Thursday, November 25, 2010

காடு - ஜெயமோகன்

ஏழாம் உலகம் புத்தகம் படிக்கும் வரை எனக்கு ஜெயமோகன் எழுத்தின் ஸ்பரிசம் அவ்வளவாக இல்லை. இணையதளத்தில் படிப்பதோடு நிறுத்திவிட்டேன், ஏதோ ஒரு ஊந்தலில் வாங்கிய ஏழாம் உலகம் என்னை உலுக்கி எடுத்துவிட்டது அவ்வளவு நெருக்கமாக ஒரு நாவலை நான் வாசித்தது இல்லை என்பதால் உண்டான உணர்ச்சி அது. அதற்கு எந்தவிதத்திலும் சோடை போகாத நாவல் காடு. 

     நாவலின் தலைப்பே சொல்லிவிடும் கதை எங்கு பயணிக்க போகிறது என்று. ஒரு பதிவரிடம் ஜெயமோகன் எழுத்துகள் எப்படி இருக்கும் என்று கேட்டேன். ஜெயமோகன் எழுத்தை படிக்கும் போது அவர் நமது கையை பிடித்து அந்த இடங்களை அழைத்து செல்வது போல இருக்கும் அவ்வளவு நெருக்கமான படைப்புகள் எல்லாம் என்றார். காடு படிக்கும் போதே அவர் சொன்னது அத்தனையும் உண்மை என்று புரிந்துகொண்டேன் நன்றி மணிஜி 

    கிரிதரன் தனது மகன் சிவராமனின் மகளை கட்டி குடுத்த ஊருக்கு செல்கிறார். செல்லும் வழியில் தான் வேலைசெய்த சிற்றாறு பட்டணங்கால் கால்வாய் கடக்கும் போது முன்பு அதே இடத்தில வேலை செய்த போது ஒரு கல்வெட்டில் தனது பெயரை எழுதி வைத்ததை நினைவுப்படுத்தி அங்கே சென்று பார்க்கிறான். அங்கு அவன் பெயர் மட்டும் அல்ல ஒரு மிளாவின் கால்தடமும் பதிந்து உள்ளதால் அதை காணவேண்டி அங்கே செல்கிறான். 

   கிரி வீட்டிற்கு ஒரே பிள்ளை அப்பா ஜோசியம் என்று சப்பை கட்டு கட்டிக்கொண்டு வாழ்கையை ஒட்டி கொண்டு இருப்பவர். அம்மா தான் குடும்பத்தை காப்பாற்றி கொண்டு இருக்கிறாள். தனது அண்ணனிடம் மகனை வேலைக்கு சேர்த்து விடுகிறாள். கிரிதரனை காட்டில் நடக்கும் அவரின் கட்டுமான வேலையை மேற்பார்வையிட அங்கு அனுப்பி வைக்கிறார். வந்த இடத்தில நீலி என்கிற மலைசாதி பெண்ணிடம் காதல் கொள்கிறான்,  விஷ காய்ச்சலால் நிலி மரணம் அடைகிறாள் அதன் பிறகு வேணியை கல்யாணம் செய்து கொண்டு வாழ்க்கையை வெல்ல முடியாமல் துவண்டு போய் ஒரு வழியாக முன்னேறுகிறான்.

    கிரிதரன் காடுகளில் எப்படி வாழ்ந்தான், பயந்து நடுங்கிய நாட்கள், பயமே இல்லாமல் கழித்த இரவுகள், குட்டப்பன், ரொசாலம், குருசு, நீலி என்கிற ஆதிவாசிபெண்,  மாமாவின் மனைவி, மாமனின் மகள் வேணி, ரெஜினா, சினேகம்மை, அய்யர் என்கிற என்ஜினியர்யுடன் ஏற்பட்ட நட்பு மற்றும் சிலர்..  இவர்களில் யாராவது ஒருவர் இவனுடன் பயணித்து கொண்டே இருகிறார்கள்.


   ""ராத்திரியில காடு ஒரு பெரிய கொண்டாட்டமா மாறிடும். உண்மையில் ராத்திரிதான் காடு முழிச்சுக்குது. மனுஷங்க போத்திட்டு துங்குறாங்க""


   கிரிதரன் முதல் முறை காட்டில் வழிதவறி சென்றுவிடுகிறான், வழிதவறிய பிறகு அவனிடம் ஏற்படும் பயம் எப்படியாவது அங்கு இருந்து தப்பி வந்துவிட வேண்டும் என்று பதறும் இடம் நம்மையும் சேர்த்தே தோற்றி கொள்கிறது, முதலில் ஏற்பட்ட அந்த பயம் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக விலகி காட்டில் இரவில் தனியாக சுற்றும் அளவுக்கு தேறிவிடுகிறான். முதலில் பன்றி கூட்டதை பார்த்து பயந்தாலும், பிறகு ஒரு இரவில் யானைகளுக்கு நடுவே மாட்டி கொண்டு சாமர்த்தியமாக தப்பித்து கொள்கிறான். காட்டில் தனியா செல்லும் அளவுக்கு தைரியத்தை நீலி மீது ஏற்ப்பட்ட காதலால் தான் என்று சொல்லலாம். இளமையில் இரவில் காட்டில் தனியா சுற்றி அலையும் கிரிதரன் வயதான பின்னால் இருட்டாக இருக்கும் சாலையை கடப்பதற்கு மிகவும் பயந்து நடுங்குகிறான். யாரவது ஒருவர் துணை இல்லாமல் அந்த இடத்தை கடந்து போக முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறான்.


      அம்மா சொன்னாள் என்கிற ஒரே காரணத்திற்காக வேணியை கல்யாணம் செய்துகொள்கிறான். ஆரம்பத்தில் இருந்தே வேணியை வெறுப்பவனாக இருக்கும் கிரிதரன் சொத்துக்காக அவளை கல்யாணம் செய்ததாக மற்றவர்கள் சொல்வதை கேட்டு நிறைய குழப்பம் அடைகிறான், பிறிதொரு நாளில் அவளை கல்யாணம் செய்து கொண்ட பிறகு வேணியே இந்த கேள்வியை அவனிடம் கேட்கிறாள். வேணியை கல்யாணம் செய்துகொண்டாலும் அவளின் அம்மா கிரிதரனை வேறு ஒரு கண்ணோட்டத்தில் பார்க்கிறாள்.    

        
     கிரிதரன் மற்றும் குட்டப்பன் வாயிலாக காட்டை விவரித்து இருக்கிறார் ஜெமோ. முதல் தடவை காட்டில் தொலைந்து போன போது எப்படியாவது அங்கு இருந்து தப்பிக்க வேண்டும் என்று அவன் செய்யும் முயற்சிகளை விவரித்து இருந்த இடம் அருமை.  கிரிதரனுடன் வேலைசெய்யும் குட்டப்பன் வாயிலாக காட்டை பற்றி நிறைய சொல்லி இருக்கிறார். காட்டில் எப்படி வாழவேண்டும் என்று குட்டப்பனை கேட்கலாம் அவ்வளவு விஷயம் உள்ளவனாக காடு பற்றிய எல்லா கேள்விகளுக்கும் பதில் வைத்து இருக்கிறான். இரவில் காடு எப்படி இருக்கும் என்று விவரித்து இருக்கும் இடம் அவ்வளவு அழகு ரொம்பவே ரசிக்கும் படியான இடங்கள் அது. காடு என்றால் கொடிய மிருகங்கள் அதிகமாக இருக்கும் இடம் என்று நினைத்தேன். ஆனால் புத்தகத்தை படித்த வரை அப்படி ஒன்றும் கொடிய மிருகங்கள் இந்த காட்டில் வாழ்ந்ததாக தெரியவில்லை. வாழ்வின் அர்த்தங்களை அய்யர் மூலம் எளிமையாக சொல்லி இருக்கிறார்.


   காடு  பற்றி மட்டும் சொல்லாமல் மிஷனரிகள் செய்யும் மதமாற்று வேலையையும் இங்கே காண முடிகிறது. காட்டில் விஷ காய்ச்சல் வந்து நிறைய உயிர் இழப்புகள் நேரிடும் போது அவர்களுக்கு உதவுவதற்காக கீழே இருக்கும் வேறு ஒரு மிஷனரி மருத்துவமனை வந்து மருந்து வாங்க வருகிறான். இவனின் செயலை பார்த்து நீ மதம் மாறிக்கொள் என்று நேரடியாக கேட்கிறார்.

   இன்று நேற்று என்று நாவல் அங்கும் இங்குமாக மாறி மாறி பயணிக்கிறது உண்மையில் அட்டகாசமான திரைகதை போல உள்ளது அந்த கால மாற்றங்கள் எல்லாம். கதை நடக்கும் இடம் நாகர்கோயில் என்பதால் அந்த ஊரின் பாஷையில் தான் எல்லா கதாபாத்திரங்களும் பேசிகொள்கிறார்கள். இது கொஞ்சம் நெருடலாக இருக்கிறது பத்தியை படிக்கும் போது இருக்கும் வேகம் வசனங்கள் என்று வரும் போது வேகத்தடையை தாண்டும் வண்டியை போல மெதுவாக ஏறி இறங்கி செல்கிறது. ஏழாம் உலகம் படித்தால் கொஞ்சம் தடுமாற்றம் இல்லாமல் பயணிக்க முடிகிறது. 

    ஜெயமோகன் அவர்களுக்கு ஜாதிகள் மேல் ஏன் அவ்வளவு கோபமோ முடிந்த அளவு டாரு டாரா கிழிக்கிறார். உதாரணத்துக்கு "மேனன் சாதியினரில் 10ல் 9பேர் கடைந்தெடுத்த தேவிடியாபயல்கள். அந்த மீதி ஒண்ணு தெய்வம்" - இது எப்படி இருக்கு!!!!  


       இன்னும் நிறைய இருக்கிறது எழுத ஆனால் எல்லாவற்றையும் எழுதினால் நாவல் பற்றிய சுவாரசியம் குறைந்துவிடும். எந்த ஒரு நெருடலும் இல்லாமல் சுகமாக வாசிக்கலாம் அந்த அளவுக்கு அருமையானதொரு நாவல்.

   ஒரு நாவலை படித்து முடிக்கும் போது படிப்பவரின் கண்ணோட்டம் ஒவ்வொரு விதமாக இருக்கும். மேலே இருக்கும் அனைத்தும் காடு படித்து எனக்கு தோன்றியதை  எழுதி உள்ளேன். நாவல் படித்து பாருங்கள் வேறு ஒரு கண்ணோட்டத்தில் நீங்களும் எழுதலாம்.



--
With Love
Romeo ;)

5 comments:

  1. ரோமி இன்னும் டீ வர்ல! :))

    ReplyDelete
  2. நண்பா,
    சரியாக சொன்னீர்கள்,நல்லாவே படித்திருக்கிறீர்கள்,உங்களுக்கும் சாதி பற்றிய குரூர பகடிகள்,கேலிகள் புலப்பட்டதே,

    ReplyDelete
  3. Arumai, arumai.Its a wonderful novel by Jemo. Thanks for sharing.

    ReplyDelete
  4. படிக்கவேண்டும்.. நிறைய இருக்கிறது. நன்றி

    ReplyDelete
  5. கைல இருக்குங்க இன்னும் படிக்கல :-))

    ReplyDelete