Thursday, October 21, 2010

பயன், பட்டாசு, புன்னகை

1.
எழுதுவது எல்லாம் எழுத்து அல்ல 
ஆனால் எழுதி கொண்டு இருப்பது தான் சுகம் 
எழுதுவது சுகம் தான் 
ஆனால் எழுதுவதால் என்ன பயன் 
உண்மைதான் 
எது 
என்ன பயன் என்பதில் 


2.
நீ மழையில் நனைவது நல்லது தான் என்றேன்  
ஏன் என்றாள்  
மழையும் கொஞ்சம் புண்ணியம் தேடிக்கொள்ளுமே 
இதற்கும் புன்னகைத்தாள்
 
3.
பட்டாசு தீர்ந்தது 
மத்தாப்பு மறைந்தது 
புஸ்வானம் பொரிந்தது 
ராக்கெட் பறந்தது 
அப்பறம் 
அவ்வளவு தான் பக்கத்துக்கு 
வீட்டுல வெடிச்சாங்க என்றான் மகன் 
அப்படியா என்றான் 
போனஸ் வாங்காதவன். 
 


--
With Love
Romeo ;)

6 comments: