Monday, February 6, 2012

சங்கதிகள் 06/Feb/2012

புத்தகம் 

இந்த முறை வாங்கிய புத்தகங்களை ஒன்றன் பின் ஒன்றாக படிக்காமல் கலந்து கட்டி படித்து கொண்டு இருக்கிறேன். ஒருநாள் நெடுஞ்சாலை என்றால் அடுத்த நாள் சாமியாட்டம் அடுத்த நாள் திரைச்சிலை. இப்படி படிப்பதிலும் ஒரு சுவாரஸ்யம் இருக்கத்தான் செய்கிறது :). படித்த புத்தகங்களை பற்றி விமர்சனம் எழுத வேண்டும்.


படம்
 
நண்பன்  


சத்யன் சான்சே இல்ல படத்தின் ஹீரோவே அவருதான். இப்படி காபி செய்வதற்கு ராஜா, கண்ணன் போன்ற ஆட்கள் இருக்கும் போது ஷங்கர் ஏன் வந்தார் என்று தெரியவில்லை. விஜய் தனது இமேஜ் பார்க்காமல் அடிவாங்கி நடித்ததை தான் நம்ப முடியவில்லை.  ஆல் இஸ் வெல். 


வேட்டை 


அதிஷாவின் விமர்சனத்தில் சமிரா ரெட்டியை ரொம்பவே வாரி இருந்தார். படித்துவிட்டு எனக்கு அவ்வளவு ஆத்திரம் வந்தது.  வாரணம் ஆயிரம் படம் வந்த சமயத்தில் சமிராவை பார்த்து எப்படி ஜொள்ளு விட்டு கொண்டு இருந்தேன் என்று எனக்கு தான் தெரியும். இங்கே சின்ன பிளாஷ்பேக்  எனக்கு  கல்யாணம் ஆனா புதியதில் நானும் மகாவும் பார்த்த முதல் படம் வாரணம் ஆயிரம். மனைவியை பக்கத்தில் வைத்து கொண்டே சமிராவை பார்த்து ஜொள்ளு விட்டு கொண்டு இருந்தேன் என்பது தனி வரலாறு. அப்படி இருந்த சமிராவா இப்படி !!! சத்தியமா பார்க்கவே சகிக்கவில்லை, சரி விடுங்க சொந்த கதையை அப்பறம் பேசலாம் நொந்த கதையை சொல்லுறேன் கேளுங்க. படத்தின் ஆரம்பம் முதல் கடைசி வரை அடுத்து என்ன நடக்கும்ன்னு நான் மனதுக்குள் என்ன நினைத்தேனோ அது அது அப்படியே நடந்தை கண்டு அப்படியே ஆச்சரியப்பட்டேன். செம காமெடி சீன் கிளைமாக்ஸ்ல  மாதவன் சிங்கம் வந்துடுச்சு சொல்லுவாரு அப்போ ஆரியா கொடுக்குற என்ட்ரி சாமி சத்தியமா முடியல, ஆரியா செம கிளாப்ஸ் வாங்கிய இடம் அதுவா தான் இருக்கும். சிரிப்பை தவிர வேறு ஒன்றும் நினைவுக்கு வரவேல்லை. ஆரியாவிற்கு இந்த மாதிரி மாஸ் படம் எல்லாம் ஒத்தே வராது பாஸ்.

திருவொற்றியூர் அப்டேட்ஸ்

திருவொற்றியூர் பஸ் ஸ்டாண்ட் முதல் டோல்கேட் வரை 65 அடி சாலையா மாத்த ரொம்ப நாளா நெடுஞ்சாலைதுறை எடுத்த நடவடிக்கைகள் இப்போ தான் பலன் தர ஆரமிச்சு இருக்கு. எந்த எந்த இடம் இடிக்க போறாங்க அவங்களுக்கு நஷ்டஈடு எல்லாம் கொடுத்த பிறகு டிசம்பர் மாசம் இடிக்க போன நேரத்துல வியாபாரிகள் சங்கம் எங்க தொகுதி சட்டமன்ற உறுப்பினர் குப்பனிடம் முறையிட்டு அவங்க இடிச்சா எல்லாமே போயிடும் மார்க் மட்டும் பண்ணி தர சொல்லுங்க நாங்களே இடிச்சிகிறோம்ணு சொன்னங்க. அவரும் அதிகாரிகள் கிட்ட பேசி ஒரு மாசம் டைம் வாங்கி கொடுத்தாரு. சிலர் அதை முறையா செஞ்சாங்க கட்டிடம் முழுவதுமாக இடிக்க வேண்டியவங்க அதை கண்டுக்கவே இல்லை. பிரச்சனை இங்க தான் கிளம்புச்சு, டைம் கொடுத்து ஒரு மாசத்துக்கு மேல ஆகியும் நிறைய கட்டிடங்கள் அப்படியே இருக்கிறதை பார்த்து இனியும் இவங்களுக்கு டைம் கொடுக்க முடியாதுன்னு எந்த ஒரு முன்னறிவிப்பு செய்யாமல் ஒரு நாள் எல்லாத்தையும் இடிச்சி தரைமட்டம் ஆகிட்டாங்க.விஷயம் என்னவென்று தெரியாமல் அவங்க எதுவும் சொல்லாமலே வந்து இடிச்சிடாங்கன்னு சொல்லுறது எல்லாம் சரியில்ல.  டிராபிக் அதிகமா இருந்த நிலைமை போயி இப்போ தூசி அதிகமா இருக்கு.


ரேஷன் கார்டில் இருந்து என்னோட பெயரை நீக்க வேண்டி திருவொற்றியூரில் இருக்கும் உணவு பொருள் வழங்கல் துறையிடம் ஒரு விண்ணப்பம் கொடுக்க போனேன். ஒரு மணி நேரமா வருசையில் நின்று அவங்க கிட்ட என்னோட விண்ணப்பத்தில் கொடுக்குறேன் முணு மாசத்துக்கு எதுவும் பண்ண முடியாது மார்ச் மாசம் முடிஞ்சா பொறவு வாங்கன்னு திருப்பி அனுப்பிட்டாங்க. கல்யாணம் ஆகி முணு வருஷமா பண்ணாததை இப்போ பண்ண போனா  இப்படி ஆகிடுச்சு :(.



கொஞ்ச நாட்களாக ஏரியாவில் I.P யேசுதாஸ் என்பவரின் திருமுகத்தை தாங்கிய போஸ்டர்கள் எங்கெங்கு காணினும் நமது கண்களில்  தென்படுகிறது. அஃப்ரோ குழுமம் அஃப்ரோ அறக்கட்டளையின் தலைவர்   தனது தந்தையின் முதலாம் ஆண்டு காரியத்துக்கு அன்னதானம் செய்வதாக புறநகர் முழுவதும் போஸ்டர் அடித்து ஓட்டியுள்ளார். அப்பாவின் திதிக்கு இப்படி போஸ்டர் அடித்து அன்னதானம் செய்பவர் இவராக தான் இருக்கும். அந்த போஸ்டரில் அவர் முகம் தான் பிரதானமாக இடம் பெற்று இருக்கிறது. அன்னதானம் நடை பெற காரணமான அவரின் தந்தை  பாஸ்போர்ட் சைஸில் புகைபடத்தில் போஸ் தருகிறார். 

இதே போல நகரில் புதுசு புதுசாக , தினுசு தினுசா போஸ்டர்களில் டெர்ரர் லுக் கொடுத்து நம்மை திகிலடையவும் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். நாற்பதாவது வயதில் காலடி எடுத்து வைப்பவருக்கு ஐம்பதை நெருங்கி  கொண்டு இருக்கும் இளைஞர் ஒருவர் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறார். இதில் ஆவியை எழுப்புவோம் , துதி பாடுவோம், துண்டை போடுவோம் என்று சில மலை விழுங்கி மகாதேவங்கள் ஜீசஸை வைத்து கொண்டு வியாபாரம் செய்கிறார்கள். 



விழிப்புணர்வு


ரொம்ப நாளைக்கு முன்னாடி மாலதீவ்ஸ் நாட்டில் கடலுக்கு அடியில் பாராளுமன்றம் கூட்டத்தை நடத்தி உலகத்தையே திரும்பி பார்க்க வைத்தார்களே நியாபகம் இருக்கிறதா. அதன் பின்னணி என்ன என்பதை விளக்கும் டாக்குமெண்டரி   படம்  The Island President .. 






--
With Love
அருண் மொழித்தேவன் (Romeo) ;)

No comments:

Post a Comment