Wednesday, February 9, 2011

கனவு



மறுத்து போன ஒவ்வொரு 
கனவும்  
மனம் சொல்லும் ஒவ்வொரு 
சொல்லும் 
மனதில் கவ்வும் ஒவ்வொரு 
பயமும்   
ஏந்தி  கொண்டு
செல்கிறேன் 

இமைகள் முடும் 
அந்த கணநேரம்  
எல்லாம்  

எனக்கே உருவான 
கனவுலகில் 
சென்றுவிடுவேனோ !!!
என்கிற பயம் 
வரும் போது 
எல்லாம் 

குடும்ப நபர்களின் முகங்கள் 
நினைவில் வரும்போது 
எல்லாம் 

எனது கனவுகளை 
பரண் மேல் 
ஏற்றி விடவேண்டியதாக 
இருக்கிறது 
 
- - - - - - - - - - - - - - - - - - - - - -

தூர தெரியும் 
நிலவை பிடிக்க
பறந்து செல்லும் 
பறவையை பார்க்கும் 
போது 
எல்லாம் 

நான் ஒரு 
தவளையாக 
பிறந்து இருக்கலாம் 
என்கிற  எண்ணம் 
வரும்  போது 
எல்லாம்

நினைத்து கொண்டு 
இருக்கிறேன்  
ஏன் இந்த ஈன பிறப்பு என்று 


பார்க்கலாம் நாளை 
எனது கனவுகளை 
புதுபிக்கும் நாள்
வந்தாலும் வரும்
அல்லது 
வராமலும் போகும்


--
With Love
Romeo ;)
  

4 comments: