Monday, September 26, 2011

சங்கதிகள் செப் 26/11

எங்கேயும் எப்போதும் 


அடுத்த நாள் கரூரில் எனக்கு கல்யாணம், முந்தய நாள் தங்கை வீட்டில் உறவினர்களுடன் இருக்கிறேன். மதியம் காஞ்சிபுரத்தில் இருந்து தம்பி வந்திருந்தான், ஐந்து மணிநேரத்தில் காஞ்சிபுரத்தில் இருந்து கரூர் வந்ததாகவும் விழுப்புரத்தில் இருந்து திருச்சி ரோடு நன்றாக இருந்ததால் ஒண்ணரை மணி நேரத்தில் வந்ததாக சொன்னான். மகா மாசமா கரூரில் அவ அம்மா வீட்டுல இருந்த சமயம் பார்க்கணும் தோணுச்சினா உடனே கிளம்பிவிடுவேன், திருச்சிக்கு போகும்  பிரைவேட் பஸ்ல தான் போவேன்,  ஏறும் போதே  ஐந்தரை மணி நேரத்தில் திருச்சின்னு சவுண்ட் விடுவாங்க செம பாஸ்டா போகும் அந்த வேகம் எனக்கு ரொம்ப பிடிக்கும். 

ஏதாவது ஒரு பிசினஸ் பண்ணனும்ன்னு  யாராவது கேட்டா போதும் கார் வாங்கி ட்ரவல்ஸ் ஓட்ட சொல்லுவேன், என்கிட்ட பணம் இல்ல இருந்தா ஒரு குவாலிஸ் வாங்கி ரெண்டு நாளைக்கு ஒரு தடவை சென்னை டு திருச்சி, திருச்சி டு சென்னை போக நாலு மணிநேரம் வர நாலு மணிநேரம் ஒரே நாளில் போயிட்டு வந்தா போதும்  ரெண்டாயிரம் ருபாய் கைல இருக்கும்ன்னு சொல்லுவேன் .




 
ரெண்டு நாளைக்கு முன்னால இந்த படத்தை பார்த்தத்துல  இருந்து இந்த கனவுகளை எல்லாம் ஏறக்கட்டி வச்சிட்டேன். வேகமா போயி என்ன பண்ண போறோம்??   தினமும் செய்தி தாள்களில் படிக்கும் விபத்து பற்றி ஒரு நிமிடத்தில் கடந்து சென்று விடுகிறோம்.  அதன் பாதிப்பை அருகில் இருந்து பார்த்தால் தானே நமக்கு அதன் குருரமான உண்மை நிலை தெரியும்,  கடைசி பதினைந்து நிமிடங்கள் அதை கண்முன் காட்டி விடுகிறார் டைரக்டர் சரவணன். ஜெய் அஞ்சலி காதலை அவ்வளவு அழகா சொல்லிட்டு கடைசில ஜெய்யை சாகடிச்சதை தான் ஏத்துக்க முடியல. ஒரு ஜோடி பிரிய ஒரு ஜோடி சேர்கிறது, எங்கேயும் எப்போதும் எதுவும் நடக்கும்.


படத்தை பற்றி இதுவரை நிறைய விமர்சனம் வந்துடுச்சு நான் ஏதும் புதுசா எழுத போறது இல்ல என்பதால் இத்துடன் நிறுத்திக்கிறேன்.

படம் பாருங்க நல்லா இருக்கு - ப்ளீஸ் வேகம் வேண்டாம் . 


மங்காத்தா

எதிர்பார்த்த  மாதிரி தல கலக்கி இருக்காரு. இவ்வளவு பெரிய ஒபெனிங் இருக்கும்ன்னு நினைச்சி இருப்பார்களான்னு தெரியல, ஒருவேளை சன் வெளியிடு என்பதால் கூட இருக்கலாம்.




The Dark  Knight - 2008ல் வந்த ஹாலிவுட் படம். சக்கை போடு போட்ட படம். இந்த படத்துல வில்லனாக ஜோக்கர் என்கிற கதாபாத்திரத்தில் Heath Ledger செமயா நடிச்சி இருப்பாரு.  படத்துல முதலில் வரும் பேங்க் கொள்ளையில் ஈடுபடும் கொள்ளையர்களில் ஒருவர் வேலை முடிந்தவுடன் அடுத்தவன் அவனை கொன்று விடுவான். ஷேர் பிரிப்பதில் ஏற்படும் நஷ்டத்தை சரிகட்டவே இப்படி நடக்கும். கடைசியில் ஜோக்கர் மட்டுமே அத்தனை பணத்தையும் கொள்ளை அடித்துவிட்டு செல்வான். அதே போல வேற சில சீன் உருவி தமிழ் சினிமாக்கு ஏத்த மாதிரி உல்டா பண்ணி சூப்பர் ஹிட் கொடுத்து இருக்காங்க. தமிழ் சினிமால ஹீரோ என்றாலே நல்லவன் என்கிற நீதியை உடைத்துகாக வெங்கட் பிரபுவை வாழ்த்தலாம். ஆனா இவ்வளவு மொக்கையாக ஒரு கொள்ளை சீன் பார்த்ததே இல்ல வெங்கட் பிரபு.




கொடுமை

போன வாரம் அம்மா கோயம்புத்தூர் போனாங்க, அவங்களை சேரன் எக்ஸ்பிரஸ்ல போனாங்க, லேடீஸ் கம்பார்ட்மென்ட்ல அவங்களை ஏத்தி விடும் போது அதுல இருந்த டாய்லேட்ல ரெண்டு ஆளுங்க  ஏறினாங்க. லகேஜ் எடுத்துட்டு அம்மா உள்ள போகும் போது கதவு கிட்ட நான் நின்னேன் ஒரே சரக்கு வாசனை. உள்ளே போயி தண்ணி அடிக்கிறாங்க போலன்னு நினைச்சிட்டு இருந்தேன், அம்மா உள்ளே போனவங்க பயந்துட்டு பேக் மட்டும் சீட்ல வச்சிட்டு வெளியே வந்து நின்னுட்டு இருந்தாங்க. சரி எனக்கு ஆபீஸ்க்கு டைம் ஆச்சு கிளம்புறேன் போற வழியில ரயில்வே போலீஸ் கிட்ட சொல்லிட்டு போறேன்னு சொல்லிட்டு போனேன்.  வேண்டாம்ன்னு தடுத்தவங்க கிட்ட தைரியம் சொல்லிட்டு போற வழியில் இருந்த ஒரு போலீஸ்காரர் கிட்ட சொன்னேன். நீங்களும் கூட வாங்கன்னு அவரு சொன்னாரு எனக்கு ஆபீஸ்க்கு டைம் ஆச்சு சார்  நான் கிளம்பனும் நீங்க அங்க போயி பாருங்க ரெண்டு பேரு ரொம்ப நேரமா லேடீஸ் கம்பர்த்மென்ட் உள்ள இருக்காங்கன்னு சொல்லுறேன் அது எல்லாம் முடியாது, சார்ஜ் ஷீட் போடுற வரைக்கும் நீ கண்டிப்பா இருக்கனும்ன்னு  சொல்லி குண்டை தூக்கி போட்டாரு. நீ பாட்டுக்கு சும்மா சொல்லிட்டு போயிடுவ நாங்க அலையுணுமான்னு ஒரு கேள்வி வேற கேட்டாரு, என்னால வரமுடியாது சார் நீங்களும் போயி பார்காதீங்கன்னு சொன்னேன். அது எல்லாம் முடியாது நீ சொல்லிட்ட நான் கண்டிப்பா போயி பார்க்கணும் வா என் கூடன்னு இழுக்காத குறையா கூட்டிட்டு போனாரு. இது என்னடா வம்பா போச்சு ஒழுங்கா   மூடிட்டு கிளம்பி இருந்தா இந்நேரம் பார்க் ஸ்டேஷன்ல இருந்து ட்ரெயின் ஏறி இருக்கலாம்ன்னு அவரு பின்னாடியே போனேன்.  டாய்லேட்  உள்ள ஒருத்தர் செம மப்பு அவருக்கு போதை தெளியவைக்க ஒருத்தர் தண்ணி எடுத்து முகத்தை கழுவிட்டு இருக்காரு. அவங்க பேமிலி ஆளுங்க வெளிய இருந்தாங்க, போலீஸ்காரரும் அவங்களை வெளிய போக சொல்லிட்டு கிளம்பிட்டாரு. இனி கண்டிப்பா எந்த போலீஸ்காரன் கிட்டயும் புகார் சொல்லவே கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன்.

 



புல்லட் பயணம்

கோவையில் ஒரு இடம் வாங்க வேண்டும் என்று ரொம்ப நாள் ஆசை, அதுக்கு ஏத்த மாதிரி ரெண்டு முன்று சைட் கொஞ்சம் சீப்பா இருக்கு வாங்க பார்க்கலாம்ன்னு சொந்தகாரங்க ஒருத்தங்க சொன்னங்க. மேட்டுப்பாளையம் பக்கத்துல இருந்தது அந்த இடம். கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் வரைக்கும் புல்லட்ல தனியே பயணம். இந்த புல்லட் எங்க சித்தப்பாவோட வாகனம், பழைய பெட்ரோல் இஞ்சின் லெப்ட் சைடுல கியர், ரைட் சைடுல பிரேக். கொஞ்சம் ஏமாந்தாலும் பிரேக்ன்னு நினைச்சு கியரை மேதி மேதின்னு மேதிச்சு வண்டி நிக்கலையேன்னு பயத்தை ஏற்படுத்திடும். டாப் கியரில் கூட ரொம்ப மெதுவா வண்டியை ஓட்டிட்டு போகலாம். பெரியநாயகம்பாளையத்தில்  இருந்து சாய்பாபா காலனி செல்லும் வரை ரோடு ரொம்ப மோசமா இருக்கு, மத்த வண்டி எல்லாம் கியர் மாத்தி மாத்தி போயிட்டு இருக்கும் போது டாப் கியர்ல மெதுவா போயிட்டு இருந்தேன். அடுத்த தடவை போன பொள்ளாச்சி  பக்கம் ஒரு ரவுண்ட் போயிட்டு வரணும் .

இடிகரை பக்கத்துல குறைஞ்ச விலையில் முன்று சென்ட் வாங்கி போட்டு இருக்கேன், சென்ட் ஒன்னரை லட்சம் தான். வீடுகள் எல்லாம் பக்கத்துலையே இருக்கு என்பதால் அந்த ஏரியா டெவலப் ஆகா ரொம்ப நாள் எல்லாம் பிடிக்காது. இந்த ரேட்க்கு கோவைல வேற எங்கேயும் இடம் வாங்க முடியாது. யாருக்காவது கோவைல இடம் வாங்க வேண்டும் என்றால் சொல்லுங்க நான் வாங்கின சைட்க்கு பக்கத்துலையே இன்னும் சில சைட் இருக்கு. 















கோவை பத்தி ஒரு நீளமான பதிவு எழுதணும். கொஞ்சம் கொஞ்சம் நினைவுகளை திரட்டி குறிப்பு எடுத்துட்டு இருக்கேன். சாதாரணமா நான் பார்த்த கோவை இதுன்னு எழுத மனசு வரல. ஆறு  வருஷத்துக்கு முன்னாள் நான் வாழ்ந்த கோவையை காட்டிலும் இப்போ நிறைய மாற்றம். முன்று பகுதிகளா எழுதணும்.







புதிர் 

நாளைய இயக்குனர் தற்போதைய சீசனில் ஒளிபரப்பு செய்யப்பட்ட குறும்படம். திரைகதை யுத்தியை அழகாக கையாண்டு இருக்கிறார். ஒரு தடவைக்கு இரண்டு தடவை பார்த்தால் தான் புரிகிறது.










 நோ கமண்ட்ஸ் 

போட்டோவை பாருங்க சிரிங்க :)))

 






--
With Love
அருண் மொழித்தேவன் (Romeo) ;)


3 comments:

  1. // ஒரு ஜோடி பிரிய ஒரு ஜோடி சேர்கிறது, எங்கேயும் எப்போதும் எதுவும் நடக்கும். //

    ஓ படத்தோட கதை இதுதானா... நீங்களாவது சொன்னீங்களே...

    அந்த போட்டோவை இன்னும் சிலர் சுட்டு பஸ்ஸிலும் ஃபேஸ்புக்கிலும் பகிர்ந்திருந்தார்கள்...

    ReplyDelete
  2. யாரு அது பிரபாகர் .. லிங்க் குடுங்க பார்க்கிறேன் .

    ReplyDelete
  3. அது நடந்து ரெண்டு நாளாச்சு... முடிஞ்சா தேடிப் பார்த்து அனுப்புறேன்...

    ReplyDelete