Friday, December 23, 2011

ராஜபாட்டை

சியான் விக்ரம் நடிப்பில், சுசிந்தரன் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம். பதிவுலகம் வந்தபிறகு எந்த ஒரு படத்தையும் விமர்சனம் படித்த பிறகு தான் தியேட்டர் பக்கமே போவது என்றாகி போன இந்த நாட்களில். Indiaglitz என்கிற வலைத்தளம் நடத்திய ஒரு போட்டியில் வெற்றி பெற்று முதல் நாள் முதல் காட்சியை காணும் வாய்ப்பு கிடைத்தது. 




படத்தின் கதை 

விக்ரம் ஒரு ஸ்டான்ட் ஆர்டிஸ்ட். ஒரு நாள் விஸ்வநாதன் அவர்களை கொலை செய்ய முயன்ற ஒரு கும்பலிடம் இருந்து அவரை காப்பாற்றுகிறார். தனது மகன் தான் தன்னை கொலை செய்ய பார்ப்பதாகவும். தனது மனைவி நினைவாக நடத்தப்பட்டு வரும் ஆசிரமத்தை தான் எம்எல்ஏ ஆவதற்கு தேவை என்கிற காரணத்தால் தான் கொலை செய்ய ஆள் அனுப்பி இருப்பதாக சொல்கிறார். அவரை தான் தங்கி இருக்கும் மேன்ஷனில் வைத்து பார்த்து கொள்கிறார் விக்ரம். அப்பறம் என்ன ஆச்சு என்பதை மீதி வெள்ளி திரையில் பார்த்து தெரிந்து கொள்ளவும் (அது உங்கள் விருப்பம்)


படம் ஆரமிக்கும் போதே நிலத்தை அடித்து பிடுங்கும் கும்பலை காண்பித்து  இது தான் கதை களம் என்று முதலில் சொல்லிவிடுகிறார். படம் முழுக்க அதன் பின்னணியில் தான் செல்கிறது. ஆனால் நிலம் எப்படி அபகரிகிறது என்பதையும்  ரெஜிஸ்டர் ஆபிஸ் உள்ளே நடக்கும் தில்லு முல்லுகளை பற்றி எதுவும் சொல்லாமல் அடிதடியில் எழுதி வாங்குவதை மட்டும் சொல்லி இருகிறார்கள். 

விக்ரம் நடித்ததில் மரண மொக்கையான படம் பீமா. அதன் அடுத்த பார்ட் என்று இதை சொல்லலாம். பாடியை ஏற்றி ஜிம் பாயாக வருகிறார். உடம்பை முருகேன்று ஏற்றி வைத்துள்ளார். கண்களில் தெரியும் சுருக்கம் அவருக்கு  வயது ஏறி கொண்டு இருப்பதை பளிச்சென்று காட்டுகிறது. முடியில் அடிகடி கலரிங் செய்து கொண்டே இருக்கிறார். கண்கள் கூசும் விதத்தில் டிரஸ் போடுகிறார், அதே போல கலர் கலராக ஷு. ஒரே பாடலுக்கு வித விதமாக மேக்-அப் போட்டு டான்ஸ் ஆடுகிறார். CBI அதிகாரிகள் போல பல வேடத்தில் வந்து நன்றாக நடித்து இருக்கிறார். பத்து நிமிடத்துக்கு ஒரு முறை இருபது நபர்களை பந்தாடுகிறார்.  நன்றாக சண்டை போடுகிறார் தனது வேலையை கச்சிதமாக செய்து விட்டார்.ஸ்டைலாக சவால் விட்டு  இடைவேளை விடும் இடம் சூப்பர். 



ஹீரோயின் தீக் ஷா பார்கிறார், பேசுகிறார், நடக்கிறார், சிரிக்கிறார் கடைசியில் அவர் இருந்ததையே நாம் மறந்துவிடும் அளவிற்கு ஒரு கதாபாத்திரத்தில் வந்து செல்கிறார். இந்த மாதிரியா மாஸ் படங்களில் ஹீரோயின் லெவலை இதற்கு மேல் எதிர்பார்க்க கூடாது தான்.  நேரில் சந்தித்தேன் செக்க செவப்பாக இருக்கிறார்.   விஸ்வநாதன் அவர்களை இப்படி காமெடி பீஸ் ஆகி நாறடித்து  விட்டார்கள். காமெடி என்கிற பெயரில் நடக்கும் மொக்கையை ஓரளவிற்கு மேல் சகித்து கொண்டு இருக்க முடியவில்லை. யுவனின் பின்னணி நன்றாக இருக்கிறது பாடல்கள் தான் மனதில் ஒட்டவில்லை. சண்டை காட்சிகள் நன்றாக இருக்கிறது அதற்காக இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் இப்படி ஒரே அடியில் மண்ணை கவ்வுவது காட்டுவார்களோ. 

  
கதையை வேறு ஒருவர் எழுத, வசனத்தை பாஸ்கர் சக்தி எழுத, திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார் சுசிந்தரன். தமிழ் சினிமாவில் சுசிந்தரன் அவர்களுக்கு  நல்ல பெயர் இருக்கிறது, அதை முன்று படங்களில் தக்கவைத்து கொண்டவர் இதில் கோட்டை விட்டுவிட்டார். முதல் பாதியில் விஸ்வநாதன் அவர்களை வைத்து காமெடி செய்கிறேன் என்று மரண மொக்கையை போட்டுவிட்டார், இரண்டாம் பாதியில் படத்தை முடிக்கவேண்டிய அவசரத்தில் கதையை நகர்த்தி கொண்டு செல்கிறார். என்ன படம் முடிஞ்சதா என்று ஒருகணம்  நம்மையே சந்தேகிக்க வைத்து விடுகிறார். அக்கா என்கிற கதாபாத்திரம் அடுத்த சொர்ணலதா மாதிரி கொண்டு வந்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும் அடக்கி வாசிக்கிறேன் என்று அந்த கதாபாத்திரத்தை புஸ் ஆகியது தான் மிச்சம். ஆனா அந்த அக்கா நச்சென்று இருக்கிறார். ரீமாசென் & ஸ்ரேயா ஆடிய லட்டு லட்டு பாட்டு கடைசியில் வந்ததால் இருவரின் தரிசனத்தை சரியாக காண முடியவில்லை. இன்றைய சந்திப்பில் விக்ரம் வேற அதை தனது போல்ட் வாய்சில் லட்டு  லட்டு  என்று  அடிகடி பாடி காமித்தார். ஸ்ஸ்ஸ் முடியல சியான்.  

ஒரு விஷயத்துக்காக சுசிந்தரனை பாராட்டியே தீரவேண்டும். வாப்பா என்கிறவர் தற்கொலை(கொலை). நிஜத்தில் நடந்ததை படத்தில் கொண்டு வந்துள்ளார். இன்று அவரிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது, இந்த ஷாட் வைக்க எப்படி தில் வந்தது என்று கேட்டேன். அந்த ஷாட் வைத்ததில் தனக்கு எந்த சங்கடமும் பயமும் இல்லை என்றார். 




ராஜபாட்டை- மரண மொக்கை 




-- 
With Love
அருண் மொழித்தேவன் (Romeo) ;)

Tuesday, December 20, 2011

சங்கதிகள் 20 டிசம்பர் 2011

புத்தகம் 

தற்போதைய ஹாட் டாபிக் எக்ஸைல் நாவலை படித்து விட்டீர்களா என்பது தான். நித்யானந்தாவால் ஒரு நட்பை நானே முடித்து கொண்டேன் என்பதற்காக மிகவும் வருந்திய தருணம் இது . இந்த நாவல் படித்து முடித்து எனது மகிழ்ச்சியை அவருடன் பகிர்ந்து கொள்ள முடியவில்லை (நித்தி ஒழிக). பழைய சாருவின்  காடுரைகளை படித்து இருப்பவர்கள் கண்டிப்பாக இந்த நாவலை படித்தால் சாரு பேக் டு தி பார்ம் என்று சொல்லும் அளவிற்கு அட்டகாசமான நாவல். முதலில் நாவலை முதல் பக்கத்தில் ஆரமித்து கடைசி பக்கம் வரை படித்தால் தான் உங்களுக்கு நாவல் புரியும், அது ரசனை என்று கூட சொல்லலாம். அடுத்த முறை நாவலை நீங்கள் எங்கு இருந்து வேண்டுமானாலும் படிக்க ஆரமிக்கலாம் சுவாரஸ்யத்துக்கு குறைச்சல் இல்லாமல் செல்லும். நாவலை பற்றி விரிவாக ஒரு பதிவு எழுத வேண்டும். 




வரும் ஜனவரி 5 தேதி முதல் சென்னையில் புத்தக கண்காட்சி தொடங்கவுள்ளது. ரொம்ப ஆர்வமாக இருக்கிறேன் அங்கு செல்ல . வாங்க வேண்டிய புத்தகங்களை லிஸ்ட் எழுதி கொண்டு இருந்தேன். முக்கியமான சில புத்தகங்கள் என்கிற கணக்கில் 25 வந்துள்ளது, பட்ஜெட் பார்த்து கூட குறையலாம் ஏறலாம் :). 


பதிவு 

எல்லாவற்றுக்கும் ஒரு சுணக்கம் வந்து விட்டது. படிப்பதற்கு எழுதுவதற்கு எல்லாம்   சோம்பேறித்தனம் வந்துவிட்டது. எதையாவது கிறுக்க வேண்டும் என்கிற எண்ணமே போய்விட்டது. வாரத்துக்கு நான்கு ஐந்து பதிவுகள் எழுதும் பதிவர்களை பார்க்க பொறாமை தான் வருகிறது. இவர்கள் எப்படி எழுதிக்கொண்டு இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. முடிந்த வரை பழையபடி எழுத நினைக்கிறேன் பார்க்கலாம்.  


பதிவுலகம் 


ஈரோடு சங்கமம் நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி முடித்து இருக்கும் ஈரோடு பதிவர்களை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை. கதிர் அண்ணா பதிவை படித்த பிறகு குறுகிய காலத்தில் எவ்வளவு உழைப்பை தந்து இந்த நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார்கள் என்பதை உணரமுடிகிறது. அதே போல கதிர் அண்ணா அந்த பதிவை எவ்வளவு மகிழ்ச்சியாக பதிவு செய்தார் என்பதற்கு ஆங் ஆங்கே அட்டகாசமாக தெரியும் எழுத்து பிழைகள் சாட்சி.  முன்று வருடங்களாக நானும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நினைக்கிறேன் ஏதாவது ஒரு வேலை வந்து அதை கெடுத்துவிடுகிறது.  சென்னையில் இதே போல ஒரு நிகழ்ச்சியை நடத்த முயற்சிகளை தொடங்கும் நேரம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன். கூடிய விரைவில் அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்ப்பார்கிறேன். 




பாடல்கள் 


முப்பொழுதும் உன் கற்பனைகள் - ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பில் வெளிவந்து இருக்கும் பாடல்கள் அத்தனையும் அருமையாக இருக்கிறது. முக்கியமாக முஹம்மத் இர்பான் பாடி இருக்கும் யார் அவள் யாரோ நச்சென்று இருக்கிறது அதும் பாடல் முடியும் தருவாயில் அவரின் ஹை பிட்ச் வாய்சில் ஏற்றி அதே சமயம் எலெக்ட்ரிகல் கிட்டார் உடன் பயணிக்கும் போது அட்டகாசமான ஒரு ப்யுஷன் போல இருக்கிறது .




மம்பட்டியான் படத்தில் வரும் சின்ன பொண்ணு பாடலும் நன்றாக இருக்கிறது. பழைய பாடலை ரீமிக்ஸ் செய்யாமல் அதே வடிவில் புதிய இசை கருவிகளால் இசையமைத்து அருமையாக வந்திருக்கும் பாடல். கேட்டவுடன் பிடித்ததில் இதுவும் ஒன்று.







திருவொற்றியூர் அப்டேட்

வெகு நாட்களாக கிடப்பில் இருந்த சாலை விரிவாக்கம் ஒருவழியாக முடிவுக்கு வந்து இருக்கிறது. திருவொற்றியூர் மார்க்கெட் பகுதி முதல் ராஜா கடை பேருந்து நிறுத்தம் வரை சாலையை விரிவாக்கம் செய்ய எவ்வளவோ முயன்றும் அங்கு இருந்த கடைகளை இடிப்பதற்கு  நிறைய முட்டுகட்டைகள் வந்தது. கடைசியாக அந்த கடைகளை அகற்ற நஷ்டஈடு கொடுத்துள்ளர்கள். இந்த மாத இறுதிக்குள் கடைகளை எல்லாம் காலி செய்வதாக சொல்லி இருகிறார்கள். இந்த ஆட்சியில் திருவொற்றியூர் மக்களுக்கு கிடைத்த முதல் சந்தோஷமான செய்தி :).




மொக்கை விளம்பரம்

பத்து வருடங்களாக பார்த்து பார்த்து சலித்து,  ரீல் நைந்து போனா  LIC விளம்பரத்தை தூக்கி கடாசிவிட்டு வெகு நேர்த்தியாக மார்க்கெட்டிங் டீம் அட்டகாசமான விளம்பரங்களை கொடுக்க ஆரமித்துவிட்டன. இத்தனைக்கும் அது ஒரு அரசாங்க நிறுவனம். சாதாரண அப்பளத்துக்கு கூட எப்படி மார்கெடிங் செய்கிறார்கள் என்று இதயம் டாட்ஸ் விளம்பரங்களை பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.சன்டிவியில் ஒளிபரப்பான பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியை பார்த்தவர்கள் லலிதா நகைக்கடையின் பெயரை மறந்து இருக்கமாட்டார்கள். கோடி கோடியாக பிசினஸ் செய்யும் இவர்களில் புதிய விளம்பரத்தை டிவியில் பார்க்கவே சகிக்கவில்லை.  இவ்வளவு மொக்கையான விளம்பரத்தை எப்படி ப்ரோமோட் செய்கிறார்கள் என்று தெரியவில்லை.

விளம்பரத்தை பார்த்து நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்.  








-- 
With Love
அருண் மொழித்தேவன் (Romeo) ;)