நெஞ்சை பதறவைக்கும் அந்த குழந்தையின் மரணம். குழந்தை இறந்ததற்கு தான் தான் காரணம் என்று சைக்கோ ஆகும் அந்த கதாநாயகியை குணப்படுத்த அவள் கணவன் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வீணாக போகிறது. எல்லாத்துக்கும் இவன் தான் காரணம் என்று கணவனையே கொல்ல முயலும் அந்த பெண், அவளை எப்படியாவது காப்பாற்ற முயலும் அவளின் கணவன் இவங்களுக்கு நடுவில் நடக்கும்  நீயா நானா ஆட்டம் தான் கதை. 

 படம் கொஞ்சம் போர் அடிச்சாலும் டெர்ரர் சீன் நிறைய இருக்கு. அந்த பெண் கதாபாத்திரத்தில் நடித்தவருக்கு செம தில், அது என்னன்னு எல்லாம் இங்க சொல்ல  முடியாதுங்க அவ்வளவு விஷயம் இருக்கு படம் முழுக்க.  ஏனோ இந்த படம் என்னை அவ்வளவாக  ஈர்க்கவில்லை.  நிறையவே உவ்வ்வவ..


Exam (2009) 

  

   அதுவா இருக்குமா.. இதுவா இருக்குமா.. இல்ல இது தான் இருக்கும்.. இல்ல இல்ல வேற ஒண்ணு இருக்கும். ஒரு வேளை முதலில் பார்த்தது தான் இருக்கலாம். 

    இப்படி மண்டையை பிச்சிகிற மாதிரி ஒரு படம் இருக்குனா அது இது தான். ஒரு ரூம் 8 போட்டியாளர்கள், ஒரு செக்யூரிட்டி, ஒரு கேள்வி , ஒரு பதில், ஒரே ஒருவருக்கு தான் வேலை.  எல்லோரிடமும் ஒரு தாள் இருக்கும் ஆனால் கேள்வி ஏதும் அதில் இருக்காது, கேள்வியை நீங்கள் தான் கண்டு பிடிக்க வேண்டும் அதற்கு பதிலும் வேண்டும் 80 நிமிஷம் தான் அவர்களுக்கு கேடு. 

   கண்டு பிடிச்சாங்களா இல்லையா என்பது தான் கிளைமாக்ஸ். நல்ல puzzle கேம் உள்ள படம். படம் ஒரே ரூமில் நடக்கும் கதை என்றாலும் கொஞ்சம் கூட போர் அடிக்காம போகுது. இந்த மாதிரி படத்திற்கு திரைக்கதை மிக முக்கியம் அதை சாமாத்தியமா செஞ்சு இருக்காங்க. படம் பார்த்துட்டு இருக்கும் போதே சின்னதா ஒரு க்ளு கிடைச்சுது, பட் அதுவா இருக்குமான்னு ஒரு சந்தேகத்தில் இருந்தேன் கடைசில் அதே தான். சான்ஸ் கிடச்சா மிஸ் பண்ணாம பாருங்க. 

    
The Others (2001)


   சத்தியமா என்னை டர்ர்ர்ர் ஆக்கிய படம் என்றால் அது இது தான். இந்த படம் ஒரு வீட்டினுள் நடக்கிறது Nichole Kidman அவளில் அன்னா, நிக்கோலஸ் என்று ரெண்டு குழந்தைகள் அப்பறம் வேலை ஆட்கள் முவர் அவ்வளவுதான் இந்த படத்தின் கதாபாத்திரங்கள். பதினைந்து ரூம் அதற்கு ஐம்பது சாவி, குழந்தைகளுக்கு வெளிச்சம் என்றாலே ஆகாது, வீடு எப்பொழுதும் இருட்டில் தான் இருக்கும். கொஞ்ச நாட்களாக அன்னா விக்டர் என்கிற ஒருவனை இங்கே பார்த்தேன் அங்கே பார்த்தேன் என்று சொல்லி கொண்டு இருக்கிறாள். இதை நம்பாத நிக்கோல் கிட்மேன் ஒரு சந்தர்ப்பத்தில் அவள் நம்பும்படி சில சம்பவங்கள் நடக்கிறது. அதற்கு யார் காரணம்?? விக்டர் என்பது யார்?? அவர் குழந்தைக்கு என்ன ஆயிற்று?? என்கிற கேள்விக்கு பதிலை படத்தை பாருங்க தெரியும்.   

  இது பேய் படம் போல இருக்கும் ஆனால் பேய் எல்லாம் இல்லை அதற்கு பதில் வேறு ஒன்று இருக்கிறது. பின்னணி இசை சான்சே இல்ல அவ்வளவு சூப்பர், படத்தில் பாதி வேலையை பின்னணி இசையாலே நம்மளை கதி கலங்க வச்சிடுறாங்க.  படத்தின் கிளைமாக்ஸ் கொய்யால கொஞ்சம் கூட நினைச்சி பார்க்க முடியல. படத்தின் கடைசி இருபது நிமிடம் தான் அட போட வைக்கிறது என்ன ஒரு ட்விஸ்ட். திரில்லர் படத்திற்க்கு என்ன வேண்டுமோ அத்தனையும் உள்ளது. Don't Miss this movie . 




--
With Love
Romeo ;)

Thursday, November 25, 2010

காடு - ஜெயமோகன்

ஏழாம் உலகம் புத்தகம் படிக்கும் வரை எனக்கு ஜெயமோகன் எழுத்தின் ஸ்பரிசம் அவ்வளவாக இல்லை. இணையதளத்தில் படிப்பதோடு நிறுத்திவிட்டேன், ஏதோ ஒரு ஊந்தலில் வாங்கிய ஏழாம் உலகம் என்னை உலுக்கி எடுத்துவிட்டது அவ்வளவு நெருக்கமாக ஒரு நாவலை நான் வாசித்தது இல்லை என்பதால் உண்டான உணர்ச்சி அது. அதற்கு எந்தவிதத்திலும் சோடை போகாத நாவல் காடு. 

     நாவலின் தலைப்பே சொல்லிவிடும் கதை எங்கு பயணிக்க போகிறது என்று. ஒரு பதிவரிடம் ஜெயமோகன் எழுத்துகள் எப்படி இருக்கும் என்று கேட்டேன். ஜெயமோகன் எழுத்தை படிக்கும் போது அவர் நமது கையை பிடித்து அந்த இடங்களை அழைத்து செல்வது போல இருக்கும் அவ்வளவு நெருக்கமான படைப்புகள் எல்லாம் என்றார். காடு படிக்கும் போதே அவர் சொன்னது அத்தனையும் உண்மை என்று புரிந்துகொண்டேன் நன்றி மணிஜி 

    கிரிதரன் தனது மகன் சிவராமனின் மகளை கட்டி குடுத்த ஊருக்கு செல்கிறார். செல்லும் வழியில் தான் வேலைசெய்த சிற்றாறு பட்டணங்கால் கால்வாய் கடக்கும் போது முன்பு அதே இடத்தில வேலை செய்த போது ஒரு கல்வெட்டில் தனது பெயரை எழுதி வைத்ததை நினைவுப்படுத்தி அங்கே சென்று பார்க்கிறான். அங்கு அவன் பெயர் மட்டும் அல்ல ஒரு மிளாவின் கால்தடமும் பதிந்து உள்ளதால் அதை காணவேண்டி அங்கே செல்கிறான். 

   கிரி வீட்டிற்கு ஒரே பிள்ளை அப்பா ஜோசியம் என்று சப்பை கட்டு கட்டிக்கொண்டு வாழ்கையை ஒட்டி கொண்டு இருப்பவர். அம்மா தான் குடும்பத்தை காப்பாற்றி கொண்டு இருக்கிறாள். தனது அண்ணனிடம் மகனை வேலைக்கு சேர்த்து விடுகிறாள். கிரிதரனை காட்டில் நடக்கும் அவரின் கட்டுமான வேலையை மேற்பார்வையிட அங்கு அனுப்பி வைக்கிறார். வந்த இடத்தில நீலி என்கிற மலைசாதி பெண்ணிடம் காதல் கொள்கிறான்,  விஷ காய்ச்சலால் நிலி மரணம் அடைகிறாள் அதன் பிறகு வேணியை கல்யாணம் செய்து கொண்டு வாழ்க்கையை வெல்ல முடியாமல் துவண்டு போய் ஒரு வழியாக முன்னேறுகிறான்.

    கிரிதரன் காடுகளில் எப்படி வாழ்ந்தான், பயந்து நடுங்கிய நாட்கள், பயமே இல்லாமல் கழித்த இரவுகள், குட்டப்பன், ரொசாலம், குருசு, நீலி என்கிற ஆதிவாசிபெண்,  மாமாவின் மனைவி, மாமனின் மகள் வேணி, ரெஜினா, சினேகம்மை, அய்யர் என்கிற என்ஜினியர்யுடன் ஏற்பட்ட நட்பு மற்றும் சிலர்..  இவர்களில் யாராவது ஒருவர் இவனுடன் பயணித்து கொண்டே இருகிறார்கள்.


   ""ராத்திரியில காடு ஒரு பெரிய கொண்டாட்டமா மாறிடும். உண்மையில் ராத்திரிதான் காடு முழிச்சுக்குது. மனுஷங்க போத்திட்டு துங்குறாங்க""


   கிரிதரன் முதல் முறை காட்டில் வழிதவறி சென்றுவிடுகிறான், வழிதவறிய பிறகு அவனிடம் ஏற்படும் பயம் எப்படியாவது அங்கு இருந்து தப்பி வந்துவிட வேண்டும் என்று பதறும் இடம் நம்மையும் சேர்த்தே தோற்றி கொள்கிறது, முதலில் ஏற்பட்ட அந்த பயம் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக விலகி காட்டில் இரவில் தனியாக சுற்றும் அளவுக்கு தேறிவிடுகிறான். முதலில் பன்றி கூட்டதை பார்த்து பயந்தாலும், பிறகு ஒரு இரவில் யானைகளுக்கு நடுவே மாட்டி கொண்டு சாமர்த்தியமாக தப்பித்து கொள்கிறான். காட்டில் தனியா செல்லும் அளவுக்கு தைரியத்தை நீலி மீது ஏற்ப்பட்ட காதலால் தான் என்று சொல்லலாம். இளமையில் இரவில் காட்டில் தனியா சுற்றி அலையும் கிரிதரன் வயதான பின்னால் இருட்டாக இருக்கும் சாலையை கடப்பதற்கு மிகவும் பயந்து நடுங்குகிறான். யாரவது ஒருவர் துணை இல்லாமல் அந்த இடத்தை கடந்து போக முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறான்.


      அம்மா சொன்னாள் என்கிற ஒரே காரணத்திற்காக வேணியை கல்யாணம் செய்துகொள்கிறான். ஆரம்பத்தில் இருந்தே வேணியை வெறுப்பவனாக இருக்கும் கிரிதரன் சொத்துக்காக அவளை கல்யாணம் செய்ததாக மற்றவர்கள் சொல்வதை கேட்டு நிறைய குழப்பம் அடைகிறான், பிறிதொரு நாளில் அவளை கல்யாணம் செய்து கொண்ட பிறகு வேணியே இந்த கேள்வியை அவனிடம் கேட்கிறாள். வேணியை கல்யாணம் செய்துகொண்டாலும் அவளின் அம்மா கிரிதரனை வேறு ஒரு கண்ணோட்டத்தில் பார்க்கிறாள்.    

        
     கிரிதரன் மற்றும் குட்டப்பன் வாயிலாக காட்டை விவரித்து இருக்கிறார் ஜெமோ. முதல் தடவை காட்டில் தொலைந்து போன போது எப்படியாவது அங்கு இருந்து தப்பிக்க வேண்டும் என்று அவன் செய்யும் முயற்சிகளை விவரித்து இருந்த இடம் அருமை.  கிரிதரனுடன் வேலைசெய்யும் குட்டப்பன் வாயிலாக காட்டை பற்றி நிறைய சொல்லி இருக்கிறார். காட்டில் எப்படி வாழவேண்டும் என்று குட்டப்பனை கேட்கலாம் அவ்வளவு விஷயம் உள்ளவனாக காடு பற்றிய எல்லா கேள்விகளுக்கும் பதில் வைத்து இருக்கிறான். இரவில் காடு எப்படி இருக்கும் என்று விவரித்து இருக்கும் இடம் அவ்வளவு அழகு ரொம்பவே ரசிக்கும் படியான இடங்கள் அது. காடு என்றால் கொடிய மிருகங்கள் அதிகமாக இருக்கும் இடம் என்று நினைத்தேன். ஆனால் புத்தகத்தை படித்த வரை அப்படி ஒன்றும் கொடிய மிருகங்கள் இந்த காட்டில் வாழ்ந்ததாக தெரியவில்லை. வாழ்வின் அர்த்தங்களை அய்யர் மூலம் எளிமையாக சொல்லி இருக்கிறார்.


   காடு  பற்றி மட்டும் சொல்லாமல் மிஷனரிகள் செய்யும் மதமாற்று வேலையையும் இங்கே காண முடிகிறது. காட்டில் விஷ காய்ச்சல் வந்து நிறைய உயிர் இழப்புகள் நேரிடும் போது அவர்களுக்கு உதவுவதற்காக கீழே இருக்கும் வேறு ஒரு மிஷனரி மருத்துவமனை வந்து மருந்து வாங்க வருகிறான். இவனின் செயலை பார்த்து நீ மதம் மாறிக்கொள் என்று நேரடியாக கேட்கிறார்.

   இன்று நேற்று என்று நாவல் அங்கும் இங்குமாக மாறி மாறி பயணிக்கிறது உண்மையில் அட்டகாசமான திரைகதை போல உள்ளது அந்த கால மாற்றங்கள் எல்லாம். கதை நடக்கும் இடம் நாகர்கோயில் என்பதால் அந்த ஊரின் பாஷையில் தான் எல்லா கதாபாத்திரங்களும் பேசிகொள்கிறார்கள். இது கொஞ்சம் நெருடலாக இருக்கிறது பத்தியை படிக்கும் போது இருக்கும் வேகம் வசனங்கள் என்று வரும் போது வேகத்தடையை தாண்டும் வண்டியை போல மெதுவாக ஏறி இறங்கி செல்கிறது. ஏழாம் உலகம் படித்தால் கொஞ்சம் தடுமாற்றம் இல்லாமல் பயணிக்க முடிகிறது. 

    ஜெயமோகன் அவர்களுக்கு ஜாதிகள் மேல் ஏன் அவ்வளவு கோபமோ முடிந்த அளவு டாரு டாரா கிழிக்கிறார். உதாரணத்துக்கு "மேனன் சாதியினரில் 10ல் 9பேர் கடைந்தெடுத்த தேவிடியாபயல்கள். அந்த மீதி ஒண்ணு தெய்வம்" - இது எப்படி இருக்கு!!!!  


       இன்னும் நிறைய இருக்கிறது எழுத ஆனால் எல்லாவற்றையும் எழுதினால் நாவல் பற்றிய சுவாரசியம் குறைந்துவிடும். எந்த ஒரு நெருடலும் இல்லாமல் சுகமாக வாசிக்கலாம் அந்த அளவுக்கு அருமையானதொரு நாவல்.

   ஒரு நாவலை படித்து முடிக்கும் போது படிப்பவரின் கண்ணோட்டம் ஒவ்வொரு விதமாக இருக்கும். மேலே இருக்கும் அனைத்தும் காடு படித்து எனக்கு தோன்றியதை  எழுதி உள்ளேன். நாவல் படித்து பாருங்கள் வேறு ஒரு கண்ணோட்டத்தில் நீங்களும் எழுதலாம்.



--
With Love
Romeo ;)

Wednesday, November 24, 2010

மந்திரப்புன்னகை


பதிவர்களுக்காக இந்த படத்தை தனியாக திரையிட்டு காண்பித்தது நமக்கு எல்லாம் நல்லதொரு அங்கீகாரம் கிடைத்தது போல இருக்கிறது. இந்த வாய்ப்பை அளித்த இயக்குனருக்கு நன்றி. அதே போல அண்ணன் உண்மை தமிழன் சரவணன் அவர்களுக்கும் நன்றி. 


மந்திரப்புன்னகை

        மனபிறழ்வு ஏற்ப்பட்ட ஒருவனின் வாழ்கை போராட்டமே கதை. படத்தின் களம் கொஞ்சம் புதுசு என்று சொல்ல முடியாது, சொல்லியவிதம் கொஞ்சம் புதுசு.  

      முதல் பாதி வரை மனபிறழ்வு பற்றி சொல்லாமல் இரண்டாம் பாதியில் அதை பற்றி முதலே சொல்லிவிட்டது கொஞ்சம் ஆறுதல். முதல் பாதியில் இருந்த ரசனை, நையாண்டி, நகைச்சுவை எல்லாம் இரண்டாம் பாதியில் தொலைந்தது கொடுமை!! இடைவேளையில்  வெளியே வந்து படத்தை ரீவைண்ட் செய்து பார்த்தபோது  மிகவும் ரசித்தேன் என்பதற்கான காட்சிகள் இருந்தது. முடிந்த பிறகு ஏனோ அந்த நினைப்பே வரவில்லை. அம்மாவிற்கு போன் பண்ணி வீட்டுக்கு கிளம்பிட்டேன் என்று  சொன்னேன். 


     பாஸ்கர் சக்தியின் வசனங்கள் செம ஷார்ப்பாக நல்ல  ரசிக்க கூடியதாக இருக்கிறது. மகா நிறைய இடங்களில் என்னை போன்றே ரசித்தாள் என்பதற்கு  சான்றாக எனது தோள்பட்டை அடிகடி அவள் பக்கம் சென்றது. அதற்காக முக்கால் வாசி படம் வசனங்களை தாங்கி செல்வது கொஞ்சம் நெருடலாக இருக்கிறது. உணர்ச்சி தளும்பும் இடங்களில் கூட வசனத்தை புகுத்தியது ரசிக்க முடியவில்லை. கலை இயக்குனர் ரசனை அபாரமாக உள்ளது. கதிரின் அப்பார்ட்மன்ட் போதும் கவிதையாக எல்லாவற்றையும் சொல்ல. வித்யாசாகர் இசை எல்லா விதத்திலும் அருமையாக செட் ஆகி உள்ளது. பாடல்கள் பிரிவோம் சந்திப்போம் படத்தில் கேட்டது போல இருந்தாலும் ரசிக்க முடிகிறது. என்ன குறையோ பாடலை ரொம்ப எதிர்ப்பார்த்தேன், ஆனால் பாடல் சட் என்று முடிந்ததால் ஏமாற்றமே மிஞ்சியது. 

   சந்தானம் நன்றாக சிரிக்க வைத்து உள்ளார். தம்பி ராமையா அவரின்  பங்களிப்பும் ஓகே. விலைமாதராக வரும் அந்த பெண்ணின் சின்ன பாத்திரமாக இருந்தாலும் இவரும் ஓகே லிஸ்ட்டில் வருகிறார். மீனாட்சியின் கதாபாத்திரத்தை உண்மையில் எங்கேயும் பார்க்க முடியாது. எவ்வளவு அவமானங்களை  தாங்கினாலும் காதலனை ஏற்று கொள்கிற காதலியை சினிமாவை தவிர வேறு எங்கே பார்க்க முடியுமா!!  க்ளோஸ் அப் காட்சிகளில் வசனம் பேசுவதை தவிர்த்து இருக்கலாம், வாய் அசைவு சரியாக இல்லை. கொஞ்சம் போல நடித்து உள்ளார், அவரின் கதாபாத்திரம் அவ்வளவு என்பதனால் கூட இருக்கலாம். கதிர் எப்பொழுது குடித்து கொண்டும், புகைத்து  கொண்டும்  இருப்பதை ரொம்பவே  தவிர்த்து இருக்கலாம். 


       கரு.பழனியப்பன் இயக்குனராக நன்றாக பிரகாசித்து உள்ளார். அவரின் முந்தைய படங்கள் எல்லாம் குடும்பத்துடன் கண்டிப்பாக பார்க்கலாம் என்கிற உத்திரவாதம் இருக்கும். ஆனால் இந்த படத்தை அப்படி சொல்ல முடியாது, இரட்டை அர்த்த வசனங்கள் அதிகமாக அடித்து விட்டு இருக்கிறார்.  மற்ற படங்களை விட அவ்வளவு மோசம் இல்லை என்றாலும் அவரின் முந்தைய படங்களில் இருந்த முத்திரையை கொஞ்சம் அசைத்து பார்த்தது போல இருக்கிறது.  கரு.பழனியப்பன் இயக்குனராக பளிச்சிட்டாலும் நடிகனாக கண்டிப்பாக என்னால் ஏற்றுகொள்ள முடியவில்லை. இவ்வளவு மோசமான மனிதன் எப்படி இருக்கவேண்டுமோ அதே போல உருவம் இருந்தாலும் கொஞ்சம் கூட உணர்ச்சியே இல்லாதது போல இருந்தது நடிப்பு. இயக்குனராக பிரகாசிங்கள் போதும் நடிப்பு வேண்டாம். 

        Beautiful mind (2001) Russell Crowe நடித்து வெளிவந்த அருமையான திரைப்படம் படத்தின் நாயகன் இல்லாத ஒருத்தரை இருப்பது போல கற்பனை செய்து கொண்டு வாழ்வான். இந்த கருவை வைத்து மந்திரப்புன்னகை செய்து உள்ளார். இரண்டு படங்களும் ஒரே ஒற்றுமை இல்லாத மனிதரை இருப்பது போல காட்டுவது அவ்வளவு தான் மற்றபடி வேறு எந்த ஒரு இணைப்பும் இல்லை என்பதனால் கொஞ்சம் சந்தோசம். 


டிஸ்கி : நன்றாக வரக்கூடிய ஒரு ஆப் பாயில்ளை திருப்பி போட்டு  புல் பாயில் ஆக்கியது  போல இருக்கிறது. 

Tuesday, November 16, 2010

சங்கதிகள் - 16/11/10

சுயபுராணம் 


கொஞ்ச நாளா புத்தகம் படிக்கிறதையே  நிறுத்திட்டேன். பெரிய காரணம் எல்லாம் ஒண்ணும் இல்ல புதிய புத்தகம் எதுவும் இல்லை அவ்வளவுதான். வாங்கிய புத்தகத்தை எல்லாம் எத்தனை தடவை தான் படிச்சிட்டு இருக்குறது.
நிறைய புத்தகம் வாங்கணும்ன்னு ஆசை தான் ஆனா ஒவ்வொரு மாசமும்  பத்தாம் தேதியே என்னோட பேங்க் பேலன்ஸ் ஜீரோன்னு காட்டுதே என்ன பண்ண !!! போன வருஷ புத்தக கண்காட்சியில் வாங்கிய 28 புத்தகம் ஏழு மாசம் வரைக்கும் படிக்க தேறுச்சு. எந்த ஒரு விமர்சனத்தையும் படிக்காமல் வாங்கிய புத்தகத்தை விட மற்றவர்கள் வாசித்து அதை பற்றி விமர்சனம் செய்து இருக்கும் புத்தகத்தை வாங்குவது தான் நல்லதுன்னு நினைக்கிறன்.  இந்த தடவை நடக்கும் புத்தக கண்காட்சியில் எந்த புக் வாங்கலாம்ன்னு முடிஞ்ச அளவு பதிவர்கள் கிட்ட கேட்டு ஒரு லிஸ்ட் ரெடி பண்ணிட்டு இருக்கேன் பார்க்கலாம் எவ்வளவு புத்தகம் தேறும்ன்னு.


444444444444444444444444444444444444444444



எல்லா பண்டிகையும் ஒரே சமயத்தில் வருவது இல்லை ஆனால் சில விசேஷ நாட்கள் மட்டும் தொடர்ந்தார் போல வந்து சந்தோஷத்தை அள்ளி குடுக்கும். போன 11ஆம் தேதி ஜூனியர் பிறந்தநாள் கொண்டாடினோம், வரும் 23ஆம் தேதி எங்களின் இரண்டாவது திருமண நாளை கொண்டாட போகிறோம். அடுத்த மாசம் 16ஆம் தேதி மகாக்கு பிறந்தநாள் அதே மாதம் 31ஆம் தேதி என்னுடைய பிறந்தநாள்.. இரண்டே மாசத்துல இத்தனை விசேஷ நாட்கள் பர்ஸ் தாங்கல  பாஸ் :(.

444444444444444444444444444444444444444444

ஜூனியர் அப்டேட் மாதிரி மகா அப்டேட் இது. என்னோட தோழி ஒருத்தி காதல் கல்யாணம் செய்துகொள்ள போகிறாள். பையன் வீட்டில் இந்த கல்யாணத்திற்கு  சம்மதம்  கிடைக்கவில்லை, ஆனால் பெண் வீட்டில் ஓகே, இதை மகா கிட்ட சொன்னேன் எல்லாத்தையும் கேட்டுட்டு அப்போ இவங்க ஓடி போய் கல்யாணம் பண்ணிக்க போறாங்கன்னு சொல்லுங்க என்றாள், இது எப்படி ஓடி போய் கல்யாணம் பண்ணிக்க போறாங்கன்னு சொல்லுறன்னு கேட்டேன், அதான் பையன் வீட்டில் சம்மதிக்கலையே அவன் ஓடி வந்து தானே கல்யாணம் பண்ண போறான் @@@@ இது கேட்டதுல இருந்து நான் ங்ங்ங்ங்ங்ங்ங்ங் .

444444444444444444444444444444444444444444


டிவி

கொஞ்ச நாளா மொக்கை டிவி சேனல் எல்லாம் பார்த்துட்டு இருக்கேன். தமிழன் டிவி, வின் டிவி, இமயம் டிவி, கார்ட்டூன் சேனல்ன்னு. ஏன் எதற்குன்னு  தெரியல ஆனா அதில் வரும் ப்ரோக்ராம் எல்லாம் ரொம்ப புதுசா இருக்கு. எனக்கு தெரிஞ்சு தமிழன் டிவில மொத்தமே நாலு விளம்பரம் தான் இடம் பேரும். அதையேதான்  திரும்ப திரும்ப  ஒளிபரப்புவாங்க. ரியல் கோல்ட் வாஷிங் பவுடர், ரோப் ஜிம், இண்டக்ஷன் ஸ்டவ்

அப்பறம் ஒரு புளி விளம்பரம். இமயம் டிவில வரும் சில தொகுப்பாளி எல்லாம் எப்படி தேர்ந்து எடுத்தாங்கன்னு தெரியல அவ்வளவு கலரா இருக்காங்க, அப்பறம் அவங்க வாய்ஸ், டிரெஸ்ஸிங் சென்ஸ் எல்லாம்.. வேண்டாம் முடியல:(.
வின் டிவி பார்க்கா ஆரமிச்சா கொடுமையின் அடுத்த கட்டத்துக்கு போகலாம் குழல் எடுப்போம் குரல் கொடுப்போம்ன்னு ஒரு நிகழ்ச்சி வின் டிவி ஒனர் தேவநாதன் நடத்தும் யாதவ எழுச்சி பேரவையின் அருமை பெருமைகளை சொல்லி கண்ணில் நீரை வரவச்சிடுவாங்க. தினமும் ஏதாவது ஒரு நேரத்துல இந்த நிகழ்ச்சி கண்டிப்பா ஒளிபரப்புவாங்க.  இது எல்லாம் ஓகே டிஸ்கவரி சேனல் செய்யுற அழும்புதான் தாங்க முடியல. தமிழில் ஒளிபரப்பு செய்ய ஆரமிச்சு இத்தனை நாள் ஆச்சு இருந்தாலும் அவங்க விளம்பரம் எல்லாம் ஹிந்தில தான் வருது.. எதுக்கு தமிழ் சேனல்ல ஹிந்தி விளம்பரம் ?? வேற தமிழ் சேனல் எல்லாம் ஷாருகான் கூட தமிழ் பேசுறாரு, இவங்க எப்போ மாத்த போறாங்கன்னு தெரியல .           

444444444444444444444444444444444444444444


ரேடியோ



டிவி ப்ரோக்ராம் ஒரு பக்கம் இப்படினா ரேடியோ தொல்லை அதுக்கு மேல!!! சென்னைல இருக்கும் எப்.எம் ரேடியோ ஜாக்கிகள் பேசுறத கேக்குற மாதிரி வேற ஒரு
கஷ்டகாலம் இப்போதைக்கு இல்ல. பிக் எப்.எம் நிகழ்ச்சில வரும் தொகுப்பாளி எல்லாம் அவங்க பேருக்கு முன்னாடி பிக்ன்னு சொல்லுவாங்க. அதாவது பிக் அகிலா, பிக் பாஸ்கின்னு இதுல எனக்கு தெரிஞ்சி இம்சை அரசி மட்டும் தான் உண்மையாலுமே பிக்கா இருப்பாங்க ஆனா அவங்க பேசுறதை கேட்கத்தான் முடியல அவ்வளவு கர்ண கொடூரமா இருக்கு வாய்ஸ். தீனா பேசுறது நல்லா இருக்கும் டைமிங் சென்ஸ்சோட   ஜோக் அடிக்கிறது எல்லாம் நல்லா இருக்கு,  பாஸ்கி சிரியஸா பேசுறாரா இல்ல ஜோக் அடிகிறாரான்னு தெரியல அவ்வளவு மொக்கை ப்ரோக்ராம் அது. ரேடியோ ஒன்ல அருண்ன்னு ஒருத்தர் பேசுவாரு எதுக்கு எடுத்தாலும் உங்க அரும் உங்க அருண்ன்னு பிட் போடுவாரு. அது என்னங்க  உங்க அருண்??? இவரு என்ன என்னோட சொந்தகாரா இல்ல நண்பேன்டான்னு சொல்லிகிற மாதிரியான நண்பனா ??? இவங்களை எல்லாம் விட சூர்யன்  எப்.எம் நைட் யாழ் சுதாகர்ன்னு  ஒருத்தர் பேசுவாரு தமிழில் அவ்வளவு அழகா பேசுறாரு. தீபா வெங்கட் ஒரு ப்ரோக்ராம்ல ரீயாக்ஷன் (இதுவான்னு கரெக்ட்டா தெரியல)  என்ன தமிழ் அர்த்தம்ன்னு தெரியாம முழிச்சாங்க. காலைல சொல்லி வச்சா மாதிரி எல்லாம் ரேடியோ ஸ்டேஷலையும் ஏதாவது ஒரு சாமி பாட்டு பாடுது. ரேடியோ ஜாக்கிஸ் நிறைய பேருக்கு பேச தெரியுமே தவிர சுவாரசியமா பேச தெரியாது என்பது தான் உண்மை. இவங்க எப்படி பேசினா நமக்கு என்ன ஒரு சேனல்ல ஒருத்தர் பேசினா அப்படியே அடுத்த சேனல் மாதி பாட்டு கேட்டுட்டு போகலாம். எல்ல சேனலையும் பேசுறாங்களா இருக்கவே இருக்கு ரெயின்போ எப்.எம் யாரவது ஒருத்தர் கண்டிப்பா கங்கிரா மீட்டிட்டு இருப்பாரு இல்ல ஆஆஅன்னு சத்தம் போட்டு பாடிட்டு இருப்பாரு. 


 444444444444444444444444444444444444444444

போட்டோ

ஜல் புயல் அடிச்சிட்டு இருந்த நேரத்தில் நானும் ஜூனியரும் வீட்டு பால்கனில நின்னு மழையை ரசிச்சிட்டு இருந்தோம் அப்போ எங்களுக்கே தெரியாம மகா எடுத்த போட்டோ.  




444444444444444444444444444444444444444444

டான்ஸ் 
பனிவிழும் மலர்வனம் பாட்டு கேட்க எவ்வளவு அருமையா இருக்கும் ஆனால் அதை படம் ஆகிய விதம் சுத்த மொக்கை . இந்த வீடியோ பாருங்க கார்த்திக்கும், அந்த பொண்ணுக்கும் ஒரே  டான்ஸ் ஸ்டெப்ஸ் தான் கொஞ்சம் உற்று பாருங்க டான்ஸ் ஸ்டெப்ஸ் எல்லாம் கதாநாயகிக்கு உருவாக்கினது போல இருக்கும். ஆனா கார்த்திக் தான் டான்ஸ்ல ஸ்கோர் பண்ணி இருப்பாரு அதும் அந்த நீச்சல் குளத்துக்கு பக்கத்துல நின்று கொண்டு  தன்னோட இடுப்பை பிடிச்சிகிட்டு  ஆடுவாரு பாருங்க ஒரு ஆட்டம் செம கலக்கல் .. ஹி ஹி ஹி ..



444444444444444444444444444444444444444444






மகனின் ஆசை 


என்னை ரொம்ப நெகிழவைத்த ஒரு வீடியோ..  






பாட்டு


   மந்திர புன்னகை மற்றும் எங்கேயும் காதல் படத்தில் இடம் பெற்றிருக்கும் பாடல்கள் எல்லாம் அருமையா இருக்கு. மந்திர புன்னகை கவிஞர் அறிவுமதி எழுதி இருக்கும் என்ன குறையோ அட்டகாசம், வார்த்தை ஜாலங்கள் எல்லாம் சூப்பர்.  ரொம்ப நாள் கழித்து பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்து இருக்கும் மந்திர புனைகை அருமை.  எங்கேயும் காதல் படத்தில் வரும் நெஞ்சில் நெஞ்சில் அப்பறம் திம்மு திம்மு பாடல்கள் அருமையா இருக்கு. மைக்கல் ஜாக்சன் பாடலை இமிட்டே செய்து இருக்கும் பாடல் கூட நல்லா இருக்கு.


444444444444444444444444444444444444444444



காமெடி

சேரனின் டுரிங் டாகீஸ் படிச்சிட்டு இருந்த போது ஒரு பத்தி செம சிரிப்பை வரவழைத்தது.

புளி சோறு என்ற ஒரு வஸ்து இருக்கிறதே.. அதற்கு தமிழர்களின் வாழ்வுக்கும் அப்படி ஒரு பந்தம் உண்டு. நீல் ஆம்ஸ்ட்ராங் மட்டும் தமிழனாக இருந்தால், நிலவுக்கு செல்லும்போது நிச்சயம் அவர் அம்மா புளிச் சோறுதான் கட்டி கொடுத்திருக்கும். 





444444444444444444444444444444444444444444



--

With Love

Romeo ;)

Wednesday, November 10, 2010

முதலாம் பிறந்தநாள்





நாளை ஜூனியர்க்கு முதலாம் பிறந்தநாள். மஹாக்கு கூட டிரஸ் எடுத்துடலாம் போல ஜூனியர்க்கு டிரஸ் எடுக்குறதுக்குள்ள தாவு தீந்துடுச்சு. அப்பறம் கேக், எனக்கு இந்த கேக் வெட்டி தான் பிறந்தநாள் கொண்டாட வேண்டும் என்கிற ஆசை எல்லாம் இல்லை ஆனா மஹாக்கு அவ்வளவு ஆசை, வேறு வழி இல்லாமல் எல்லாவற்றுக்கும் சரி என்று சொல்லிவிட்டேன். 



ஜூனியர் பிறந்த போது நான் எழுதிய இந்த இடுக்கையை ஒரு முறை ரீவைன்டு பண்ணி பார்த்தேன். இப்போ தான் எழுதியது போல இருக்கு அதுக்குள்ள ஒரு வருஷம் ஆச்சு ஜூனியர் பிறந்து.

11/11/10 இன்னும் ஒரு முக்கியமான நாள் தான் எங்களுக்கு .



--
With Love
Romeo ;)

Wednesday, November 3, 2010

சிரிக்காதிங்க ப்ளீஸ்


ஹலோ பதிவின் தலைப்பை படிச்சீங்களா இல்லைனா மறுபடியும் படிங்க பதிவின் தலைப்பை போல நடந்துக்கணும் ஓகே .... 

ஜூனியர் விகடன் முழுக்க முழுக்க அரசியல் மற்றும் புலனாய்வு சம்பந்தப்பட்ட செய்திகளை தாங்கி வரும் பத்திரிகை. வாரம் இருமுறை வெளியிடப்படும் இந்த பத்திரிகையில் சில சமயம் காமெடி மேட்டர் எல்லாம் சீரியஸா எழுதி கலக்குவாங்க அப்படிப்பட்ட ஒரு மேட்டர் தான் நீங்க படிக்கபோறிங்க.. திரும்பவும் சொல்லுறேன் சிரிக்காதிங்க ப்ளீஸ் .. 



  



--
With Love
Romeo ;)

Wednesday, October 27, 2010

உறுபசி - எஸ்.ராமகிருஷ்ணன்

சாவு வீட்டுக்கு சென்றால் அந்த வீட்டில் இருந்து வரும் அழுத்தமான அழும் குரலை கேட்கும் போது மனசை ஏதோ செய்யும். இறந்தவரை பற்றி சிலர் பேசிக்கொண்டு இருப்பார்கள், அவரின் கடந்த காலம், அவர் செய்த நல்லது கெட்டது எல்லாம் அங்கே அசை போட்டு கொண்டு இருப்பார்கள். இந்த சாவு நமது வீட்டில் நடந்து இருந்தால் எப்படி இருக்கும் என்று சில நிமிடங்கள் பயம் கலந்த நினைப்பு வருவதை நிறுத்த முடியாது. 2006 என்று நினைக்கிறன் தம்பி, நண்பன், உறவுக்காரர் ஒருவர் என்று அடுத்து அடுத்து சில மரணங்களை சந்தித்த போது அடுத்தது யாராக இருக்கும் என்று எனக்குள் நிறைய கேள்வி கேட்டுக்கொண்டேன். ஒரு கட்டத்தில் நண்பன் ஒருவனுக்கு போனில்  புலம்பினேன் மச்சான் அடுத்து யார்ன்னு தெரியலடா மாசம் ஒண்ணுன்னு  மூணு மாசமா தொடர்ந்து யாரவது செத்துட்டு இருக்காங்க அடுத்து யார்ன்னு தெரியலன்னு புலம்பினேன். ஒரு கட்டதில் அது நானாக இருந்தால் என்கிற நினைப்பு வந்து இருந்த கொஞ்ச நஞ்ச நிம்மதியையும் கெடுத்து தொலைத்தது. அடுத்த  மாதம் எந்த சாவும் விழாததால் கொஞ்சம் கொஞ்சமாக சாவு பயத்தில் இருந்து விலகினேன்.

ஒரு மனிதன் தன் வாழ்கையில் எப்படி எல்லாம் வாழ வேண்டும் என்று நினைத்து அதன்படி வாழ்ந்து உள்ளான் ? அல்லது உங்களிடமே இந்த கேள்வியை கேட்டு பாருங்கள் இந்த சமயம் நான் இப்படி வாழ நினைக்கிறேன் அதை செய்வதால் என்ன லாபம் அல்லது நஷ்டம்  என்று நினைத்து கூட பார்க்காமால் அதை உடனே செய்துவிடுவது என்று ஒரு நாளாவாது அதை செய்தது உண்டா!!!  ஆனால் இந்த நாவலில் வரும் சம்பத் இந்த சமயம் இதை செய்யபோகிறேன்  என்று தனக்கு தானே முடிவு செய்து  அதன்படி  நடப்பவன். தனக்கு தோன்றியதை  சரியா தவறா அதனால் மற்றவர்கள் பதிப்பு அடைவார்களா என்று ஒரு கணமும் யோசிக்காமல் செய்பவன். நாவலை முழுவதும் படித்து முடிப்பதற்கு முன்பே நாம் ஏன் சம்பத்தை போல இல்லை என்கிற எண்ணம் தோன்றுவதை நிறுத்தமுடியவில்லை. 


சம்பத் இறந்துவிட்டான் என்கிற செய்திவுடன் நாவல் தொடங்குகிறது.அழகர், சம்பத், ராமதுரை, மாரியப்பன் மற்றும் யாமினி எல்லோரும் ஒரே கல்லூரியில் வகுப்பில் தமிழை முதல் பாடமாக படித்தவர்கள். முதலில் அழகர் முலமாக சம்பத் பற்றிய நினைவுகள் விரிகிறது. பிறகு ராமதுரை, மாரியப்பன், சம்பத் மனைவி ஜெயந்தி, யாமினி என்று இவர்கள் முலமாக சம்பத்தின் கடந்த கால வாழ்கையை தெரிந்து கொள்ள முடிகிறது. 

நண்பர்கள் மூவருக்கும் சம்பத் மீது அன்பு இருந்தாலும் அவனை தூரத்தில் வைத்து தான் பார்க்கிறார்கள். அழகருக்கு சம்பத்தை பிடித்து இருந்தாலும் அவன் சம்பத்தை அவ்வளவு நெருக்கத்தில் வைத்து பார்த்து கொண்டது இல்லை. அது சம்பத் செய்த சில செயலுக்காக கூட இருக்கலாம். அழகரின் திருமணத்திற்கு கலந்துகொள்ள விருப்பம் இல்லை என்று அவன் திருமண தினத்தில் ஒரு தந்தி அனுப்புகிறான் சம்பத். ராமதுரை மட்டுமே அவ்வபோது சம்பத்தை அரவணைத்து செல்கிறான். யாழினி அவனுக்கு சில உதவிகளை செய்கிறாள். ஜெயந்தி அவனை தோளோடு அணைத்து கொண்டு அவன் செல்லும் இடங்களுக்கு எல்லாம் ஆட்டு குட்டியை போல செல்கிறாள்.  

தன்னை ஒருவரும் நெருங்க முடியாமல் இருக்க வேண்டும் என்று நினைத்துகொண்டு செய்கிறானா அல்லது அவன் ஒரு பைத்தியகாரனா என்று தோன்றும் அளவில் இருக்கிறது அவன் செயல்கள். அவனை ஹீரோ என்பதா அல்லது ஜீரோ என்பதா என்று நாவல் முடிந்த பிறகும் மனதுக்குள் சண்டை போட்டு கொண்டு இருக்கிறது.

சம்பத் தேர்ந்தெடுத்த அரசியல்வாதி போல இருக்கிறான், ஒரு நல்லா விற்பனையாளன் போல செயல்ப்படுகிறான், ஒரு தொழில் அதிபர் போல நர்சரி வைத்து பராமரிக்கிறான், சம்பத்துக்கு எது செய்தாலும் அதில் ஒரு தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து செயல்படுகிறான் ஆனால் எந்த ஒரு செயலையும் முழுவதுமாக செய்து முடிக்கமாட்டான். அரசியலாக  இருந்தாலும் சரி, வேலையாக இருந்தாலும் சரி அல்லது காதலியாக இருந்தாலும் சரி பாதிலையே கழற்றி விட்டுவிடுவான். சம்பத் அவன் வழியில் சென்று கொண்டு இருந்தான் என்று தான் சொல்லவேண்டும். ஜெயந்தியிடம் சம்பத் பலமுறை கேட்க்கும் ஒரே கேள்வி என்னை பைத்தியம்ன்னு நினைகிறாயா??? அதற்கு அவள் கண்ணீரோடு இல்லை என்கிறாள். 

காலம் தான் ஒரு மனிதனை எப்படி எல்லாம் மாற்றுகிறது, கல்லூரியில் படிக்கும் போது வகுப்புக்கு கருப்பு சட்டை அணிந்து வந்து ஆசிரியரை எதிர்த்து பேசிய நாத்திகவாதி சம்பத் பிறகு தனது செயல்களுக்காக கன்னியாஸ்திரி ஒருவரிடம்  காலை பிடித்து மன்னிப்பு வழங்க வேண்டும் என்று கெஞ்சுகிறான்!! சம்பத் எதை நோக்கி செல்கிறான் என்றே தெரியவில்லை, கால்போன போக்கில் வாழ்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறான். ஜெயந்தியை கூட ஒரு நாள் விட்டு செல்ல துணிந்துவிடுகிறான். 

  
ஆசிரியர் நாவலை கொண்டு சென்ற விதம் வெகு அருமை, ஒவ்வொரு கதாபாத்திரமும்  அவர்களின் வாயிலாக சம்பத்தை பற்றி விவரித்த விதம் சிம்ப்ளி சூப்பர். நாவலை படிக்க ஆரமித்த முதல் முடியும் வரை கீழே வைக்கவே முடியவில்லை அந்த அளவுக்கு சம்பத் அடுத்து என்ன செய்து இருப்பான் என்கிற கேள்வியை நோக்கியே நாவல் நகருகிறது. கொஞ்சமும் அயர்ச்சி தராத எஸ்.ரா அவர்களில் வார்த்தை ஜாலங்கள் பற்றி என்ன சொல்ல!!!

வரும் புத்தக கண்காட்சியில் நீங்கள் வாங்க நினைக்கும் புத்தகங்களின் வருசையில் கண்டிப்பாக இதையும் சேர்த்து கொள்ளுங்கள். 

படித்து பாருங்கள் புத்தகத்தை பற்றி நான் எழுதியதை விட பண்மடங்கு மேலான எண்ணத்தை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளவீர்கள்.

உறுபசி - எஸ்.ராமகிருஷ்ணன் 
விலை- 75
உயிர்மை வெளியிடு
சென்னை 

--
With Love
Romeo ;)




Thursday, October 21, 2010

பயன், பட்டாசு, புன்னகை

1.
எழுதுவது எல்லாம் எழுத்து அல்ல 
ஆனால் எழுதி கொண்டு இருப்பது தான் சுகம் 
எழுதுவது சுகம் தான் 
ஆனால் எழுதுவதால் என்ன பயன் 
உண்மைதான் 
எது 
என்ன பயன் என்பதில் 


2.
நீ மழையில் நனைவது நல்லது தான் என்றேன்  
ஏன் என்றாள்  
மழையும் கொஞ்சம் புண்ணியம் தேடிக்கொள்ளுமே 
இதற்கும் புன்னகைத்தாள்
 
3.
பட்டாசு தீர்ந்தது 
மத்தாப்பு மறைந்தது 
புஸ்வானம் பொரிந்தது 
ராக்கெட் பறந்தது 
அப்பறம் 
அவ்வளவு தான் பக்கத்துக்கு 
வீட்டுல வெடிச்சாங்க என்றான் மகன் 
அப்படியா என்றான் 
போனஸ் வாங்காதவன். 
 


--
With Love
Romeo ;)

Monday, October 18, 2010

சங்கதிகள் - 18/10/10



சந்தோஷமான ஒரு விஷயம் நடக்க போறதா இருந்தா எவ்வளவு  சந்தோஷாமா இருக்கும். அதே போல ஒன்று நடக்க இருக்கிறது. பத்து வருடங்கள் கழித்து ஸ்கூலில் படித்த நண்பர்கள் எல்லாம் ஒன்று சேர போகிறோம். நண்பர்கள் நிறைய பேர் போனில் தொடர்பு இருந்தாலும் எல்லோரும் சேர்ந்தா போல பார்த்து கொண்டது இல்லை. நவம்பர் மாதத்தில் ஒரு நாள்  எல்லோரும் சந்திக்கலாம் என்று ஒரு புள்ளியாய் ஆரமித்து உள்ளோம் அதற்கு வடிவம் குடுக்க இனிதான் ஆரமிக்க வேண்டும். 





போன வாரத்தில் ஒரு நான் ஆபீஸ்க்கு ட்ரெயின்ல வந்துட்டு இருந்தேன் வண்டி சைதாபேட்ல இருந்து கிளம்பும் போது ஒரு அம்மா ஆப்பிள் வித்துட்டு வந்துச்சு கூடையில் 30 பழங்கள் இருந்து இருக்கும். அவங்களும் ஆறு பழம் முப்பது ருபாய்ன்னு கூவிட்டே வந்துச்சு, அந்த பெட்டியில  யாருமே அவங்க கிட்ட பழம் வாங்கவே இல்ல. வெறுத்துபோய் எல்லோரையும் திட்ட ஆரமிச்சிடுச்சு, பத்து ருபாய்க்கு ஆறு பழம் குடுத்த வாங்கிபீங்களான்னு அடுத்து ஒரு கேள்வி கேட்டுச்சு யாரும் பதில் சொல்லலை. பாவம் அன்னைக்கு வியாபாரம் ஆகலைன்னு புலம்பிட்டே போச்சு. 


இதும்  ட்ரெயின் மேட்டர் தான், ஒரு நாள் சென்ட்ரல் ஸ்டேஷன்ல இறங்கி பார்க் ஸ்டேஷன்க்கு நடந்து வந்துட்டு இருந்தேன். அது நல்லா பீக்ஹவர், எனக்கு முன்னாடி புள்ளதாச்சி பொண்ணு நடந்து போயிட்டு இருந்து பக்கத்துல அந்த அம்மா புருஷன்  வந்துட்டு இருந்தான். அந்த பொண்ணு என்ன சொல்லுச்சுன்னு தெரியல அவ பின்மண்டையில் பொளேர்ன்னு ஒண்ணு வச்சான், அவன் அடிச்ச சவுண்ட் கேட்டு முன்னாடி போயிட்டு இருந்தவங்க பின்னாடி வந்துட்டு இருந்தவங்க எல்லாம் ஒரு செகண்ட் நின்னு பார்த்தாங்க, அந்த பொண்ணு பார்க்க பாவமா இருந்துச்சு. இப்படி எல்லோரு முன்னாடியும் பொண்டாட்டியை அடிக்கிறதுல அந்த ஆளு என்ன சுகத்தை கண்டான்னு தெரியல.  



மைனா படத்தில் நரேஷ் ஐயர் மற்றும் சாதனா சர்கம் பாடி இருக்கும் ""கைய புடி கண்ணா பாரு"" பாட்டு கேட்டு இருக்கீங்களா !!! அவ்வளவு ரசனையா இருக்கு. ஸ்லோவா ஆரமிக்கும் பாட்டு அப்படியே ஹைய் பிட்ச்ல போகும் இடம் இருக்கே சான்ஸ்சே இல்ல அவ்வளவு சூப்பர். வயோலின் இசைக்கிற இடம் அதை விட சூப்பர் .. மறக்காம கேட்டு பாருங்க இமான் கலக்கி இருக்காரு . 





கேபிள் சங்கரின் குளிச்சா.. குத்தாலம் -2  பதிவை படிச்ச போது பார்டர் கடைக்கு போகலைன்னு சொல்லி இருந்தாரு அப்படி என்ன இருக்கு அந்த கடையில்ன்னு கூகுள் ஆண்டவர் கிட்ட கேட்டாப்போ அவர் குடுத்த லிங்க்ல ஒன்னை  புடிச்சு போனேன். அது பதிவர் அந்தணன் அவரின் ப்ளாக் கொண்டு சேர்த்தது எதையோ படிக்க போய் அவர் ப்ளாக் முழுக்க படிச்சேன் .. செம சூப்பரா எழுதி இருக்காரு என்ன ஒரு காமெடி சென்ஸ் சினிமா மேட்டர் எல்லாம் அவ்வளவு சுவாரசியமா எழுதி இருக்காரு. நீங்களும் போய் படிச்சி பாருங்க நான் சொன்னது எவ்வளவு உண்மைன்னு தெரியும்.  






கல்யாணம் பண்ணிக்க போற ரங்கமணிகளுக்கு எல்லாம் ஒரு அட்வைஸ். எப்பயும் சாப்பிட்ட பிறகு தங்கமணிக்கிட்ட சண்டை போடுறது நல்லது, இல்லேன்னா சாப்பாடு கிடைக்காது. அதே மாதிரி பொய் பேசுறதுக்கு பதில் உண்மையை பேசிடுங்க, நமக்கு கிட்ட பொய் எல்லாம் ரொம்ப நேரம் தங்காது. அவங்களுக்கு உண்மை தெரிஞ்சா அப்பறம் அவஸ்தைப்படவேண்டம்.



ஜூனியருக்கு கொஞ்சம் கொஞ்சம் விவரம் தெரிய ஆரமிச்சிடுச்சு. டிவி ரிமோட் குடுத்தா அதை டிவிக்கு நேர எடுத்து காமிக்கிறார், போன் குடுத்தா காதில் வைக்கிறார், பவுடர் அடிக்கும் ஸ்பான்ச் குடுத்தா அதை முகத்தில் வைத்து அழுத்துகிறார். பார்க்க பார்க்க சந்தோசமா இருக்கு :)
    
  




--
With Love
Romeo ;)


Thursday, October 14, 2010

ஐயா சாமி



நாஸ்டா  எதும் இல்லை 
துண்ண. 
ஐயா சாமின்னு சொல்ல 
மட்டும் சொல்லி 
என்னத்த பண்ண.. 

ஐயா சாமி தர்மம் பண்ணுங்க 
எட்டி நின்னு பாத்த  
ஒரு எசமான் வாயில் இருந்து 
நாராசமாய் வந்து உளுது  
ச்சி ச்சி நாயே அந்தாண்ட போ 

குளிக்க ஆசை தான் 
ஆனால் அதுக்கும் கூட 
பைசா கேக்குறான் 
சுலப் இன்டர்நேஷனல் குப்புசாமி.

ராத்திரி தூங்கும் போது
நைசா கால உடுறாரு 
ரெண்டு கைளையும் 
வெரலு இல்லாத 
குஷ்டரோகி மன்னாரு

இன்னைக்கு பொழுது போகுமா 
தெரியலப்பா
பைசா இருக்கா 
இல்லபா 
நாதேறி போய் 
அந்த ட்ரெயின்ல
தலைய உடு
சரிப்பா
அப்பா 
நான் செத்துட்டா
உன்ன யாரு கண்ணம்மா பேட்ட
சுடுகாட்டுக்கு தூக்கின்னு போறது 
காப்பரேசன்காரன் வருவான்
யாரு அம்மாவை தூக்கின்னு போனானே அவனா ??? 




--
With Love
Romeo ;)

Wednesday, October 13, 2010

கோ , வெ, போ, ம, பா



கோ கோ 
கோவப்பட்டாள்

வெ வெ
வெட்கப்பட்டாள் 


போ போ  
போடா  என்றாள்

ம ம 
மாமா என்றாள் 

பா பா 
பறந்து சென்றாள் 

--
With Love
Romeo ;)

Sunday, October 10, 2010

சங்கதிகள் - 10/10/10

வேண்டுகோள்

                 இன்று இந்த நூற்றாண்டின் மிக பெரிய ஒற்றுமையான தேதி, 10/10/10 இந்த அறிய தினத்தில் நாம ஒரு உருப்படியான காரியத்தை செய்யலாமே. அதாவது 10 நிமிஷம் உங்க வீட்டில் இருக்கும் கரண்ட் சப்ளை ஆப் பண்ணிடுங்க. ஒரு வீட்டில் செய்தால் கொஞ்சம் போல கரன்ட் மிச்சம் பண்ணலாம் அதுவே ஒரு ஊராக இருந்தால் எவ்வளவோ மிச்சம் பண்ணலாம். ஸோ உங்களுக்கு தெரிஞ்சவங்க , பக்கத்துக்கு வீட்டுகாரங்க, சொந்தகாரங்க, நண்பர்கள் கிட்ட எல்லாம் கொஞ்ச நேரம் மெயின் பாக்ஸ் ஆப் பண்ண சொல்லுங்க. ஏதோ நம்மளால முடிஞ்ச சிறு உதவியா இருக்கட்டும். 


நன்றி

                இத்தனை நாளா தெரியாத ஒரு வழியை அண்ணன் பாலா சொல்லி இருக்காரு. ஆபீஸ்ல ப்ளாக் ஓபன் பண்ண முடியாம எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்று எனக்கு தான் தெரியும். ஒவ்வொரு தடவையும் மெயில் பாக்ஸ்ல டைப் பண்ணி வச்சி வெளிய இருக்கும் இன்டர்நெட் கபேல போய் போஸ்ட் பண்ணிட்டு இருந்தேன்.  இன்னைக்கு அண்ணன் போஸ்ட் படிச்ச உடனே ஒரு டெஸ்ட் பண்ணி பார்த்தேன் சூப்பரா வொர்க் ஆகுது. அண்ணே இதை எனக்கு முதலே சொல்லி இருக்கலாம்ல இருந்தாலும் ரொம்ப நன்றி அண்ணே. 


என்னம்மா யோசிக்கிறாங்க டா சாமி .. 

             கொஞ்ச நாளுக்கு முன்னாடி நானும் தங்கமணியும் டிவி பார்த்துட்டு இருந்தோம் அப்போ ராஜ் டிவில சினிமா தெரியமான்னு ஒரு நிகழ்ச்சி மொக்கையான ஒரு கேள்வி கேட்டு பதில் சொல்லுங்கன்னு ஒருத்தர் பேசிட்டு இருந்தாரு. பதில் சொன்னா பணம்  பரிசுன்னு போட்டு இருந்துச்சு. சரி நானும் என்னோட போன்ல ட்ரை பண்ணிட்டு இருந்தேன் லைன் போகவே இல்ல. தங்கமணி போன் எடுத்து ட்ரை பண்ணேன் லைன் கிடைச்சுது பட் அது ஆட்டோமாடிக் வாய்ஸ், அதாவது என்னோட கால் வெயிட்டிங்  லிஸ்ட்ல இருக்குன்னு சொல்லுச்சு. சரின்னு நான் அஞ்சி நிமிஷமா காதுல வச்சு பார்த்துட்டு இருந்தேன் டிவில பேசிட்டு இருந்தவன் விடாம பேசிட்டே இருக்கான் ஆனா ஒருத்தரும் லைன்ல இல்ல. திடிர்ன்னு கால் கட் ஆகிடுச்சு என்னடான்னு பார்த்தா மொபைல் பலன்சே இல்ல. அஞ்சி நிமிஷத்துல ஐம்பது ருபாய் போச்சு!!!.. அட பாவிங்களா இவங்க கில்லாடி தனத்தை அப்போ தான்  தெரிஞ்சிகிட்டேன்,  ப்ரோக்ராம் பார்த்துட்டு இருந்தேன் பத்து நிமிஷமா அந்த பையன் பேசிட்டு இருந்தானே தவிர ஒருத்தரும் லைன்ல வரல. கீழ ஓடிட்டு இருந்த மெசேஜ் பார்த்தா ஒரு கால்க்கு பத்து ருபாய்ன்னு போட்டு இருக்கு !!! என்ன ஒரு திருட்டு தனம் பாருங்க நான் ஒருத்தன் அம்பது ரூவாயை அழுதேன் அதே மாதிரி எத்தனை பேரு எவ்வளவு ரூவா அழுதாங்களோ.  இப்போ இந்த நிகழ்ச்சி S.S.Musicல வேற தனியா வருது. இவங்க கேள்வி எல்லாம் பார்த்தா அவ்வளவு கொடுமையா இருக்கு. விஜய் & அனுஷ்கா ரெண்டு பேரு போட்டோ போட்டு இது எந்த படம்ன்னு கேக்குறாங்க!!! ஆனா ஒண்ணு மட்டும் உறுதி ஏமாத்துறவன் இருக்குற வரைக்கும் ஏமாறுகிறவன் ஏமாந்துட்டே தான் இருப்பான். அதில் நானும் ஒருவன் :(



திருவொற்றியூர் நியூஸ்

             எங்க ஏரியால நடக்கும் அரசியல் கூத்து எல்லாம் ரொம்ப கேவலமா இருக்கு. என்ன தான் அமைச்சர் தொகுதி என்று பெயர் இருந்தாலும் ரோடு இருக்குற நிலைமை எல்லாம் ஏதோ  குக்கிராமத்தில் இருப்பது போல இருக்கு. உங்களுக்கு நான் சொல்லுறது ஏதாவது சந்தேகம் இருந்தால் திருவொற்றியூரில் இருந்து மீஞ்சூர் வரைக்கும் போற டவுன் பஸ்ல போய் பாருங்க சென்னைல இவ்வளவு கேவலமான ஒரு ரோடுட்டை நீங்க பார்க்கவே முடியாது. இன்னும் ரெண்டு மாசத்துல ரோடு போடுறோம்ன்னு அமைச்சர் சொல்லி இருக்கார்ன்னு தினத்தந்தில படிச்சேன்.  ஒரு கொடுமை என்னன்னா திருவொற்றியூர் நகராச்சி ஷேர்மேன் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்தவர் என்பதால் அவர் கட்சி சார்பா இந்த மாசம் ரோடு போடசொல்லி அரசுக்கு எதிர சாலை மறியல் போராட்டத்தை அறிவிச்சி இருக்காரு/இருக்காங்க. இப்போ எல்லாம் நான் அந்த ருட்ல போறதே இல்ல, பைக் எடுத்தா பீச் ரோடு சுத்திட்டு தான் போறேன்.  

எந்திரன்

                     நானும் எந்திரன் பார்த்துட்டேன், நானும் எந்திரன் பார்த்துட்டேன்... போன வாரம் ஆபீஸ்ல, பிரெண்ட்ஸ் சார்க் எல்லாம் இதுவே பேச்சா போச்சு. ஐயோ ஏதோ தெய்வ குத்தம் ஆனது போல இருந்துச்சு ஒரு சுபயோக சுபதினத்தில் நானும் தங்கமணியும் படத்தை பார்த்தோம். படம் பார்த்த பிறகு ரெண்டுபேருக்கும் ஒரே மாதிரியான மனநிலையில் தான் இருந்தோம். இத படத்துக்கா  இவ்வளவு பில்ட் அப் ??? ரஜினி அக்டிங் சூப்பர், ஐஸ்வரியா டான்ஸ் நல்லா இருந்துச்சு.  கடைசில கிராபிக்ஸ் கொஞ்சம் இல்ல ரொம்பவே கேவலமா இருந்துச்சு என்பது தான் உண்மை இது ஏதோ  ராமநாரையணனின் குட்டி பிசாசு படத்தின் அடுத்த வெர்ஷ போல இருந்துச்சு அவ்வளவு மோசம். முதல் பாதி சூப்பர், இரண்டாம் பாதி கொஞ்சம் ஓகே ரஜினி அக்டிங் சூப்பரோ சூப்பர். அதும் ஆடு மாதிரி கத்துற இடம் செம அப்லஸ்.     


ஐட்ரீம்

                  நான் +1 படிச்சிட்டு இருந்தப்போ மோகன்ராஜ்ன்னு ஒரு நண்பன் இருந்தான், காசிமேடுல இருந்து வருவான் அவன் காமெடி பண்ணுறதுல செம கில்லாடி, அதே மாதிரி படிப்பில் செம மக்கு. அவன் பத்தாவது பாஸ் பண்ணாதே பெரிய விஷயம்ன்னு அந்த ஸ்கூல் மாஸ்டர்ஸ் சொன்னங்க. அவன் வீடும் ஸ்கூல் பக்கத்திலே இருந்ததுனால மதியம் சாப்பாடு அவங்க அம்மா எடுத்துட்டு வந்து தருவாங்க. சில நாள் வஞ்சிர மீன் வறுவல் இருக்கும். நல்லா மூக்கு முட்ட சாப்பிட்டு மதியம் காணாம போயிடுவான் அவன் பேக் மட்டும் கிளாஸ் ரூம்ல இருக்கும் சாயந்திரம் ஸ்கூல் விடுற டைம்ல கரெக்டா ஸ்கூல் முன்னாடி வந்து நிப்பான் ஒரு பையன் அவன் பையை எடுத்துட்டு வந்து தருவான். எங்கடா போனன்னு கேட்டா ஹீ ஹீ ஒரு சிரிப்பு சிரிச்சுட்டு படத்துக்கு போனேன்னு சொல்லுவான், எந்த படம்னா அது எல்லா தியேட்டர்ளையும் ஓடி கடைசியா பெட்டிக்கு போகுறதுக்கு முன்னாடி கடைசியா ஒரு தடவை தியேட்டர்ல ரிலீஸ் பண்ண படமா இருக்கும். எந்த தியேட்டர்ன்னு கேட்டா பிரைட்டன்னு சொன்னான் அப்போ தான் தெரிஞ்சிது, அவனை பார்த்தா படம் பார்த்துட்டு வந்தவன் போல இல்ல முகம் எல்லாம் வீங்கி இருந்துச்சு , அப்பறம் தான் தெரிஞ்சிது அவன் படம் பார்க்க போகல அங்க போய் நல்லா தூங்கிட்டு வந்து இருக்கான். இந்த மாதிரி நிறைய தடவை ஸ்கூல் கட் அடிச்சிட்டு போய் தூங்கிட்டு வந்து இருக்கான். அந்த தியேட்டர் அவ்வளவு கேவலமா இருக்கும் அப்போ. இப்போ அந்த பிரைட்டன் தியேட்டர் தான் ஐட்ரீம் ஆகி ராயபுரம் ஏரியால சக்கை போடு போட்டுட்டு இருக்கு. சீட், சவுண்ட் சிஸ்டம், ஏ.சி, ஸ்க்ரீன், கிளீன் அண்ட் நீட், அதிகம் இல்லாத கட்டணம் முதல் வகுப்பு கட்டணமே 70 ருபாய் தான் தியேட்டர் நல்லா இருக்கு. அந்த தியேட்டர் போன உடனே எனக்கு மோகன்ராஜ் நினைப்புதான் வரும் .       



--
With Love
Romeo ;)

Thursday, October 7, 2010

DANGEROUS COMEDY

DANGEROUS COMEDY




--
With Love
Romeo ;)

Thursday, September 23, 2010

எஸ்கேப் - சவால் சிறுகதை

மொட்டுக்கள் எல்லாம் விரிந்து கொண்டு இருந்த காலை நேரம், வீட்டின் முகப்பை கண்டேன். ஜிம்மி என்னை பார்த்து ஆசையுடன் கேட்டை கீறி கொண்டு இருந்தது, அவளுக்கு தெரியும் எனது கூடையில் நான்கு பட்டர் பிஸ்கட் இருக்கிறது என்று. ஜிம்மியுடன் இப்பொது நான் அதிக நேரம் செலவிடுகிறேன். காரணம் இல்லாமல் இல்லை இன்னும் கொஞ்ச நாட்கள் தான் இந்தியாவில் இருக்க போகிறேன். அப்பறம் லண்டன் சென்றுவிடுவேன், எல்லாம் நல்ல படியாக நடக்கவேண்டும் முருகன் அருள  வேண்டும்.  வீட்டின் அருகில் வந்த போது தலை சுற்றுவது போல்  இருந்தது, லோ பிரஷராக இருக்கலாம் வீட்டிற்கு சென்று கொஞ்சம் சக்கரை எடுத்து சாப்பிட்டால் போதும் ஆனால் அதுவரை இந்த மயக்கத்தை தாண்டி செல்லமுடியுமா என்று தெரியவில்லை தலையின் உள்ளே ரங்க ராட்டினம் சுற்றுவதை போலே இருந்தது. கீழே விழாமல்  இருக்க கேட் கதவை கைகளால் இறுக்க பிடித்து கொண்டேன், பத்மா என்று கூப்பிட வாய் திறக்கிறேன் அந்த ஒலி எனக்கு மட்டுமே கேட்டுக்கொண்டு இருக்கிறது என்று எனக்கு தெரிகிறது. கண்கள் கொஞ்சம் கொஞ்சமாக எதிரில் இருக்கும் ஜிம்மியை மங்க செய்துகொண்டு இருந்தது, ஜிம்மியின் குரல் கூட வெகு தூரத்தில் இருந்து கத்துவதை போல இருக்கிறது...... 


கண்கள் விழித்தேன் என்னை சுற்றி சிலர் இருப்பதை போன்று இருந்தது. யார் என்று சரியாக தெரியாதவண்ணம் உருவங்கள் எல்லாம் மங்கி இருந்தது. குத்துமதிப்பாக தெரிந்த சில உருவங்களை யாராக இருப்பார்கள் என்று கொஞ்சம் யோசிக்க நினைத்தேன், நினைவுகள் என்னை வேறு ஏதோ ஒரு இடத்துக்கு அழைத்து சென்று கொண்டு இருந்தது. அப்பா, அப்பா என்று மகன் அழைக்கும் குரல் கேட்டது அவனுக்கு பதில் சொல்ல வாய் எடுக்க முடியவில்லை யாரோ எனது குரல்வளையை இறுக்கி பிடித்துகொண்டு இருந்தார்கள். நினைவுகள் தப்பியது எங்கோ யாரோ என்னை அழைத்ததை தேடி சென்று கொண்டு இருந்தேன். மீண்டும் குரல்கள் கேட்டது அதும் மிக அருகில்,

மிஸ்டர். பாலகிருஷ்ணன் நான் பேசுறது கேட்கிறதா ???
 மிஸ்டர்.பாலகிருஷ்ணன் நான் பேசுறது கேட்கிறதா??

என்னால் ம்ம் ம்ம் என்று தான் சொல்ல தோன்றியது வேறு எதும் சொல்ல முடியவில்லை.  யாரோ என்னை போட்டு உலுக்கியது  போல இருக்கிறது எனது கால்களை ஒருவரும் எனது இடுப்பு பகுதியை இருவர் எனது தலையை ஒருவர் என்று அவர்களின் கரங்களை கொண்டு தெரிந்துகொண்டேன். நான் எங்கு இருக்கிறேன் என்று என்னால் புரிந்து கொள்ள முடியாத சூழ்நிலையில் இருக்கிறேன் என்பது மட்டும் நன்றாக தெரிந்தது. மூக்கின் துவாரம் வழியாக ஏதோ மருந்து வாசம் வந்தது அது மிகுந்த நெடி அடித்தது அது கண்டிப்பாக பெனாயிலாக தான் இருக்கும். கண்களை மிகவும் கஷ்டப்பட்டு திறந்தேன் என்னை சுற்றியாரும் இல்லை. கண்களை  சுழற்றி சுழற்றி பார்த்தேன் என்னை ஒரு ரூமில் படுக்க வைத்து இருக்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக தெரிந்தது. கைகளை தூக்கி அசைத்தேன் யாரவது என்னை பார்பார்கள் என்று நினைத்தேன், எனது விரல்களை பற்றிக்கொள்ள ஒரு விரல் வந்தடைந்தது கூடவே சிறு சிறு கண்ணீர் துளிகளும். .

உங்களுக்கு ஒண்ணும் இல்ல நல்லா இருக்கீங்க. 
பத்மா நான் எங்கடி இருக்கேன் ? 

எனது குரல் எனக்கே வித்தியாசமாக இருந்ததை உணர்ந்தேன். எப்பொழுதும் இருக்கும் கம்பீரம் எல்லாம் இப்போ இல்லை என்பதை நன்றாக உணர்ந்தேன். தொண்டையில் சளி கட்டி இருந்தால்  பேச்சு எப்படி இருக்குமோ அதை போன்று இருந்தது.

நம்ம நரசிம்மன் டாக்டர் கிளினிக்ல தான். 
எப்போ சேர்த்த
இன்னைக்கு காலைல தான் 
இப்போ என்ன டைம் 
8 மணி ஆச்சு
டாக்டர் என்ன சொன்னாரு ?
பிரஷர் ரொம்ப கம்மி ஆச்சு அதான் நீங்க மயங்கிடீங்க
ஹ்ம்ம் .. ரகு எங்க ?
இப்போ தான் போனான் வீட்டுல சுமதி சுமந்த்  கூட  தனியா இருப்பான்னு நான் தான் அனுப்பினேன். 

எழுந்து உட்கார வேண்டும் என்று தோன்றியது. ஆனால் முடியவில்லை பத்மா கொஞ்சம் உதவி செய்தாள் வலது கையின் துணையால் கொஞ்சம் எழுந்து உட்கார்ந்தேன்.  இடது கையில் சலைன் ஏறி கொண்டு இருந்தது. இது எத்தனாவது பாட்டில் என்று தெரியவில்லை.

என்னை எப்படி இங்கே கொண்டு வந்த ?
வீட்டு வாசல்ல ஏதோ தோப்புன்னு விழுந்தா மாதிரி ஒரு சவுண்ட் கேட்டுச்சு. ஜிம்மி ரொம்ப சத்தமா கத்துச்சு வெளிய வந்து பார்த்தா நீங்க குப்புறப்படுத்து இருந்தீங்க, ஐயோன்னு நான் போட்ட சத்தம் கேட்டு பக்கத்துக்கு வீட்டுல இருந்து நந்து வந்தான். உங்களை அப்படியே தூக்கிட்டு போய் சோப்பால போட்டுட்டு  ஒரு ஆட்டோ புடிச்சிட்டு வந்தான். அதுக்குள்ள நான் ரகுக்கு போன் பண்ணி சொன்னேன்,   ஆட்டோ வரதுக்குள்ள அவனும் வந்துட்டான். பாவம் அவன் கண்ணுல அப்படி தண்ணி நிக்கிது உங்கள அப்பா அப்பான்னு உளுக்கிட்டு இருந்தான். ஆட்டோ வந்த உடனே நானும் அவனும் நந்து  சேர்ந்து ஆட்டோல தூக்கிட்டு இங்க வந்து சேந்தோம். டாக்டர் உங்களுக்கு எதும் இல்லைன்னு சொல்லிடாரு. 
எப்போ வீட்டுக்கு போகலாமா ??
நாளைக்கு போகலாம்
சரி
வயறு எரிவதை போல இருந்தது, நேற்று இரவு சாப்பிட்டது இப்பொழுது வரை ஒரு காபி கூட குடிக்கவில்லை. ஏதாவது சாப்பிட்டால் தேவலாம் போல இருக்கு நாக்கு எல்லாம் வரண்டுவிட்டது, கொஞ்சம் தண்ணி குடித்தேன்.
   பத்மா ரொம்ப பசிக்கிது எதாவது சாப்பிடலாமா 
   இருங்க சிஸ்டர் கிட்ட கேட்டுட்டு வரேன் 


மண்டையில் ஏதோ சுருக் என்று வலித்தது, நெற்றிக்கு கொஞ்சம் மேல வீங்கியது போல இருந்தது விழுந்த போது ஏதாவது அடிப்பட்டு இருக்கலாம்.

நான் போய் இட்லி வாங்கிட்டு வரேன் சிஸ்டர் வந்து இந்த குளுகோஸ் பாட்டில் நிப்பாட்டுவாங்க  அப்பறம் சாப்பிடலாம்
சரி அப்படியே கொஞ்சம் காபி வாங்கிட்டு வா
காபி எல்லாம் இப்போ சாப்பிட கூடாது, கொஞ்ச நேரம் வாய கட்டிட்டு கம்ன்னு இருங்க.

சிஸ்டர் அறைக்குள் வந்தார் அவருக்கு என்னை நன்றாக தெரியும் . நரசிம்மன் எங்க பேமலி டாக்டர் என்பதால் அடிகடி இங்கு வந்து இருக்கோம். 

என்ன சார் உடம்பு எப்படி இருக்கு ???
நீங்க தான் சொல்லணும் சிஸ்டர். வயசு ஆகிடுச்சுல அதான் முடியல. 
அப்படி எல்லாம் ஒண்ணும் பெருசா இல்ல சார் , லோ பிரஷர் தான் கொஞ்சம் கவனமா இருங்க.
சரி.. டாக்டர் இப்ப ரவுண்ட்ஸ் வருவாரா ??
பத்து மணிக்கு மேல வருவாரு சார்.

கையில் இருந்த  ஊசியை எடுத்து திரும்ப அந்த பாட்டிலில் ஏற்றினார். அவர் சென்ற கொஞ்ச  நேரத்தில் பத்மா இட்லியுடன் வந்தாள். நான்கு இட்லி சாம்பாருடன் நன்றாகத்தான் இருந்தது. ஆனால் அது எனது வயருக்கு போதாது என்று தெரிந்தது, வேறு வழியில்லை இனி எது கேட்டாலும் பத்மா வாங்கி தரமாட்டாள். டாக்டர் வரும் வரை நான் காத்து கொண்டு தான் இருக்கவேண்டும்.

கொஞ்சம் பால் ஆவது தாயேன்

முறைத்துகொண்டே பிளாஸ்க் எடுத்துட்டு ஹோட்டல்க்கு  போனாள்.

பக்கத்தில் இருந்த கட்டிலில் யாரோ ஒருவர் படுத்து இருந்தார். அவரின் முதுகை தான் பார்க்க முடிந்தது.  வயதானர் போல இருந்தார். கண்களை லேசாக மூடி காலையில் நடந்த சம்பவங்களை திரும்ப நினைத்து கொண்டேன்.  முகத்தில் யாரோ துணியை வைத்து  பொத்தினார். கொஞ்சம் திமிரலாம் என்று பார்த்தால் அதற்குள் எனது கழுத்தில் ஒரு ஊசி ஒன்று இறங்கியது.  யாரோ முளையின்  உள்ளே கையை விட்டு சுற்றி விடுவதை போல இருந்தது. வியர்வை அதிகமாக வெளியேறியது, பத்மா என்று வாய் நீக்கி அழைக்க முடியவில்லை. கண்கள் எல்லாம் மேலே மேலே என்று சென்று கொண்டு இருக்கிறது. யாராவது ஏதாவது செய்யுங்கள் என்று உதவிக்கு அழைக்க வாயெடுக்க முடியவில்லை.

டாக்டர் அவ்வளவு சிக்கிரம் வருவார் என்று நினைக்கவில்லை நான். என்னை அவர் ஏதேதோ செய்துகொண்டு இருந்தார் என்னை சுற்றி ஆறு ஏழு பேர் இருந்தார்கள். என்னை ஆம்புலன்சில் ஏற்றி கொண்டு இருந்தார்கள். எனது அறையை பார்த்தேன் அவளே தான்.. காமினி   

டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.

அந்த மருத்துவமனை பின்புறம் இருந்த காரில் ஏறி டாப் கியரில் பறந்தாள் காமினி. கார் நேராக பரந்தாமன் வீட்டிற்கு சென்றது. காரில் இருந்து இறங்கி வீட்டிற்குள் சென்றாள் அங்கே பரந்தாமனும் சிவாவும் இவள் வருகைகாக காத்துகொண்டு இருந்தார்கள். 
ஹாஸ்பிடலில் நடந்தவற்றை   வரி விடாமல் அவர்களிடம் ஒப்பித்தாள், ஏனோ இவள் சொல்லுவதை ஏதும் கேட்காமல் 


டைமண்டு எங்கே?? என்று மட்டும் சிவா கேட்டான்.
அதன் சொனேன்ல அந்த ஆளை கடத்தி கொண்டுவருவதற்குள்ள டாக்டர் வந்துட்டார்ன்னு. 
அப்போ டைமண்டு உங்கிட்ட இல்ல ?? 
இல்ல சிவா என்னை நம்பு ஒரு நிமிஷம் இரு அந்த ஆளு இப்ப எங்க இருக்கான்னு தெரிஞ்சிக்கிறேன். 
ஹலோ டாக்டர் நரசிம்மன் கிளினிக்கா 
ஆமா சொல்லுங்க 
அங்க பாலகிருஷ்ணன்னு ஒருத்தர் அட்மிட் ஆகி இருக்காரு அவர்கிட பேச முடியுமா ??
நீங்க யாரு 
அவங்க கஸின் 
சாரிங்க அவர் கொஞ்ச நேரத்துக்கு முன்னாலதான் இறந்துட்டார், சிவியர் ஹார்ட் அட்டாக்.  பாடிய அவங்க வீட்டுக்கு எடுத்துட்டு போய்டாங்க நீங்க அங்க போய்ப்பாருங்க.     
காமினியின் கண்கள் குளம் போல் தேங்கி இருந்தது, இனி நான் என்ன செய்வேன் அந்த டைமண்டு அவ்வளவு தான. அப்போ ரவி நிலைமை ??  
சார் பாலகிருஷ்ணன் இறந்து போய்ட்டாராம்.
வாட் ?? பரந்தாமன் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளனர்

“ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.
 



சிவா கொஞ்சம் பொறுமையா இரு என்றார் பரந்தாமன். காமினி அந்த வைரம் எப்படியும் பாலகிருஷ்ணன் வீட்டுல தான் இருக்கும். அவன்  சாகாமல் இருந்தால் எப்படியும் அதை அவனிடம் இருந்து வாங்கிடலாம் பச் போய்ட்டான். 

அவனுக்கு லோ பிரஷர் மட்டும் இல்லைனா எப்படியாவது கடத்திட்டு வந்து இருப்பேன் சார். மயக்க ஊசி தானே போட்டேன் அதுக்கே ஆள் அவுட் ஆகிட்டானே. 


சரி நடந்ததை மறந்துவிடு எப்படியும் பத்து பதினைந்து நாள் அவன் வீட்டில் யாரவது ஒருவர் இருந்து கொண்டே தான் இருப்பாங்க. ஸோ இனி கொஞ்சம் பொறுமையாதான் இதை ஹன்ட்ல் பண்ணனும். 

என்ன டாட் எதுக்கு எடுத்தாலும் பொறுமை பொறுமைன்னு பேசிட்டு. ஏய் உண்மைய சொல்லுடி அந்த ஆளு கிட்ட தான் டைமண்டு இருக்கா இல்ல நீயெ  அதை மறைச்சி  வச்சி இருக்கியா ?? 

சிவா திரும்ப அவளை நோக்கி துப்பாக்கியை தூக்கினான். 

சிவா ஏன் லூசு மாதிரி பிகேவ்  பண்ணுற. அவ நம்ம கிட்ட எத்தனை நாள் வேலை செய்யுற ஏதாவது ஒரு தப்பு பண்ணி இருப்பாளா, அவன் செஞ்ச தப்புக்கு இவ என்ன செய்வா. 

ரெண்டு பேரும்  தானே போய் அந்த டைமண்டு அடிச்சிங்க அப்பறம் எனக்கு தெரியாது உனக்கு தெரியாதுன்னு ஆளாளுக்கு கதை சொல்லுரிங்க. இதோ பார் காமினி அந்த பாலகிருஷ்ணன் எங்களுக்கு ஏதோ பெரிய செக் வச்சி இருக்கீங்க அது மட்டும் நல்லா தெரியுது.  அந்த டைமண்டு அவன் கிட்ட இருந்தா அதை கண்டிப்பா வேற யாருக்கோ கைமாத்தி விட்டாலும் விடுவான். அப்பா என்னதான் பெரிய ஆளா இருந்தாலும் அவன் கிட்ட இருக்குற அந்த டைமண்டுக்காக ரொம்ப பொறுமையா டீல் பண்ணுறார். அப்பவே அவனை நாலு தட்டு தட்டினா எல்லாம் சொல்லிடுவான்னு சொன்ன இவர் கேட்கல இப்போ யார் அந்த பார்ட்டிக்கு பதில் சொல்லுறது. 

டேய் அவன் அப்படிப்பட்டவன்  இல்லைன்னு மனசுக்குள்ள ஏதோ சொல்லிட்டு இருந்துச்சு. உன்னோட பேச்சை கேட்டு அவனை தூக்கிட்டு வரலாம்ன்னு பார்த்தா அந்த சாதாரண ஊசிக்கே அவன் செத்துட்டான்.  


காமினி இன்னும் ஒரு மாசத்துல அந்த டைமண்டு எங்க கைல இருக்கணும். நீ என்ன செய்வியோ எனக்கு தெரியாது, இப்போ நீ போகலாம். நினைவுல வச்சிக்கோ உன்னோட குடுமி எங்க கைல தான் இருக்கு. மைன்ட்  இட்.


“காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.


ஆமா சார், தெரியாத்தனமா அந்த ஆளு சாகும் போது யாரோ என்னை கொள்ள பார்த்தாங்கன்னு சொல்லி தொலைச்சிட்டன் அதுல இருந்து அவங்க வீட்டு சைடுல போலீஸ் வண்டி ஏதாவது வந்துட்டு போயிட்டு இருக்கு. அந்த அம்மா கிட்ட ஏதாவது பேசலாம்ன்னு பார்த்தா அவங்க வீட்டை விட்டு வெளியவே வரல. சரி ஏதாவது பண்ணலாம்ன்னு சோப்பு விக்கிறவள் போல  போனா கூட அந்த அம்மா வெளிய வரல. நாய் மட்டும் கத்திட்டே இருந்துச்சு, அத திரும்பி பார்த்தா அதோட கழுத்துல இருக்குற பெல்ட்ல நம்ம டைமண்டு. அப்படியே வெளிய வந்துட்டேன், 
இன்னைக்கு மதியம் ரெண்டு மணிக்கு அந்த நாய்க்கு மயக்க மருந்து தடவின பிஸ்கட் 
குடுத்து எடுத்துட்டு வரப்போ போலீஸ் வந்துடுச்சு. அவங்க கிட்ட சோப்புபை 
காமிச்சு சிரிச்சு , வழிஞ்சி நாலு சோப்பு வித்துட்டு அப்படியே இதையும் சுட்டுட்டு  
வந்துட்டேன். 

வெல்டன் ஸ்வீட் ஹார்ட். பாத்தியாட இது தான் காமினி.  சரி எங்க அந்த டைமண்டு??

இருக்கு சார், முதலில் என்னோட அமௌன்ட் செட்டில் பண்ணுங்க. 

இந்த உன்னோட சம்பளம் பத்து  லட்சம்,
பரந்தாமன் அவளிடம் பத்து லட்சத்துக்கான காசோலையை தந்தார்.  

இது பத்தாது எனக்கு இருபது  லட்சம் வேணும் 

என்ன விளையாடுறியா காமினி ?? 

இல்ல பரந்தாமன்!!! இந்த டைமண்டு மதிப்பு நாலு கோடி. உயிரை   பணயம் வச்சு நானும் பாலகிருஷ்ணனும் கொள்ளை அடிச்சோம், அவர் பங்கையும் சேர்த்தே எனக்கு வேணும் 

இல்லைனா

டைமண்டு இல்ல. 

அப்பா அப்பவே இவள போட்டு இருந்தா இந்த அளவுக்கு பேசுவாளா ?? 

டேய் சிவா நிறுத்து, ஓவரா பேசாதா, ஏசி ரூம்ல உக்காந்துகிட்டு டிலிங் பேசிட்டு இருக்காத வெளிய வந்து வேலை செஞ்சு பாரு அப்பறம் தெரியும் எங்களோட கஷ்டம். கன் வச்சிட்டு இருந்தா பெரிய ஆள்ன்னு நினைப்போ !!! இங்க பார் காமினியின் உடலை சுற்றி வெடிகுண்டு நிரம்பி இருந்தது. சிவாவும் பரந்தாமனும் பயந்து அவளை விட்டு சில அடிகள் பின்னே சென்றார்கள். 

ரவியை இன்னும் பத்து நிமிஷத்துக்குள்ள வீட்டுல விட்டடனும்  இல்ல இந்த இடமே காலியாகிடும். சிவா என்னோட அக்கௌன்ட்ல இருபது லட்சம் இன்னும் ஒரு மணி நேரத்துல  டெபொசிட் பண்ணிடு இல்ல பாலகிருஷ்ணன் போன இடத்துக்கே நாம போகணும். 

  காமினி ஏன் இப்படி பண்ணுற?? உனக்கு நான் எத்தனை நல்லது பண்ணி     
 இருப்பேன். என்னை பத்தி தெரிஞ்சும் நீ விளையாடுறியா ?? 

 போதும் டயலாக் பேசுனது எல்லாம், எனக்கு ரவி விடுதலை ஆகணும், பணம் 
என்னோட அக்கௌன்ட்ல போடணும்.  ஹ்ம்ம் சிவா கிளம்பு இல்ல எல்லோரும் 
இப்பவே செத்துடுவோம். இன்னும் ஒரு மணி நேரம் தான் உனக்கு கேடு. இல்ல போலீஸ்க்கு போன் பண்ணி சொல்லிட்டு நானும், பரந்தாமனும் பரலோகம் போயிடுவோம். நீ ஜெயில்க்கு போவ 
உனக்கு டைமண்டு வேணுமா இல்ல ஜெயிலுக்கு போகணுமா ???
 எது வேணும்ன்னு நீயே செலக்ட் பண்ணு


சிவா பயத்துடன் அங்கு இருந்து கிளம்பி சென்ற அரை மணி நேரத்தில் எனது மொபைல்க்கு பேங்கில் இருவது லட்சம் ருபாய் டெபாசிட் செய்ததற்கு ஆதாரமாக ஒரு எஸ்எம்எஸ் வந்தது
.



கொஞ்சம் அந்த பக்கம் திரும்புங்க பரந்தாமன் என்னோட டிரஸ் சரி பண்ணனும். 
பரந்தாமன் திரும்பிய நொடி அவரின் கழுத்தில் ஒரு ஊசியை இறக்கினாள் காமினி, 

சாரி பரந்தாமன் நான் கிளம்புறேன் இது வெடி எல்லாம் இல்லை, எனக்கு வேற வழி தெரியல ரவியை நீ விடுதலை பண்ணமாட்டன்னு எனக்கு தெரியும். அடுத்த நடக்க போற டைமண்டு எக்ஸிபிஷன்ல கண்டிப்பா ஏதாவது கொள்ளை அடிக்க சொல்லுவ, இப்படியே நீ சொல்லுற எல்லாத்தையும் நான் பண்ணிட்டு இருக்க முடியாது.     என் கூட பிறந்தான் என்கிற காரணத்துக்காக முளை வளர்ச்சி இல்லாத ஒருத்தனை பிணயகைதியா  வச்சி இருந்திங்க. அவனுக்காக தான் நீங்க சொன்னதுக்கெல்லாம் மறுப்பே சொல்லாம வேலை செய்ஞ்சி முடிச்சேன். போதும் பரந்தாமன்  இனி நாங்க இங்க இருக்க முடியாது.  இப்போ நானும் ரவியும்  இந்தியா விட்டு கிளம்புறோம். முடிஞ்சா அடுத்த ஜன்மத்தில் மீட் பண்ணலாம். அந்த டைமண்டு இனி எனக்குதான். வெளிநாடு போறதுக்கு காசு வேணும்ல அதான் உங்கிட்ட அதை குடுக்குற மாதிரி நடிச்சேன்.

பரந்தாமன் கண்கள் முடியபடி அமைதியாக உலகத்தை விட்டு பிரிந்து போனார். காமினி அங்கு இருந்து கிளம்பி சிட்டாக பரந்தாமன் காரில் ஏர்போர்ட் நோக்கி பறந்தாள். 
அங்கு நந்து ரவியுடன் பிரிட்டிஷ் ஏர்வேசில் காமினியுடன் செல்ல காத்துகொண்டு இருந்தான்.

மிஸ்டர் பாலகிருஷ்ணன் இப்போ தெரியுதா காமினி என்ன பண்ணிட்டு இருக்கான்னு!!! இவருக்கு பதில் சொல்லலாம் என்று வாய் திறந்தேன் முடியவில்லை
விடுங்க சார் ரொம்ப ட்ரை பண்ணாதிங்க உங்களுக்கு ரெண்டு சாய்ஸ் குடுத்தேன் ஒண்ணு இந்த மேல் உலகத்துல பேசிட்டு இருக்கலாம் இல்ல நீங்க பார்க்கணும்னு நினைக்கிற நபரை இப்போ  என்ன பண்ணிட்டு இருக்காங்க என்பதை  பார்க்கலாம்.  நீங்க ரெண்டாவதை செலக்ட்  பண்ணிங்க ஸோ இனி உங்களால பேச முடியாது. ஏய் யாருப்பா அங்க இவரோட ரூம் காடுங்க. போங்க சார் இன்னும் நிறைய பேரு லைன்ல இருக்காங்க.  

நேக்ஸ்ட் யாருப்பா .... 

பரந்தாமன்னு பேரு சார் இவரும் காமினி இப்போ எங்க இருக்கான்னு தெரிஞ்சிக்க  ஆசைப்படுகிறார்.. 

நம்ம ரூல்ஸ் எல்லாம் சொல்லிட்டியா ??

சொல்லிட்டேன் சார்  

வா ராசா வா அந்த சேர்ல உட்காரு.  




எழுத்து பிழை அதிகமாக இருந்து இருக்கும். முடிந்த அளவு சரி செய்து இருக்கிறேன் மற்றபடி எழுத்து பிழைக்கு மன்னிக்கவும்.  






-- 

With Love


Romeo ;)