Friday, February 11, 2011

அள்ளிக்கோ அள்ளிக்கோ கிழக்குல அள்ளிக்கோ

எச்சரிக்கை சென்னைக்கு வெளியவோ அல்லது  இந்தியாவுக்கு  வெளியவோ  புத்தக புழு யாராவது  இந்த பதிவை படித்து வயிறு எறிந்தால் அதற்கு கம்பெனி பொறுப்பாகாது

நேத்து சுரேஷ் கண்ணாவின் கிழக்கு நூல்கள் - மிகக் குறைந்த விலையில் பதிவை படித்ததும் அதில் அவரு சொல்லி இருந்த விலையை பார்த்ததும் மனசு லபோ திபோன்னு குதிக்க ஆரமிச்சிடுச்சு. கொய்யாலா இவ்வளவு சல்லியா கிடச்சா விடுவோமா ??

நைட் ஷிப்ட் முடிஞ்சி விடிய காலை 3.30 மணிக்கு வீட்டுக்கு போய்ப்படுதேன். 8.30 மணிக்கு ஜூனியர் சேட்டை செஞ்சதால தூக்கம் கலைஞ்சது. மகா கிட்ட ஒரு காபி வாங்கி குடிச்சிட்டு கிளம்பினேன். போகும் போதே எங்க போறீங்க என்கிற கேள்வி வருவதற்கு முன்னால்  நானே மகா கிட்ட புக் ஸ்டால்க்கு போறேன்னு சொன்னேன். ஏன் வாங்கி வச்சி இருக்குற புக் எல்லாம் படிச்சி முடிச்சாச்சா என்கிற கேள்விக்கு பதிலாய் பா.ரா நேற்று சொல்லி இருந்த கறை நல்லது எடுத்து விட்டு கிளம்பினேன். மயிலாப்பூர் கடைக்கு போய் பார்த்தேன், நான் தான் முதல் கஸ்டமர் இருந்த புத்தகம் எல்லாம் ஒண்ணு ஒண்ணா கைல எடுத்து எடுத்து பார்த்தேன். முதலில் பிரமிப்பு தான் ஏற்பட்டது. இவ்வளவு சீப்பா பழைய கடைல கூட கிடைக்காதே இவங்க எப்படி போட்டு விக்கிறாங்கன்னு !!!


அள்ளி கொண்டே இருந்தேன் கை வலிச்ச உடனே கல்லா பெட்டியில் இருந்தவர் கிட்ட குடுத்து பில் போட சொல்லிட்டு அடுத்த ரவுண்ட் போயிட்டு வந்தேன். மொத்தம் 23 புத்தகம் Rs.445 தான் ஆச்சு .. நம்பவே முடியல.  மயிலாப்பூர்ல இல்லாத புத்தகம் சிலது தி.நகர்ல இருக்கும்ன்னு கடை சிப்பந்தி சொன்னாரு. சரி சயந்திரம் ஆபீஸ் போகும் போது போலாம்ன்னு கிளம்பிட்டேன். நைட் கடை அடைகிற நேரத்துல நான் போனேன். (காலைல முதல் ஆள் மாலையில் கடைசி ஆள்). உள்ளே போகும் போதே யுவகிருஷ்ணா, அதிஷா, பாஸ்கர் மூணு பெரும் ஆடி தள்ளுபடியில் அண்ணாச்சி கடைல அள்ளினது மாதிரி ஆளுக்கு ரெண்டு பை எடுத்துட்டு வெளிய வந்துட்டு இருக்காங்க. அவங்க கிட்ட ரெண்டு வார்த்தை பேசிட்டு சில புத்தகம் வாங்கலாம்ன்னு எடுத்து வந்து பில் போட குடுத்தேன். அப்பத்தான் தெரிஞ்சது பாக்கெட்ல பைசா இல்ல !!!! ATM சென்டர் கூட பக்கத்துல இல்ல அவர்கிட்ட அந்த புத்தகம் எல்லாம் எடுத்து வையுங்க நாளைக்கு வந்து வாங்கிறேன்னு  சொல்லிட்டு வந்தேன். 


உண்மையில் இங்க வாங்கிய புத்தகம் எல்லாம்  ஒரு லக் தான். 100 ருபாய் குடுத்து வாங்கிய புத்தகம் எல்லாம் 20 ரூபாய்க்கு கிடைக்கும் போது மலைப்பாக இருக்கிறது. ஸ்டாக் தீர்ந்து கொண்டு  இருக்கு. முதலில் மயிலாப்பூர்ல போங்க அங்க தான் நிறைய புத்தகம் இருக்கு. அதுக்கு அப்பறம் தி.நகர் வாங்க அங்க இல்லாத புத்தகம் சிலது இங்க கிடைக்கும். சுஜாதாவின் இரண்டு புத்தகங்களை மயிலாப்பூரில் பார்த்தேன். தி.நகரில் சுஜாதா புத்தகம் எதுவும் கண்ணில் படவில்லை.  

வாங்கிய புத்தகங்கள் 

புவி - (புத்தக  விலை) தவி - (தள்ளுபடி விலை)  

ரெயினிஸ் தெரு - வண்ணநிலவன் - புவி - 70 /  தவி - 20 
வயிறு எரியுதா - டாக்டர். எல். ஆனந்த் -  புவி - 70 /  தவி - 20   
ISI - பா. ரா - புவி - 80 /  தவி - 20
மாயமான் வேட்டை - இ.பா. - புவி - 100 /  தவி - 20  
குணசித்தர்கள் - க.சீ.சிவகுமார் -  புவி - 125 /  தவி - 30
தீவுகள் -  இ.பா. - புவி - 125 /  தவி - 30  
உமர் -   புவி - 150 /  தவி - 30  
அமீனா - தருமி - புவி - 200 /  தவி - 70  
அக்னி - இ.பா. - புவி - 70 /  தவி - 20 
சைக்கிள் முனி - முருகன் - புவி - 60 /  தவி - 15 
கூவாகம் கூத்தாண்டவர் -  புவி - 60 /  தவி - 5 
காலச்சிற்பியின் கைகளில் - புவி - 120 /  தவி - 20 
ராயர் காப்பி கிளப் - முருகன் - புவி - 65 /  தவி - 20 
கால் முளைத்த மனம் - புவி - 60 /  தவி - 10 
என் நிலைக் கண்ணாடியில் உன் முகம் - சொக்கன் - புவி - 60 /  தவி - 10
ஆல்பா - புவி - 50 /  தவி - 10
திபெத் - மருதன் - புவி - 80 /  தவி - 30
இரவுக்கு முன் வருவது மாலை - ஆதவன் - புவி - 120 /  தவி - 20      
டார்ஜிலிங்கில் ஒரு அபாயம் - சத்யஜித்ரே - புவி -  /  தவி - 5 
கோபுரம்தாங்கி - புவி - 60 /  தவி - 10 
மழைருசி - புவி - 60 /  தவி - 10
கரைந்த நிழல்கள் - அசோகமித்திரன் - புவி - 60 /  தவி - ௧௦
பின்கதை சுருக்கம் - பா.ரா - புவி - 50 /  தவி - 10

முந்துங்கள் ஸ்டாக் உள்ளவரை மட்டுமே புத்தகம் சலியான விலையில் கிடைக்கும்.   



--
With Love
Romeo ;)

8 comments:

  1. நான் ஒரு இருநூறு ரூபாய்க்கு வாங்கிட்டேன் திரும்ப போவணும்

    ReplyDelete
  2. @ மதுரை சரவணன்
    பத்ரி கிட்ட தான் பாஸ் கேட்கணும்

    ReplyDelete
  3. Good for you..... Enjoy reading them! :-)

    ReplyDelete
  4. நண்பா
    வீட்ல சொல்லி வாங்கியாச்சு 600 ரூபாய்க்கு சுமார் 30 புத்தகம் வந்ததுன்னு சொன்னாங்க,பெரும்பாலும் நீங்க சொன்னவை வாங்கினார்கள்.

    ReplyDelete
  5. @ Chitra நன்றி

    @ ஞாஞளஙலாழன் நன்றி

    @ கீதப்ப்ரியன்
    புத்தகம் பேரு போட்டு ஒரு பதிவு போடுங்க தலைவரே .

    ReplyDelete