Friday, June 17, 2011

சொகுசின் முடிவு ..



இரவின் மடியில் ஆழ்ந்த உறக்கம் 
எறும்பு கூட தொல்லைதாரது என்கிற வாசகம்
உள்ளே குளுகுளு காற்று 
இலவசமாக தலையணை போர்வை 
கதவுகள் எல்லாம் பூட்டப்பட்டு இருக்கிறது 
கவிழ்ந்து விட்டதால் பற்றி எரிகிறது
உள்ளே உள்ளவர்கள் கதறல் காதை கிழிகிறது 
உற்று சென்று பார்க்க முடியாத அளவு 
வெப்பம் வெள்ளமாய் வெளியேறுகிறது 
அடிதொண்டையில் இருந்து பீறிட்டு 
பெற்றோரை அழைக்கும் குரல் கேட்கிறது 
உள்ளே செல்ல வழியில்லை 
உயிரை காப்பாற்ற வழியில்லை 
மாண்டது இருபத்திஒன்று  
பிழைத்தது இரண்டு 
அது இன்று 
நாளை எவ்வளவோ !!!!!






--
With Love
அருண் மொழித்தேவன்  (Romeo) ;)





 
 

No comments:

Post a Comment