Monday, March 12, 2012

தலைகீழ் மனிதர்கள்

கரூர் பிளான்  பண்ணும் போதே மகாவின் சின்ன சித்தப்பா கிடா வெட்டுக்கு போகுற மாதிரி தான்  பிளான் பண்ணினா. அதுமில்லாம அது அவளோட  முன்னாள் குலதெய்வ கோயில். கல்யாணமான பிறகு கணவனின் குலதெய்வம் தான் மனைவிக்கும் என்பது யாரோ எங்கோ எப்படியோ சொல்லியதை இன்றும் என்றும் எப்போதும் நடைமுறைப்படுத்தம் இந்து மதத்தில் பிறந்ததால் மகாவின் குல தெய்வம் முன்று வருடங்களுக்கு முன்னர் மணலூரில் இருந்து கோயம்புத்தூருக்கு மாறிட்டாங்க. இங்கே ஒரு விஷயத்தை சொல்லியே ஆகணும், என்னோட தங்கச்சியை கல்யாணம் பண்ணி கொடுத்தது கரூர் தான். கல்யாணம் நடந்தது கோயம்புத்தூர்ல. மாப்பிள்ளை வீட்டில் பொண்ணை விட்டுட்டு வர நானும் என்னோட சித்தப்பா பையனும் கூட போயிருந்தோம். சுமோல கடைசி இடத்தை எங்களுக்கு தந்தாங்க, எனக்கு முன்னாடி தங்கச்சி, மச்சான், எங்க அண்ணி, சித்தி எல்லாம் இருந்தாங்க. அண்ணி தங்கச்சி கிட்ட உன் விட்டுக்காரர் குலதெய்வம் எங்க இருக்குன்னு கேக்க சொன்னங்க. தங்கச்சி என்ன பண்ணினா தெரியுமா, ஏங்க நம்ம குலதெய்வ கோயில்  எங்க இருக்குன்னு மச்சான் கிட்ட கேட்டா. ஒரு நிமிஷம் அப்படியே ஷாக் ஆகிச்சு எனக்கு, கல்யாணம் ஆகி ஒரு நாள் கூட ஆகால இத்தனை நாளா கோயம்புத்தூரில் இருந்த அவ குலதெய்வம் இப்படி தடாலடியா  கரூர்க்கு இடம் மாறிடுச்சே. என்னை விட அண்ணியும் சித்தியும் தான் ரொம்ப ஷாக் ஆனாங்க.

கரூரில் இருந்து மணலூர் 35கிலோமீட்டர் இருக்கும். கரூரில் இருந்து கோயம்புத்தூர் பைபாஸ் ரோடுல போனா சின்னதாராபுரம் போக லெப்ட் சைடுல ஒரு ரோடு பிரியும். அதுல அப்படியே 25கிலோமீட்டர் போனா சின்னதாராபுரம். லெப்ட் சைடுல ரோடு பிரியும்னு சொன்னேன்ல அந்த இடத்தில இருந்து சின்னதாராபுரம் போகுறவரைக்கும் ஒரு பெட்ரோல் பங்க் இருக்காது. போற வழி எல்லாம் பொட்டல்  காடு.  சின்னதாராபுரத்தில் இருந்து மணலூர் போக சுத்தி சுத்தி, வழியில் வரும் ஆட்களிடம் மணலூர் எப்படி போகணும்,, இப்படியா அப்படியான்னு கேட்டே ஆகணும், அந்த அளவுக்கு அது ஒரு போர்டே இல்லாத  குக்கிராமம். நான் அந்த கோவிலில் இருந்த வரை ஒரே ஒரு மினி பஸ் தான் காலைல இருந்து சாயந்திரம் வரைக்கும் சின்னதாராபுரத்தில் இருந்து  வந்துட்டு போச்சு. கிடா வெட்டி வகுறு நெம்ப கறியும் சோறும் சாப்பிட்டு சாயந்திரம் முணு மணிக்கா கரூர் கிளம்பினோம். வண்டியை 80ல விரட்டிடே வந்தேன் கரூர் 19 கிலோமீட்டர்ன்னு ஒரு போர்டு பார்த்தேன் அங்கேயே வண்டி ஆப் ஆகிடுச்சு. வண்டியில பெட்ரோல் இல்ல வரும் போதுதான் பெட்ரோல் போட்டுட்டு வந்தோம் அதுக்குள்ள தீர்ந்து போச்சே. இன்னும்  போக வேண்டிய தூரம் எவ்வளவோ இருக்கு சுத்தி முத்தி ஒரு பெட்ரோல் பங்க்  இல்ல மகாவும் ஜூனியரும் கூட இருக்காங்க எப்படி வீடு போயி சேரபோறோம்ன்னு கவலை வந்துடுச்சு. இறக்கத்துல வண்டி வந்ததால  கொஞ்ச தூரம் முன்னாடி இழுத்துட்டு போயிடுச்சு. வலது பக்கம் ரெண்டு பேரு இருந்தாங்க அவங்க கிட்ட வண்டியை நிறுத்தி பெட்ரோல் பங்க்  பத்தி கேட்டுட்டு இருந்தேன், லோக்கல்ல பெட்ரோல் விக்கிற கடை இருக்கு அதுக்கு ஒரு கிலோமீட்டர் போகணும்ன்னு சொன்னங்க. எனக்கு என்ன செய்யுறதுன்னு தெரியல, தெரியாத இடம் எப்படி இவங்க ரெண்டு பேரையும் விட்டுட்டு போகுறதுன்னு தயக்கமா இருந்துச்சு. நான் நின்னுட்டு இருந்ததை பார்த்து ஒரு வயசானவர் வந்தாரு, என்ன விஷயம்ன்னு அவர் கேக்க நான் பெட்ரோல் தீர்ந்து போனதை பத்தி சொல்லிட்டு இருந்தேன். நாங்க முன்னாடி பேசிட்டு இருந்தோம்ல அவர்கிட்ட இவர் போயி பெட்ரோல் வாங்கி கொடுடா முருகா நம்ம ஊருல ஒருத்தர் வந்து உதவி கேக்குறாரு இதை கூட செய்ய மாட்டியான்னு கேக்க அவரும் காசு கொடுங்க வாங்கிட்டு வரன்னு சொன்னாரு.  அவர் கிட்ட காசு கொடுத்துட்டு இந்த பெரியவர் கிட்ட பேசிட்டு இருந்தேன். எங்களை பக்கத்தில் இருந்த ஒரு இடத்தில உட்கார சொல்லி அங்க இருந்தவங்களை இடம் தர சொன்னார். அவர் என்ன சொன்னாரோ அதை அங்க இருந்தவங்க செஞ்சாங்க. அவர் ஒன்றும் பெரிய ஆள் இல்லை என்பதை பார்த்த உடனே தெரிந்து கொள்ளலாம். அந்த மனிதர்கள் வெளியூர் ஆளுக்கு உதவி செய்யவேண்டும் என்கிற எண்ணத்தில் இருந்ததால் அவர் சொன்னதை செய்தார்கள். பெட்ரோல் வரும் வரை அந்த பெரியவரிடம் பேசிக்கொண்டு இருந்தேன். என்னை பற்றி அதிகம் கேள்விகளை கேட்டு கொண்டு இருந்தார். கடைசி வரைக்கும் அந்த ஊர் பெயர் என்ன அவர் பெயர் என்ன என்று நான் கேட்கவே இல்லை. கொஞ்ச நேரத்தில் பெட்ரோல் வர அவர்களிடம் நன்றி சொல்லிட்டு கிளம்பினோம். வரும் வழி எங்கும் சிந்தித்து கொண்டே வந்தேன். இதுவே சென்னையா இருந்தா ஒரு பக்கியும் பக்கத்துல வந்து என்ன எதுன்னு கேட்க மாட்டாங்க. 

இந்த சம்பவம் நடந்த அடுத்த நாள் சென்னை ரிடர்ன், எப்பயும் 9 அல்லது 10 ஆவது பிளாட்பாரத்தில் வந்து நிற்கும் மங்களூர் எக்ஸ்பிரஸ் வண்டி அண்ணைக்கு 6வது பிளாட்பாரத்துல வந்து நின்னுச்சு. இதுல ஒரு சவுகரியம் எஸ்கலேட்டர் இருப்பது, ஊரில் இருந்து எடுத்துட்டு வந்த லகேஜ் தூக்கிட்டு படி வழியா ஏற வேண்டிய நிர்பந்தம் இருக்காதேன்னு ஒரு சந்தோசம் வந்துடுச்சு. எஸ்கலேட்டர் பக்கம் போன போது மகாவை தேடினேன் மெதுவா அவ ஜூனியரை தூக்கிட்டு வந்துட்டு இருந்தா. அவங்களுக்காக வெயிட் பண்ண நின்னுட்டு இருந்த சமயம் ஒரு முஸ்லிம் குடும்பம் எஸ்கலேட்டர்ல  ஏற போச்சு, ஒரு ஆண், அவர் மனைவி அப்பறம் அவரோட அம்மா. முதலில் அவர் முன்னாடி ஏறிட்டு போயிட்டாரு அடுத்தது அவர் மனைவி, கடைசியா அங்க பெரியம்மா ரொம்ப தயக்கத்துடன் ஏற போனாங்க அவங்களுக்கு எப்படி அதுல போகணும்ன்னு தெரியாம படிக்கட்டில் தவறி விழுந்துட்டாங்க. அந்த இடத்தில நான் அப்பறம் ஒரு போர்டர்  மட்டுமே இருந்தோம், நான் போட்ட சத்தத்தில் யாரோ ஒரு புண்ணியவான் எமெர்ஜென்சி ஸ்டாப் பட்டன் அழுத்தி எஸ்கலேட்டர் நிறுத்திட்டாரு.   என்கிட்ட இருந்த லகேஜ் எங்கே போட்டேன்னு தெரியாம முன்னாடி ஓடி போயி அந்த அம்மாவை தூக்க முயற்சி செஞ்சேன் அவங்க இருந்த வெயிட்டுக்கு என்னால தூக்க முடியல பின்னாடியே அந்த போர்ட்டர் வந்து உதவி செஞ்சாரு அவராலையும் முடியால பின்னாடி திரும்பி பார்த்தேன் இருபது பேருக்கு மேல வேடிக்கை பார்த்துட்டு இருந்தாங்க. யாராவது ஒருத்தர் வாங்க சார்ன்னு குரல் கொடுத்தேன் ஒரு பொறம்போக்கு தாயோளியும் வரல. அந்த அம்மா மகன் மேல இருந்து இறங்கி வந்து கை கொடுக்க கஷ்டப்பட்டு தூக்கி நிறுத்தினோம். பாவம் அந்த அம்மா அழுதுட்டே இருந்தாங்க, அவங்களால படி ஏறி நடக்க முடியாது எஸ்கலேட்டர் ஆன் பண்ணுக நான் அழைச்சிட்டு போறேன்னு அவர் சொன்னாரு. ஆனா அதுக்கு எலக்ட்ரிசியன் வரணும் இப்போ ஏதும் முடியாதுன்னு போர்டர் சொல்ல நானும் கிழே இறங்கி வந்தேன். அங்க இருந்த கும்பல்ல ஒருத்தன் சொன்னான் ச்சே இப்படி பாதிலயே நின்னுடுச்சே, வந்த ஆத்திரத்துக்கு அவன் செவில்ல அறையணும்ன்னு தான் தோணுச்சு. இத்தனைக்கும் அவன் கையில ஒரு ட்ராலி முதுகுல லேப்டாப் பேக். 

இந்த மாதிரி சுயநலவாதிகள் மத்தியில் வாழ்வது எவ்வளவு அருவெறுப்பை தருகிறது என்று அடிக்கடி கண்கூடாக பார்த்து கொண்டு இருக்கிறேன்.  கண் முன்னால் நடக்கும் ஒரு விபத்தில் கூட உதவி செய்ய முடியாத மேல் தட்டு ராசாக்களை  விட அன்பையும் அரவணைப்பையும் வாரி வழங்கும் கிராமத்துக்கு எளிய மனிதர்கள் எப்போதும் என் மனதில் உயர்ந்தே இருக்கிறார்கள். 


--
With Love
அருண்மொழித்தேவன் (Romeo) ;)



4 comments:

  1. Exactly right..... Nalla pathivu

    ReplyDelete
  2. அருமை நண்பா!

    இந்தக் கொடுமையத்தான் நாம் திருப்பித்திருப்பி அனுபவிக்க வேண்டியிருக்கிறது ந(ர)கரத்தில்...

    ReplyDelete
  3. kodumai... antha sellandi amman than makkala kappathanum....

    ReplyDelete